என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mahatma Gandhi"
- இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.
- காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர்.
வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது
இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.
ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார்.
சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.
- கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்படி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, இன்று மாலை கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு வழங்குகிறார்.
- காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
- ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.
ஒட்டாவா:
கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது.
நேற்று இரவு இந்த காந்தி சிலையை யாரோ சேதப்படுத்தினர். மேலும் கரி பூசி அவமதிப்பும் செய்தனர். இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய துணைத்தூ தரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். இது வெறுக்கத்கக்க, காழ்ப்புணர்ச்சி ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கனடா போலீசாருக்கு தெரிவித்து உள்ளோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்தவர் அனில் சவுமித்ரா. இவர் சமூக வலைத்தளத்தில், மகாத்மா காந்தி, இந்தியாவின் தந்தை கிடையாது. அவர் பாகிஸ்தானின் தந்தை என பதிவிட்டு இருந்தார். ஏற்கனவே கோட்சே குறித்த பா.ஜ.க. நிர்வாகிகளின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த கட்சிக்கு இது மேலும் நெருக்கடி ஏற்படுத்தியது.
இதையடுத்து அனில் சவுமித்ரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் நேற்று உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்துக்குள் தன்னுடைய பதிவுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு கெடு விதிக்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், லத்தின் அமெரிக்க நாடானா பொலிவியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய வளர்ச்சியினை அதிகரிக்க வலியுறுத்த உள்ளது. அங்கு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்றைய காலக்கட்டத்தில் நிலைத்த தன்மை, சுற்றுச்சூழல், உணர்திறன் மற்றும் இயல்புக்கு இணங்க வாழ்ந்து கொண்டிருந்த அவரது வாழ்நாளில் கூட, நம் தற்போதைய காலத்தின் சவால்களை கணித்தார். ஐநாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் யாவும் காந்திய தத்துவத்தின் அடிப்படையை கொண்டதாகும்.
பொலிவியா பகுதியில் 2 இடங்களில் காந்தி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் தேசத் தந்தையான காந்திஜியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் மற்றும் மிகப்பெரிய மரியாதை செலுத்தும் விதம் ஆகும். காந்தி 20ம் நூற்றாண்டின் மக்கள் செல்வாக்கு நிறைந்த மனிதராவார். காந்தியின் அரசியல் திட்டங்கள், நாட்டின் மீதுள்ள பற்று போன்ற சில முக்கிய கோட்பாடுகள் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கொள்கைகள் இன்றளவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.#RamNathKovind #MahatmaGandhi
தேசத் தந்தை மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
அதற்கு முன் காலங்களில் அவரது உடல் நிலை எப்படி இருந்தது? என்பது பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து இப்போது வெளியாகி உள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடத்தும் மருத்துவ கமிட்டி பத்திரிகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காந்தி பற்றிய பழங்கால மருத்துவ அறிக்கையை தேடி அதை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதில் 1939-ல் மகாத்மா காந்தி 46.7 கிலோ எடை மட்டும் இருந்தார். அவரது உடல் 5 அடி 5 அங்குலமாக இருந்தது. உயர் ரத்த அழுத்த நோயில் அவதிப்பட்டு வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருக்கு 1925, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் மலேரியா நோய் தாக்கி இருந்தது. சரி செய்ய முடியாத அளவிற்கு நுரையீரல் அழற்சி நோய் தாக்கி இருந்தது. மேலும் நுரையீரல், இதயத்தில் சுருக்கம், ஆங்காங்கே குழிகள் தோன்றி இருந்தன.
காந்தி தினமும் அதிக தூரம் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு 185 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்வார். இவர் 1913-ல் இருந்து 1948-ல் கடைசி வரை 79 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பூமியை 2 தடவை சுற்றி வரும் தூரமாகும்.
காந்திக்கு 1937 மற்றும் 1940 ஆகிய நாட்களில் இ.சி.ஜி. பரிசோதனை நடத்திய இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.
அவருக்கு இயற்கை மருத்துவம் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனவே இயற்கை மருத்துவ முறைகளை அதிகம் சாப்பிட்டார். அது மட்டுமல்ல தனது உடலையே இயற்கை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்திக் கொண்டார்.
மனதை நன்றாக வைத்திருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
மகாத்மா காந்தி தொடர்பான பல்வேறு மருத்துவ ஆவணங்கள் மூலம் இந்த தகவல்களை திரட்டியதாக இந்த மருத்துவ கவுன்சில் டைரக்டர் பல்ராம் பாகவா தெரிவித்தார். #MahatmaGandhi
உடன்குடி:
மகாத்மா காந்தி உருவப்படத்தை அவமதிப்பு செய்த இந்து மகாசபை கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உ.பி. அரசை கண்டித்தும் உடன்குடி வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் உடன்குடி பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் முத்து முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப் தொடங்கி வைத்தார். இதில் தெற்கு மாவட்ட பொருளாளர் நடராஜன், துணைத்தலைவர் ஆதிலிங்கம், வட்டார துணைத்தலைவர் ரகுமத்துல்லா, பொருளாளர் அருள்ராமச்சந்திரன், மாவட்ட இலக்கிய பிரிவு தலைவர் முத்துகுமார், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹென்றி, வட்டார செயலாளர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சிவநேசன், முன்னாள் வட்டார தலைவர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியா மற்றும் பர்மாவுக்கு செயலாளராக இருந்த இங்கிலாந்து அதிகாரி பெத்திக் லாரன்ஸ் பிரபுவுக்கு மகாத்மா காந்தி கடந்த 1946-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு எழுதப்பட்டது.
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அவருக்கு நன்றி தெரிவித்து புதுடெல்லியில் இருந்து காந்தி எழுதிய அக்கடிதம் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. ஒரு பக்கம் எழுதப்பட்ட அக்கடிதம் சுமார் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலம் வருகிற டிசம்பர் 5-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. #MahatmaGandhi
மதுரை:
மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சி யகத்தில் மகாத்மா காந்தியின் 150-வது ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட காந்தியின் செயலாளர் கல்யாணம் மகாத்மா காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை மாணவ-மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
நாட்டில் வாழும் ஏழை மக்களின் நலன்களை சுற்றியே காந்தியின் சிந்தனையும், பேச்சும், செயலும் இருந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மவுன விரதம் கடைபிடிப்பார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது காந்தியை கொலை செய்வதற்கு 6 முறை முயற்சி நடந்தது. அவர்கள் காப்பாற்றிக் கொடுத்த காந்தியை நாம் விடுதலை பெற்ற 5 1/2 மாதங்களில் இழந்தோம்.
சுதந்திரத்துக்கு பின்னர் தான் இந்தியாவில் லஞ்சம், ஊழல் வரத்தொடங்கியது. தற்போது அது தலை விரித்தாடுகிறது. சுதந்திரம் அடைந்த பின்னர் நம்மால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியவில்லை.
அந்த வெள்ளைக்காரன் ஆட்சி மறுபடியும் வந்தால் இந்தியா நன்றாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.
தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் நிலை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. அவர்கள் நம்மை கொள்ளையடித்தது உண்மை தான்.
அப்போது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்.
நமது நாட்டில் இப்போது காந்தியை முற்றிலுமாக மறந்து விட்டார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தற்போது காந்தியை தெய்வமாக வணங்குகிறார்கள்.
3 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நமக்கு இன்னொரு காந்தி கிடைக்க மாட்டார். இந்தியா விடுதலையடையும் போது நேதாஜி தலைமையிலான ஆட்சிமுறை 5 ஆண்டுகளுக்கு அமைந்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியிருக்கும். ஜெனரல் கரியப்பாவும் இதே கருத்தை தான் கூறினார்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். #GandhiJayanti150 #MahatmaGandhi #Bribe
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் உருவ சிலையை வைக்க முயற்சி நடந்தது.
உத்தரபிரதேச மாநிலம் சித்ரா கூட் மாவட்டத்தில் சக்வாரா என்ற கிராமத்தில் ராஷ்டீரிய சனாதன் தள் அமைப்பினர் கோட்சே சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ராஷ்ட்டீரிய சனாத்தன் தள் அமைப்பின் சித்ரகூட் மண்டல தலைவர் ராமேந்திராவுக்கு சொந்தமான இடத்தில் அந்த சிலை நிறுவப்பட இருந்தது.
அதை அறிந்த கிராம மக்கள் உஷாராயினர். இது குறித்து சித்ரகூட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமாரிடம் புகார் செய்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கோட்சே சிலையை நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தினர். சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.
அது தொடர்பாக ராஷ்ட்டீரிய சனாதன் தள் அமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் இணை அமைப்பாளர் பிரிஜேஷ் பாண்டே உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
அவர்களில் 2 பேர் சித்ராகூட் பகுதியை சேர்ந்தவர்கள் ஒருவர் புஷார் பகுதியையும், மற்றொருவர் பாண்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர் ஆவார். கோட்சே சிலை நிறுவ இருந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #GandhiJayanti #MahatmaGandhi
தேசப்பிதா மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா மாளிகையில், 1948-ம் ஆண்டு, ஜனவரி 30-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் நாதுராாம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த படுகொலையில், மிகப்பெரிய அளவில் வரலாறு மூடி மறைக்கப்பட்டு விட்டதாக கூறி, இது தொடர்பாக முழுமையாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மும்பையை சேர்ந்த ஆராய்ச்சியாளரும், அபினவ் பாரத் அறக்கட்டளையின் அறங்காவலருமான பங்கஜ் குமுத்சந்திர பத்னிஸ், கடந்த ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை அப்போது நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில் அவர் புதிய ஆதாரங்கள் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் படியேறி வழக்கு தொடுத்து உள்ளார்.
அதில், மகாத்மா காந்தி உடலில் இருந்த காயங்கள் தொடர்பான படங்களின் தடயவியல் பரிசோதனை அறிக்கை மற்றும் சில புத்தக தகவல்களை புதிய ஆதாரங்களாகக் கொண்டு மகாத்மா காந்தி படுகொலையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார்.
லாரன்ஸ் டி சல்வேடார் எழுதி 1963-ம் ஆண்டில் வெளியான ‘காந்தியை கொன்றது யார்?’, மவுண்ட் பேட்டன் பிரபுவின் மகள் பமீலா மவுண்ட் பேட்டன் எழுதி வெளியான ‘இந்தியா நினைவூட்டியது’ ஆகிய 2 புத்தகங்களில் உள்ள தகவல்களை வழக்கில் அவர் ஆதாரமாக சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த புத்தகங்கள் மூலம், மகாத்மா காந்தி கொலை சதியில் அப்போது உயர்ந்த அதிகாரத்தில் இருந்த நபர் அல்லது நபர்கள் உடந்தையாக இருந்ததாக முடிவுக்கு வர முடிகிறது என கூறி உள்ளார்.
மேலும், மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட மறுநாளில் முக்கிய நாளிதழ் ஒன்றில் வெளியான படத்தில் அவரது நெஞ்சில் 4 காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும், அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் அறிக்கையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MahatmaGandhi #ReviewPetition #SupremeCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்