search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறைவேற்றம்"

    • தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத வட்டார வரியை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது, இணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் பேசினர்.

    கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நடிகர்-நடிகைகளின் சம்பள உயர்வால் தமிழ் படங்களின் விலை அபரி தமாக உயர்ந்துள்ளது. எனவே சம்பளத்தை குறைக்க வேண்டும்.

    திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டிருக்கும் 8 சதவீத வட்டார வரி விதிப்பு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.

    திரையரங்கு உரிமையாளர்கள்-விநியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து கூட்டு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 12 மணி நேர வேலை சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
    • எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் எழுந்துள்ளது.

    மதுரை

    எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில பொதுச் செயலாளர்கள் அகமது நவாபி, நிஜாம் முகைதீன், கோவை மண்டல செயலாளர் லுக்மனாக்தீன், மதுரை மண்டல தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பது, மணல் கடத்தல் மற்றும் போதை கும்பலை தடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு முழுமை யான பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழிலாளர் உழைப்பை சுரண்டும் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்தை தமிழக அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும், திருச்சியில் மே 5-ந் தேதி நடைபெற உள்ள எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி முதல் மாநில மாநாட்டை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா–னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் தத்துவம் போன்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசி வரு கிறார். அண்ணமாலை அரசியலுக்கு வந்து ஒராண்டு தான் ஆகிறது. நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என சுய புராணம் பாடி வருகிறார்.

    நான் அரசியலுக்கு வந்து 26 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்றும் ஒரே கொள்கை பிடிப்போடு இருக்கிறேன்.எதிலும் தி.மு.க.வினர் துணிந்து நிற்போம். அண்ணா மலையின் பேச்சைக்கேட்டு யாரும் ஏமாற மாட்டார்கள். இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள். சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை திராவிட இயக்கம் தான் மாற்றியது. பெண்களுக்கு கல்வி கிடையாது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கல்வி கிடையாது. கோவி லுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையை மாற்றி அமைத்தது நீதிகட்சியும், தி.மு.க.வும் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

    சாதி, மத பிரச்சினையை உருவாக்கி தமிழகத்தில் பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். நிச்சயமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளையும் படிப்ப டியாக நிறைவேற்றி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ×