search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அதிகாரிக்கு காந்தி எழுதிய கடிதம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போக வாய்ப்பு
    X

    இங்கிலாந்து அதிகாரிக்கு காந்தி எழுதிய கடிதம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போக வாய்ப்பு

    இங்கிலாந்து அதிகாரி பெத்திக் லாரன்ஸ் பிரபுவுக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MahatmaGandhi
    பாஸ்டன்:

    இந்தியா மற்றும் பர்மாவுக்கு செயலாளராக இருந்த இங்கிலாந்து அதிகாரி பெத்திக் லாரன்ஸ் பிரபுவுக்கு மகாத்மா காந்தி கடந்த 1946-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு எழுதப்பட்டது.

    தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அவருக்கு நன்றி தெரிவித்து புதுடெல்லியில் இருந்து காந்தி எழுதிய அக்கடிதம் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. ஒரு பக்கம் எழுதப்பட்ட அக்கடிதம் சுமார் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலம் வருகிற டிசம்பர் 5-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. #MahatmaGandhi
    Next Story
    ×