search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறையில் கைதிகள் மரணம் நிகழாமல் பார்த்து காெள்ள வேண்டும் போலீசாருக்கு கமிஷனர் அறிவுறுத்தல்
    X

    போலீசாருடன் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு ஆலோசனை நடத்திய காட்சி. 

    சிறையில் கைதிகள் மரணம் நிகழாமல் பார்த்து காெள்ள வேண்டும் போலீசாருக்கு கமிஷனர் அறிவுறுத்தல்

    • திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன.
    • குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரப்பகுதியில்உள்ள போலீஸ் நிலையங்களில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன. இதில் அனுப்பர்பாளையம், கொங்கு நகர், கே.வி.ஆர். நகர், நல்லூர் என 4 சரகமாக பிரிக்கப்பட்டு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளி மாநில,மாவட்ட மக்கள் அதிகம் தங்கி பணியாற்றும்திருப்பூர் மாவட்டத்தில்கொலை, கொள்ளை,ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள்அடிக்கடி நடைபெறுகிறது.

    இந்நிலையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, அனுப்பர்பாளையம்,வடக்கு, தெற்கு, நல்லூர்போலீஸ் நிலையங்களில் திடீரென ஆய்வுமேற்கொண்டார். அப்போது அங்கிருந்தபொதுமக்களிடம் தங்கள்கோரிக்கைகள் குறித்துகேட்டறிந்தார். மேலும், போலீசாரிடம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அேதபோல் நீண்ட நேரம்போலீஸ் நிலையங்களில் யாரையும் உக்கார வைக்காமல் ெபாதுமக்களின் குறைகளை கேட்க வேண்டும். குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். லாக்கப் மரணம் நிகழாமல் பார்த்துக்ெகாள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.

    Next Story
    ×