search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "materials"

    • தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் குளியல் சோப், சலவை சோப், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், தலைக்கு எண்ணெய், நாப்கின் அடங்கிய 'ஹெல்த் கிட்' எனப்படும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், தொண்டி பகுதி மேலாண்மைக்குழு உறுப்பினர் கமாலுதீன், கவுன்சிலர் அபுதாகிர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    • 4 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
    • நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளுர் கண்ணந்தங்குடியில் நான்கு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

    இதில் பணம், நகை, மாணவர்களின் சான்றிதழ், நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் சாம்பலானது.

    இதையடுத்து தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் செயலாளர் செந்தில்குமார், நிவாரணமாக தார்பாய் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பரமத்திவேலூரில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
    • அதிக அளவில் கடை உரிமையாளர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக ளுக்கு, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்-கரூர் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கவர்கள், கேரி பேக்குகளை மொத்த விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை, அதிக அளவில் கடை உரிமையாளர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக ளுக்கு, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் மணிவண்ணன் தலைமை யில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், வேலூர் பேரூராட்சி செயல் அலுவ லர் செல்வக்குமார், துப்புரவு ஆய்வா ளர் குருசாமி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழுவி னர் நேற்று மாலை பரமத்திவேலூர் 4 ரோடு அருகே உள்ள வெங்க டசாமி (வயது 55) என்பவருக்கு சொந்த மான கடையில் திடீரென புகுந்து சோதனை மேற்கொண்ட னர்.

    இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலி தீன் கவர்கள், கேரி பேக்கு கள், பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் வெங்க டசாமிக்கு ரூ.25 அபராதம் விதிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகள், கப்பு கள் பேரூராட்சிக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்டு பாது காப்பான இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீண்டும் விற்பனை செய்தால் கடை உரி மையாளருக்கு 2-வது தவணை யாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
    • சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40). விவசாய கூலி தொழிலாளி.

    இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவர் சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.

    இந்நிலையில், திடீரென இன்று காலை அவரது வீடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

    இதனை கண்ட கிராமமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் என சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து கூரை வீட்டில் தீ வைத்தது யார்? எப்படி தீ பிடித்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.
    • புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்து பேசினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த இடையூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி தலைமையா சிரியர் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் இடையூர் ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் அருணா கலந்து கொண்டு மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்தும், பல் பராமரிப்பு குறித்தும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்தும், வாய்வழி புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார்.

    இதனை மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், பல் மருத்துவ உதவியாளர் பொன்னரசன், ஆசிரியை சசிகலா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.

    • தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.
    • பெண்களுக்கான அழகு பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

    தஞ்சாவூர்:

    நெகிழி இல்லா தஞ்சை மாவட்டம் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை பெரியக் கோவில் வளாகத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியில் வைக்கபட்டு இருந்த பொருட்களை பார்வையிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கண்காட்சியில் சணலால் தயாரிக்கப்பட்ட பை, பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட சாப்பாடு மற்றும் டிபன் தட்டு, கால்நடைகளின் தீவனமான தவிடு கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட டீ கப் மற்றும் ஸ்பூன், வண்ண காகிதங்களால் ஆன சுவர் அலங்காரப் பொருட்கள்.

    பனை ஓலை கொண்டு செய்யப்பட்ட கம்மல், நெக்லஸ், கீ செயின், ஆரம் உள்ளிட்ட பெண்களுக்கான அழகுப் பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

    நெகிழியை விட இந்த பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் நெகிழி பயன்படுத்தி வரும் நோய்க்கு செலவு செய்யும் தொகையை விட குறைவுதான்.

    அனைவரும் நெகிழி இல்லா மாவட்டமாக தஞ்சாவூர் விளங்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மளிகைக் கடையில் சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்ப டையில் குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    உடுமலை:

    உடுமலை கபூர்கான் வீதியிலுள்ள உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் கோவிலில் அன்னதானம் செய்வதற்கு மளிகைப்பொருட்கள் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து அவர் கொடுத்த பட்டியலில் இருந்த அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஒரு வாடகை ஆட்டோவில் ஏற்றி ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் பகுதியில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பொருட்களை இறக்கி வைத்த அந்த நபர் மேலும் சில பொருட்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை கொண்டு வந்து கொடுத்து விட்டு மொத்தமாக பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மளிகைக் கடை உரிமையாளரும் கடைக்கு சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்துள்ளார். அங்கே அந்த நபரையும் காணவில்லை, மளிகைப் பொருட்களையும் காணவில்லை. கோவிலில் இருந்தவ ர்களிடம், இன்னும் சில கோவில்க ளுக்கு பொரு ட்களை பிரித்து கொடுக்க வேண்டியி ருப்பதாகக் கூறி பொருட்களை ஒரு காரில் ஏற்றி கொண்டு அந்த நபர் தப்பிச் சென்று ள்ளார்.நூதன முறையில் ஏமாற்றி மளிகைக் கடையில் சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    இதுகுறித்து மளிகைக் கடை உரிமையாளர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்ப டையில் குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை.
    • கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரகிரி மலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்வார்கள்.

    திருப்பணிகள்

    கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை. கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மலை மீதுள்ள குமரகிரி முருகனை தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    இதனால் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சேலம் ஸ்ரீ ஆய்வு

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ கோவிலில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கோவில் திருப்பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் பணிகள் முடிய பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் , கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த நாட்களில் அம்மாபேட்டை, உடையாபட்டி, பொன்னம் மாப்பேட்டை உட்பட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காவடி எடுத்து வந்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்வார்கள். திருப்பணிகள் காரணமாக திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது.

    வருகிற ஏப்ரல் மாதம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் இந்த கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதனால் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு செல்லும் மலை சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையையும் உடனே சீரமைக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் வழங்கல்.
    • காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருப்பாலைத்துறை ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனர் ஓ.எஸ்.ஜெ. சார்பாக தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், பள்ளி முதல்வர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முதியோர் காப்பகத்திற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, உள்பட 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை முதியோர் இல்ல நிர்வாகியும், காப்பாளருமான எஞ்ஜினியர் நடராஜனிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பேசும்போது, பிறருக்கு உதவும் மனப்பாண்மை நாம் வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவ வேண்டுமென மாணவர்களை கேட்டுக்கொண்டனர்.

    இறுதியில் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறிந்தார்.
    • காலதாமதமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் மின் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, ரேசன் கடையில் உள்ள அரிசி, கோதுமை, உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறி ந்தார்.

    தொடர்ந்து, பணியாளர்க ளிடம் காலதாம தமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவி ட்டார்.

    ஆய்வின்போது மன்னா ர்குடி கோட்டா ட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

    • ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
    • திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு புளியக்குடியில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தற்போது உள்ள அங்காடியில் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் ரெயில்வே இருப்புப் பாதையை கடந்து நடந்து செல்ல வேண்டி உள்ளது.

    இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே வடக்கு தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேறாததால் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு

    புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    அப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

    பொதுமக்களின் இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.
    • பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

    இதனால் பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த

    2017-ம் ஆண்டுபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில், தற்போது வகுப்பறைகள் இயங்கி வருகின்றன.

    பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×