search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் வாய்வழி சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல் மருத்துவர் அருணா பேசினார்.

    பள்ளியில் வாய்வழி சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.
    • புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்து பேசினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த இடையூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி தலைமையா சிரியர் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் இடையூர் ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் அருணா கலந்து கொண்டு மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்தும், பல் பராமரிப்பு குறித்தும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்தும், வாய்வழி புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார்.

    இதனை மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், பல் மருத்துவ உதவியாளர் பொன்னரசன், ஆசிரியை சசிகலா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.

    Next Story
    ×