search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastics"

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பேரூராட்சி இணைந்து உதவி பொறியாளர் உஷாராணி தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை மற்றும் ஜவுளி உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் என 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    இதற்காக ரூ.3 ஆயிரத்து 600 வரை அபராதம் விதித்தனர். அனைத்து வியாபாரிகளுக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்து வோருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • கடை உரிமையாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • கடைகளில் இருந்து 75 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளா்கள் செல்வம், ஆறுமுகம், பி.செல்வம், சிவகுமாா், ராஜ்மோகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

    இதில் மத்திய பேருந்து நிலையம், பழனி பாதை, கல்பனா சாலை ஆகியவற்றில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளா்கள், பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடைகளில் இருந்து 75 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடை உரிமையாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள கிடங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்த கிடங்கில் சோதனை நடத்திய அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனா்.

    • கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

    நாமக்கல், ஆக.1-

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாளை யும், நாளை மறுநாளும் வல்வில் ஓரிவிழா அரசின் சார்பில் நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவை ஒட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன.

    கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்.

    இந்த ஆய்வின்போது வாகனங்களில் கொண்டு வரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்கா ரணம் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம்.

    சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மட்டும் சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்ப டுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். எனவே கடைக்காரர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

    கொல்லிமலையில் கடத்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும்  அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் கொல்லிமலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தாரமங்கலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கையால் பறிமுதல் செய்தனர்.
    • அந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 6500 விதித்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி பகுதியில் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளதாக தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் முஸ்தபா நகராட்சி பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டார்.

    அப்போது அண்ணாசிலை , பேருந்து நிலையம், தேர் நிலையம் ஓமலூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் சோதனையிட்டதில் மளிகை கடை, ஓட்டல், டீ க்கடை .வணிக வளாகம் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 6500 விதித்தனர்.

    மேலும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி நகராட்சி ஆணையாளர் முஸ்தபா கூறுகையில்,

    நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

    தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடைபெறும். தொடர்ந்து பயன்படுத்தும் கடைகளை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளதால் வியாபாரிகளும் , பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரணியை ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
    • மாணவ- மாணவிகள் பிளாஸ்டிக் தீமை குறித்த பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குருவன்கோட்டை இந்து தொடக்கப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தீமை குறித்த பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாக சென்றனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகராஜ், பார்த்தசாரதி, ஊராட்சி தலைவர் பால் தாய், துணைத் தலைவர் கண்ணன் உள்பட பலர் இப்பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    ×