search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை அவமதிப்பு"

    • தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் அண்ணா சிலையை உடைத்து, அவமதித்தவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர்.
    • தனிப்படை அமைத்து அண்ணா சிலையை அவமதித்தவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் புதுவை-விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்து செருப்பு மாலை அணிவித்து அவமதித்தனர்.

    அதோடு அருகில் இருந்த தி.மு.க. கொடியை இறக்கி உள்ளனர். பின்னர் அந்த கொடியை அண்ணாசிலையின் முகத்தில் மூடிவிட்டு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா உருவ படத்தை தொங்கவிட்டு சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டனர். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டுவந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் அண்ணாசிலையை உடைத்து, அவமதித்தவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து அண்ணாசிலையை அவமதித்தவர்களை போலீசார் தேடிவந்தனர்.

    விசாரணையில் கண்டமங்கலம் அருகே நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 21), கண்டமங்கலம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வீரமணி (22), பிரதீஷ் (24) மற்றும் சிலர் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வீரமணி உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    கைதான 3 பேரும் பா.ஜ.க. உறுப்பினர்கள் என தெரியவந்தது. மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    • ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

    ஒட்டாவா:

    கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது.

    நேற்று இரவு இந்த காந்தி சிலையை யாரோ சேதப்படுத்தினர். மேலும் கரி பூசி அவமதிப்பும் செய்தனர். இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய துணைத்தூ தரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். இது வெறுக்கத்கக்க, காழ்ப்புணர்ச்சி ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கனடா போலீசாருக்கு தெரிவித்து உள்ளோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×