search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை அருகே தூக்குப்போட்டு டாக்டர் தற்கொலை?
    X

    தஞ்சை அருகே தூக்குப்போட்டு டாக்டர் தற்கொலை?

    • கால்நடை ஆஸ்பத்திரி வெளியில் உள்ள ஷெட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    வல்லம்:

    சென்னை மதுரவாயில் காமாட்சி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் என்பவரின் மகன் வசந்த்சூர்யா (வயது 23). இவர் கால்நடை மருத்துவ படிப்பு படித்து உள்ளார். தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பயிற்சி டாக்டராக பணியில் சேர்ந்தார்.

    இதற்காக அவர் கால்நடை மருத்துவமனையின் உள்ளே உள்ள அறையில் தங்கினார். மேலும் அவருடன் இரண்டு பயிற்சி டாக்டர்கள் தங்கி இருந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை வசந்த்சூர்யா கால்நடை ஆஸ்பத்திரி வெளியில் உள்ள ஷெட்டில் உள்ள மேல் இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கள்ளப்பெரும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வசந்த்சூர்யா உடலை மீட்டனர். அவரின் செல்போனை கைப்பற்றினர். ஆனால் செல்போன் லாக் செய்யப்பட்டு இருந்ததால் அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    தொடர்ந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், டாக்டர் வசந்த்சூர்யா மது அருந்தி இருந்ததும், விளையாட்டு வீரர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்த்சூர்யா தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் தாக்கி தூக்கில் தொங்க விட்டனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் லாக்கான செல்போனை செயல்பட வைத்த உடன் பல்வேறு விவரங்கள் கடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×