search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில்,30-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    தஞ்சையில்,30-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.
    • கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் விவரங்கள் கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி ( புதன்கிழமை ) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்க ழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை கூட்டம் நடைபெறும் நாளில் காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின் மனுக்களை வழங்க வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×