search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loksabha"

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
    • மக்களவை கூட்டம் வரும் 29ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவு பெற்றுள்ளது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது.

    ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும், ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி முடங்குவது வாடிக்கையாகி வந்தது. இதையடுத்து, பாராளுமன்ற கூட்டத்தொடரை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி 29-ந் தேதி வரை நடத்தாமல், 1 வாரம் முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையே (இன்றுடன்) முடித்து விட பரிசீலிக்கப்படுவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் தகவலை உறுதி செய்யும் வகையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    29ம் தேதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியப் போட்டி ஆணையத்தின் அனுமதிக்கும் வகையில் கணிசமான விதிகளைக் கோரும் மசோதா.
    • புதுடெல்லி சர்வதேச நடுவர் மையம் (திருத்தம்) மசோதாவும் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் அறிமுகம்.

    இந்தியப் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கோரும் போட்டி (திருத்தம்) மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், புதிய சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியப் போட்டி ஆணையத்தின் அனுமதிக்கும் வகையில் கணிசமான விதிகளைக் கோரும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

    இந்தியப் போட்டி ஆணையம் சமீபத்திய காலங்களில், வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தையில் நியாயமற்ற வணிக நடைமுறைகள் தொடர்பாக ஆய்வுகள் மற்றும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    புதுடெல்லி சர்வதேச நடுவர் மையம் (திருத்தம்) மசோதாவும் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

    • பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.
    • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வரும் நிலையில் காங்கிரஸ், அதன் தோழமை கட்சிகள் வெளிநடப்பு.

    மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    உலகிலேயே அதிவேகத்துடன் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்தும் உலகின் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது.

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. கொரோனா, ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது.

    பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, நிதி அமைச்சரின் உரையை புறக்கணித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வரும் நிலையில் காங்கிரஸ், அதன் தோழமை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.

    • விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
    • இதனால் மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அறிவித்தார். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    • பணவீக்க உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர்.
    • அவைத்தலைவரின் முறையீட்டையும் மீறி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால் நடவடிக்கை.

    விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 4 தினங்களாக முடக்கி இருந்தன. விலைவாசி உயர்வு உள்பட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இன்று மதியம் 12 மணக்கு சபை கூடியதும், எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர்.

    அவைத்தலைவரின் முறையீட்டையும் மீறி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
    • இத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:

    ரஷியா-உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய முக்கியக் காரணம்.

    பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயை விட பலவீனம் அடைந்துள்ளன. எனவே, 2022-ல் இந்த நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் வலிமையாக இருக்கிறது என தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என தெரிவித்துள்ளார். #Loksabha #PMModi #BJP
    புதுடெல்லி:

    மக்களவையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். எனது அரசு நேர்மையான அரசு, இளைஞர்கள் நேர்மைக்கு தான் வாக்களிப்பார்கள். முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்களை வரவேற்கிறேன். 

    விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் விமர்சனங்கள் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக நாட்டை எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை ஏற்க முடியாது.

    எனது அரசு நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு சாதனைகளையும் பாஜக கூட்டணி அரசு செய்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை பாஜக வழங்கி வருகிறது.



    வாகன உற்பத்தியில் இந்தியா 4-வது இடம் பிடித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. இரும்பு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது.  பொருளாதார அடிப்படையில் உலகளவில் இந்தியா 11-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜ.க. வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது.

    நமது விமானப்படை வலுவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பவில்லை. யாருடைய கட்டளையின் பேரில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தை காங்கிரஸ் ரத்து செய்ய சொல்கிறது?

    இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. மேலும், அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டது.

    தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்கு இயந்திரத்தை குறை கூறுகிறது. மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் 356-வது பிரிவு 50 முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். #Loksabha #PMModi #BJP
    சாலை மற்றும் போக்குவரத்து துறை செய்த பணிகளுக்காக அத்துறை மந்திரி நிதின் கட்கரிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மக்களவையில் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தார். #SoniaGandhi #NitinGadkari
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மக்களவை இன்று கூடியது. கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மற்றும் தற்போது செய்துவரும் பணிகள் தொடர்பாக விளக்கமான பதில் அளிக்கப்பட்டது.

    அப்போது பேசிய அத்துறையை சேர்ந்த மந்திரி நிதின் கட்கரி, அனைத்து தொகுதிகளிலும் எனது அமைச்சகம் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது என்று கட்சி எல்லையைத் தாண்டி அனைத்து எம்.பி.க்களும் பாராட்டியுள்ளனர் என குறிப்பிட்டார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.



    அப்போது அவையில் இருந்து எழுந்த மத்தியப்பிரதேச மாநில எம்.பி. கணேஷ் சிங், நிதின் கட்கரி அமைச்சகம் மேற்கொண்ட சிறப்பான பணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து, அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் மேஜையை தட்டி நிதின் கட்கரிக்கு பாராட்டு தெரிவித்தார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்களும் பாராட்டை தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டினர். 

    ஏற்கனவே, சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளுக்கு நன்றி தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நிதின் கட்கரிக்கு நன்றி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. #SoniaGandhi #NitinGadkari
    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #LokSabha #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
     
    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த மசோதா மீதான விவாதம் மாலை 6 மணியில் இருந்து நடைபெற்றது. சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த
    விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் இரவு 10 மணிக்கு மேல் மக்களவைக்கு வருகை தந்தனர். இறுதியில், வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றம் அடையும்.

    இந்நிலையில், இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும் எதிர்ப்பு தெரிவித்து 3 வாக்குகளும் பதிவாகின. இதனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் நாளை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது. #LokSabha #10pcquota #economicallybackward
    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. #CitizenshipBill
    புதுடெல்லி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிமல்லாத பிற மதங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மேற்கண்ட நாடுகளில் சிறுபான்மையினத்தவர்களாக இருந்து, இந்தியாவுக்கு வந்து வாழ விரும்பும் இந்து, ஜைன, கிறிஸ்தவ, புத்த, பார்சி மதத்தினர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.


    ஆனால், காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த மசோதாவுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இதை பாராளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொள்ளாததால் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது. #CitizenshipBill #CitizenshipBillAmendment #LokSabha  
    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான  இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.

    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்குஉயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்பு தெரிவித்துள்ளார். எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தேர்தல் காலத்து தந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #10pcquota #economicallybackward #introducedinLokSabha
    பாராளுமன்ற மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று உத்தரவிட்டுள்ளார். #Parliament #ADMKMPs #MekedatuDam
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது.

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள்தோறும் கோ‌ஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டெல்லி மேல் சபையிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி வந்தனர்.

    பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்தார்.

    இதேபோல் அதற்கு மறுநாள் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை இன்று கூடியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி முழக்கமிட்டனர்.


    அவையை சுமூகமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். வேணுகோபால், செங்குட்டுவன், ராமசந்திரன் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.பி. களை இடை நீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

    இதுவரை மக்களவையில் 34 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார். #Parliament #ADMKMPs
    ×