search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவரம்"

    • இதற்காக அதே ஊரைச் சேர்ந்தவ ஒரு சிலரை ஏஜெண்டுகளாக நியமனம் செய்தார்.
    • அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் என்பவரது மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மூரார்பா ளையத்தில் அலுவலகம் அமைத்து, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதற்காக அதே ஊரைச் சேர்ந்தவ ஒரு சிலரை ஏஜெண்டுகளாக நியமனம் செய்தார்.இதனை நம்பி ஏராளமானோர் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்தனர். ஆரம்ப காலத்தில் வட்டி வழங்கி ஷமீர் அகமது, கடந்த சில மாதங்களாக வட்டி வழங்கவில்லை. மேலும், மூரார்பாளையத்தில் இருந்து அலுவலகம், தொழில் நிறுவனங்களை மூடிவிட்டு தலைமறை வாகினார்.

    அவரிடம் பணிபுரிந்த ஏஜெண்டுகள், ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து அவரை மூரார்பாளை யத்திற்கு அழைத்து வந்து, சங்கராபுரம் போலீசாரிடம் ஓப்படை த்தனர். போலீ சாரின் விசாரணையில் மோசடி மன்னன் ஷமிர் அகமது கூறியதாவது:-எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரம் ஆகும். எனது சகோதரியை கள்ளக்கு றிச்சியில் திருமணம் செய்து கொடு த்துள்ளதால், அப்பகுதியில் எனக்கு பழக்கம் ஏற்பட்ட து. நான் கடந்த 15 வரு டமாக மூரார்பாளை யத்தில் வசித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு திருமணமாகி ரூபா என்கிற அப்ரீன் என்ற மனைவியும், 1 ½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடை உரிமையாளர், அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தார்.

    அதேபோல் நானும் எனது பெயரில் மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் தொடங்கி ஏஜெண்டுகள் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து பணத்தை பெற்று முதலீடு செய்தேன். நான் முதலீடு செய்த இடத்தில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தலைமறைவாகி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தேன். பணத்தை முதலீடு செய்த பொதுமக்களின் தொந்தரவு தாங்க முடியாததால், அந்த வீ்ட்டை காலி செய்து விட்டு உறவினர் வீட்டில் வசித்து வந்தேன். இருந்தபோதும் என்னிடம் பணி புரிந்த ஏஜெண்டுகள் என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு ஷமீர் அகமது தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து மோசடி மன்னன் ஷமீர் அகமதுவை, சங்கராபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஷமீர் அகமது பொதுமக்களிடம் எவ்வளவு பணம் வசூல் செய்தார்? எத்தனை பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை?. எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சங்கராபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.
    • கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் விவரங்கள் கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி ( புதன்கிழமை ) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்க ழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை கூட்டம் நடைபெறும் நாளில் காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின் மனுக்களை வழங்க வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • நாளை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
    • பதிவு செய்ய இயலாதவா்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூா் ஆகியவை சாா்பில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை ) நடைபெற உள்ளது.

    இந்த முகாம் நாளை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங் மற்றும் பி.இ. கல்வி தகுதிகளுக்குரிய வேலை நாடுவோருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பை அளிக்கவுள்ளனா்.

    இதில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சோ்ப்பும் நடை பெறுகிறது. வெளிநா டுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் மற்றும் சுயத்தொழில் தொடங்கு வதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

    இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணை யதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    பதிவு செய்ய இயலா தவா்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037, 9499055905, 8110919990 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
    • துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது.

    தாராபுரம் :

    பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ந தேதி துவங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.இவர்கள் பள்ளிக்கு வராதவர்கள் என தெரிவிக்கப்பட்டதால் நலத்திட்ட பொருட்கள், அதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்த கேள்விகள் எழுந்தன. பள்ளிக்கு வந்து தேர்வெழுத வராதவர்கள் நிலை குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

    மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்வெழுதாத மாணவர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம், கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் ஆப்சென்ட் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உயர்கல்வி சேர்க்கையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆப்சென்ட்டான மாணவர்களில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பட்டியல் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • வேளாண் அடுக்கு திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களின் பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்குத்திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, சர்க்கரை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளடங்கிய 12 துறைகளில் விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்க செய்யும் வகையில் கிரன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகளுடைய நில உடமை விவரம் சரிபார்க்க ப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
    இதில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை குறித்த ஆவணம், ஆதார் அட்டை நகல் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது உதவி வேளா ண்மை அலுவல ர்கள் அல்லது உதவி தோட்ட க்கலை அலுவலர்க ளை தொடர்பு கொண்டு விவரங்க ளை சரிபார்த்துக் கொள்ளவும் மற்ற விவசாயிக ளுக்கு இதை தெரிவித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • கால்நடை ஆஸ்பத்திரி வெளியில் உள்ள ஷெட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    வல்லம்:

    சென்னை மதுரவாயில் காமாட்சி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் என்பவரின் மகன் வசந்த்சூர்யா (வயது 23). இவர் கால்நடை மருத்துவ படிப்பு படித்து உள்ளார். தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பயிற்சி டாக்டராக பணியில் சேர்ந்தார்.

    இதற்காக அவர் கால்நடை மருத்துவமனையின் உள்ளே உள்ள அறையில் தங்கினார். மேலும் அவருடன் இரண்டு பயிற்சி டாக்டர்கள் தங்கி இருந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை வசந்த்சூர்யா கால்நடை ஆஸ்பத்திரி வெளியில் உள்ள ஷெட்டில் உள்ள மேல் இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கள்ளப்பெரும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வசந்த்சூர்யா உடலை மீட்டனர். அவரின் செல்போனை கைப்பற்றினர். ஆனால் செல்போன் லாக் செய்யப்பட்டு இருந்ததால் அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    தொடர்ந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், டாக்டர் வசந்த்சூர்யா மது அருந்தி இருந்ததும், விளையாட்டு வீரர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்த்சூர்யா தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் தாக்கி தூக்கில் தொங்க விட்டனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் லாக்கான செல்போனை செயல்பட வைத்த உடன் பல்வேறு விவரங்கள் கடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பான் கார்டு கிரெடிட் கார்டு, அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள்.
    • வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நான் கூறும் வங்கி எண்ணில் பணம் செலுத்துங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சேர்ந்த ஒருவர் தனியார் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் உங்களது பான் கார்டு செயல் இழந்துவிட்டது.

    எனவே பான் கார்டு கிரெடிட் கார்டு , அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள். நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை உண்மை என்று நம்பிய கல்லூரி அதிகாரி, குறிப்பிட்ட எண்ணில் மர்ம நபர் கேட்ட விவரங்களை பதிவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் கல்லூரி அதிகாரியின் கிரடிட் கார்டில் இருந்து ரூ.2.63 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த நம்பரை தொடர்பு கொண்டும் பலன் இல்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் பட்டுக்கோட்டை மணிபட்டினம் பகுதியை சேர்ந்த 39 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இது தொடர்பாக பலரிடம் சொல்லி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நீங்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நான் கூறும் வங்கி எண்ணில் பணம் செலுத்துங்கள்.

    உங்களுக்கு விசா வாங்கித் தருகிறேன். மருத்துவ சான்றிதழும் தயார் செய்து கொடுக்கிறேன் என பேசி இணைப்பை துண்டித்தார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.72 ஆயிரம் செலுத்தினார். ஆனால் பல நாட்களாகியும் அந்த நபரிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை .

    விசாவும் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் குறிப்பிட்ட நம்பரை தொடர்பு கொண்டு பயனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுவாமிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறிந்தார்.
    • காலதாமதமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் மின் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, ரேசன் கடையில் உள்ள அரிசி, கோதுமை, உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறி ந்தார்.

    தொடர்ந்து, பணியாளர்க ளிடம் காலதாம தமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவி ட்டார்.

    ஆய்வின்போது மன்னா ர்குடி கோட்டா ட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.
    • விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமைதாங்கி பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட த்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி த்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 473 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பூதலூர் வட்டம், புதுக்குடி வடபாதி கிராமத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைக ளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சியை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் ,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, பூதலூர் வட்டாட்சியர் பெர்ஷியா மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்கள் பெறப்பட்டது.
    • விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் பேராவூரணி வட்டத்தை சேர்ந்த சைபுநிசாபேகத்துக்கு தன் விருப்ப நிதியிலிருந்து விலையில்லா தையல் இயந்திரத்தினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்) , ஸ்ரீகாந்த் (வளர்ச்சி ), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×