என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், நெகிழி மாற்று பொருட்கள் கண்காட்சி- கலெக்டர் திறந்து வைத்தார்
- தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.
- பெண்களுக்கான அழகு பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
தஞ்சாவூர்:
நெகிழி இல்லா தஞ்சை மாவட்டம் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை பெரியக் கோவில் வளாகத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியில் வைக்கபட்டு இருந்த பொருட்களை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கண்காட்சியில் சணலால் தயாரிக்கப்பட்ட பை, பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட சாப்பாடு மற்றும் டிபன் தட்டு, கால்நடைகளின் தீவனமான தவிடு கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட டீ கப் மற்றும் ஸ்பூன், வண்ண காகிதங்களால் ஆன சுவர் அலங்காரப் பொருட்கள்.
பனை ஓலை கொண்டு செய்யப்பட்ட கம்மல், நெக்லஸ், கீ செயின், ஆரம் உள்ளிட்ட பெண்களுக்கான அழகுப் பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
நெகிழியை விட இந்த பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் நெகிழி பயன்படுத்தி வரும் நோய்க்கு செலவு செய்யும் தொகையை விட குறைவுதான்.
அனைவரும் நெகிழி இல்லா மாவட்டமாக தஞ்சாவூர் விளங்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்