என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவவேண்டும் - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
Byமாலை மலர்7 Feb 2019 1:56 PM GMT (Updated: 7 Feb 2019 1:56 PM GMT)
பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என தெரிவித்துள்ளார். #Loksabha #PMModi #BJP
புதுடெல்லி:
மக்களவையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். எனது அரசு நேர்மையான அரசு, இளைஞர்கள் நேர்மைக்கு தான் வாக்களிப்பார்கள். முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்களை வரவேற்கிறேன்.
விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் விமர்சனங்கள் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக நாட்டை எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை ஏற்க முடியாது.
எனது அரசு நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு சாதனைகளையும் பாஜக கூட்டணி அரசு செய்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை பாஜக வழங்கி வருகிறது.
வாகன உற்பத்தியில் இந்தியா 4-வது இடம் பிடித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. இரும்பு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது. பொருளாதார அடிப்படையில் உலகளவில் இந்தியா 11-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜ.க. வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது.
நமது விமானப்படை வலுவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பவில்லை. யாருடைய கட்டளையின் பேரில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தை காங்கிரஸ் ரத்து செய்ய சொல்கிறது?
இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. மேலும், அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டது.
தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்கு இயந்திரத்தை குறை கூறுகிறது. மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் 356-வது பிரிவு 50 முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். #Loksabha #PMModi #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X