search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri"

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட ‘மக்களுடனான பயணம்’ அடுத்தக்கட்டமாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.



    9-ந்தேதி:- நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, பாலக்காடு, கரிமங்கலம், தர்மபுரி,

    10-ந்தேதி:- அரூர், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    கிருஷ்ணகிரியில் சாலையோரம் வீசப்பட்ட நூற்றுக்கணக்கான ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். #SmartRationCards
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலையோரம் இன்று ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் சிதறிக் கிடந்தன. இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சாலையோரம் வீசப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கைப்பற்றினர். ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை வீசியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



    அந்த ரேசன் கார்டுகளில் பெரும்பாலும், போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இருந்தன. பொது பிரச்சினை காரணமாக விரக்தி அடைந்து மொத்தமாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வீசப்பட்டதா? அல்லது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க வேண்டிய கார்டுகளா? என்பது தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட முகவரியில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #SmartRationCards 
    கிருஷ்ணகிரி அருகே ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் காவலாளியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர். #ATMRobbery
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள மெயின் ரோட்டில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் விஜயன், சிதம்பரம், ரவிச்சந்திரன் என்ற 3 காவலாளிகள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த 24-ந் தேதி வங்கி ஊழியர்கள் வழக்கம் போல பணி முடிந்து சென்றனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று வங்கிக்கு விடுமுறையாகும். நேற்று முன்தினம் இரவு வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளி சிதம்பரம் பணியில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர், காவலாளி சிதம்பரத்தை கட்டி போட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களின் கொள்ளை முயற்சி நிறைவேறாததால் காவலாளி சிதம்பரத்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காரகுப்பம் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகில் போட்டு சென்றனர்.

    இந்த நிலையில் காவலாளி சிதம்பரம் கொடுத்த தகவலின் பேரில் பர்கூர் டிஎஸ்பி தங்கவேல், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று காவலாளி சிதம்பரத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

    ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் காவலாளி சிதம்பரம் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் அவர் மீது சந்தேகப்பட்ட போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நண்பர்கள் 2 பேர் உதவியுடன் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து காவலாளி சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர். அவரது திட்டப்படி கொள்ளையடிக்க வந்த அவரது நண்பர்களான திருப்பூரை சேர்ந்த வினோத், விஜயன் ஆகிய 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #ATMRobbery

    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்தததை அடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    தருமபுரி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த தகவல் நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.

    இதையடுத்து தருமபுரி பஸ் நிலையம், 4 ரோடு, கடைவீதி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, எஸ்.வி.சாலை, முகம்மது அலி கிளப் ரோடு, சின்னசாமி நாயுடு தெரு, ராஜகோபால் கவுண்டர் தெரு, ஆர்.பி.சுந்தரம் தெரு, நேதாஜி பைபாஸ்ரோடு, பென்னாகரம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு, பாரதிபுரம், ஒட்ப்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு 7 மணிமுதல் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.

    இதேபோன்று பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்ட புறநகர் மற்றும் நகர அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் ரத்து செய்யப்பட்டது. வெளியூர்களுக்கு சென்ற பஸ்கள் மீண்டும் தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பவில்லை. இதனால் பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வெளியூர் மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணி மனையில் நிறுத்தப்பட்டன.

    பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் ஷேர் ஆட்டோக்கள் மூலம் அதிக கட்டணம் செலுத்தி பயணிகள் சென்றனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும், ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கும் நேற்று இரவு முதல் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. வெளிமாநிலத்துக்கு செல்ல கூடிய பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    தொண்டர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பஸ் நிலையம், ஒட்டப்பட்டி முதல் 4 ரோடு வரை ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று அதியமான்கோட்டை, காரிமங்கலம், மதிகோண் பாளையம், தொப்பூர், கிருஷ்ணாபுரம், பழைய தருமபுரி ஆகிய பகுதிகளிலும் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று ஒகேனக்கல் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கடைகள் முழுவதம் அடைக்கப்பட்டன.

    பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்தந்த பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, போஸ் பஜார், பாகலூர் சாலை, தாலுகா அலுவலகம் சாலை, பழைய பெங்களூரு ரோடு, ஏரிரோடு ஆகிய பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

    ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்லக் கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு 7 மணி முதல் நிறுத்தப்பட்டன.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தினசரி ஆயிரக்கணக்கனோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள்.

    இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

    தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஓசூருக்கு வந்த தமிழக பஸ்கள் பணிமனைக்கு திருப்பி விடப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் தினமும் 800 கர்நாடக அரசு பஸ்கள் இன்றும் இயக்கப்படவில்லை.

    இருமாநிலத்தை சேர்ந்தவர்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை ஆட்டோக்களில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோன்று அங்கிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் ஆட்டோ மூலம் அத்திப்பள்ளி வரை வந்தனர்.

    ஊத்தங்கரை பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. இதேபோன்று மத்தூர், சிங்காரபேட்டை, கல்லாவி ஆகிய பகுதி களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஏதும் இயக்கப்படாத தால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப் பட்டன.

    போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு முதல் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. போச்சம்பள்ளி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும், 4ரோடு, திருப்பத்தூர்-தருமபுரி மெயின்ரோட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. பாரூர், அரசம்பட்டி, புலியூர், நாகரசம்பட்டி, இருமத்தூர், சந்தூர், மஞ்சமேடு, கண்ணத்தூர் ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. கிராமங்கள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயக்கவில்லை. இரவு 7 மணிக்கு பஸ் நிலையம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டன.

    சூளகிரி தாலுகா சூளகிரி, பேரிகை, வேப்பனஅள்ளி, உத்தனபள்ளி பகுதிகளில் நேற்று மாலை கருணாநிதி இறந்த தகவலை அறிந்த வுடன் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வாகன போக்குவரத்துகள் குறைந்தது, கடைகள் அடைக்கப்பட்டன. சூளகிரி யில் இன்று காலை முழுவதும் கடை அடைக்கப்பட்டது.

    ஓசூர்-கிருஷ்ணகிரி சாலை, சூளகிரி பேரிகை சாலை, பஸ நிலைய சாலை, கீழ் தெரு சாலை, நெஞ்சாலையில் உள்ள உள்ள பெரிய அளவில் உள்ள ஓட்டல்கள் போன்ற கடைகள் மூடப் பட்டன. சூளகிரியில் பஸ் நிலையத்தில் எந்த பஸ்கள் ஒடாததால் வெறிச்சோடி காணப்பட்டன. வீடுகள் முக்கிய வீதிகளில் கருணா நிதி உருவபட பேனருக்கு அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    கட்டப்பஞ்சாயத்து பேசி ஊரை விட்டு தள்ளி வைத்ததாக புகார் கூறி, குடும்பத்துடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சூரன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் அசோகன்(55). இவரது மனைவி லலிதா(50). இவர்கள் நேற்று தனது மகன்கள் மற்றும் மகள்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தனர். பின்னர் திடீரென லலிதா தனது உடலிலும் குழந்தைகள் உடலிலும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    அந்த நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு அவர்களை கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக லலிதா கூறியதாவது:-

    எனது மகன் சிவக்குமார் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எங்கள் கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொண்டால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு விருந்து வைக்க வேண்டும் அல்லது ரூ. 50 ஆயிரம் ஊர் கவுண்டரிடம் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை நாங்கள் கொடுக்காததால், கட்டப்பஞ்சாயத்து பேசி, எங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.

    எங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் தரவில்லை. பண்டிகை காலங்களிலும், கோவிலுக்குள்ளும் விட மறுக்கின்றனர். என்னுடைய மாமியார் இறந்த போதும், சடங்குகள் செய்ய கூட யாரும் வரவில்லை. மேலும் கிராமத்தில் நீங்கள் இல்லை. அதனால் உங்களுக்கு வீடு தேவை இல்லை என்று எங்கள் வீட்டை ஆக்கிரமித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு எங்களுக்கு அரசு வழங்கிய இடத்தையும் ஆக்கிரமித்து எங்களை துன்புறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் கந்திகுப்பம் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் வீடு மற்றும் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடும்பத்தினருடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Krishnagiri near government bus japti is not due to compensation
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த தொழில்அதிபர்கள் நசீர்உசேன் (வயது 24), ஜோயால்சொரூப்(25) மற்றும் மேகாதிரிஷா(22) ஆகிய 3 பேரும் ஒரு காரில் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி காரில், பெங்களூருவில் இருந்து சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண சென்றனர்.

    அப்போது கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொன்னைகான்கொட்டாய் என்ற இடத்தில் கார் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில், சம்பவ இடத்திலேயே நசீர் உசேன், ஜோயால்சொரூப் ஆகியோர் இறந்தனர். மேகாதிரிஷா படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, உயிர் பிழைத்தார். தற்போது நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

    இந்த விபத்து குறித்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் இறுதி தீர்ப்பு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 88 லட்சத்து 54 ஆயிரம் இழப்பீட்டை 7.5 சதவீத வட்டியுடன், அரசு போக்குவரத்து கழகம் வழங்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதிக்குள் 25 சதவீத வட்டியுடன் இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து கழக நிர்வாகம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி இழப்பீட்டு தொகையில் ரூ. 33 லட்சத்து 83 ஆயிரத்தை மட்டும் நீதிமன்றத்தில் செலுத்தியது. மீதி தொகை செலுத்தப்படவில்லை.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கலாவதி, இழப்பீட்டு தொகை முழுவதையும் செலுத்தாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டதுடன், இழப்பீட்டு தொகையாக இதுவரை உள்ள வட்டியுடன் சேர்த்து ரூ. 1 கோடியே 12 லட்சத்து 11 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோர்ட்டு அமீனா உதவியுடன், பாதிக்கப்பட்டவரின் வக்கீல் முருகன் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கு சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    கிருஷ்ணகிரி அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஹவுசிங் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 47). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இதில் ஓசூர் பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மனைவி அகிலா ஆகிய 2 பேரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

    கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நிறுவனம் செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.

    உடனே வெங்கடேஷ் நிறுவனத்திற்கு சென்று கணக்குகளை சரிபார்த்தார். அப்போது ஆதித்யாவும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து நிறுவனம் சார்பில் பணம் கொடுக்கல், வாங்கலில் ரூ.5 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடத்தில் வெங்கடேஷ் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரையும் வெங்கடேஷ் பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யாவும், அகிலாவையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  #Tamilnews

    தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையின் முழு உயரத்துக்கும் தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை நீரையும் சேர்த்து கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,068 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக நேற்று மாலை 4 மணி அளவில் அணையில் 3 முறை அபாய ஒலி எழுப்பப்பட்டு விநாடிக்கு 1,900 கன அடி நீர், 3 சிறிய மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றிலும் பாசனக் கால்வாய் வழியாகவும் திறக்கப்பட்டது.

    தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அணையின் உதவி செயற்பொறியாளர் நடராஜன் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் தரைபாலம் மூழ்கி விட்டதால், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக உள்ளது.



    கிருஷ்ணகிரியில் நாள்தோறும் 4 மணி நேரம் வரையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மின் வெட்டு காணப்படுகிறது. நாள்தோறும் 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக லேசான இடி-மின்னல் இருந்தால் கூட தொடர்ச்சியாக 2 முதல் 3 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நேற்று மட்டும் காலை முதல் இரவு வரையில் 10 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதில் 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மாதம் ஒரு முறை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் மின்சாரம் நிறுத்துகிறார்கள். இது மட்டுமல்லாமல் அடிக்கடி பழுதான மின்கம்பங்கள் மாற்றுவதாகவும், மின்சார வயர்கள் மாற்றுவதாகவும் கூறி மின்சாரத்தை நிறுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் சிறிய மழை, இடி-மின்னலுக்கு கூட மின்சாரம் உடனடியாக நிறுத்தப்படுகிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள். மேலும் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டாலும் யாரும் போனை எடுப்பதில்லை. தொடர் மின் வெட்டால் குழந்தைகள், வயதான முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து வடமாநில வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    வடமாநிலத்தில் இருந்து, குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்திற்குள் புகுந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள், தமிழில் பேச தெரியாததால், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து, அந்த பகுதி மக்கள் சரமாரி தாக்கினர். இதில் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி சரிந்த அந்த நபரை அங்கிருந்த சிலர் ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் விரைந்து சென்று விசாரித்தார்.

    இதில், நேற்று மாலை ஒன்னல்வாடி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த அந்த நபர், குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாலிபர்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அந்த நபருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எந்த மொழியும் தெரியாததால், தன்னிடம் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால், அவர் குழந்தைகளை கடத்த வந்தவர் என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்ட மக்கள், அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவர், தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை வரை அவரை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை. இதனால் போலீசார் அவரது பிணத்தை புகைப்படமாக எடுத்து ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளிகளிடம் காட்டி அவர் யார் என்று விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வாலிபருடன் மேலும் 2 வடமாநில வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களையும் பொதுமக்கள் தாக்க ஆரம்பித்த உடன் அவர்கள் 2 பேரும் தப்பியோடி விட்டனர். அவர்கள் பிடிபட்டால் தான் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவரும்.

    இந்த நிலையில் வட மாநில வாலிபரை அடித்து கொலை செய்தது யார் என்பது குறித்து ஒன்னல்வாடியில் இன்று போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

    இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜப்பா மகன் மூர்த்தி (25) என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து, வடமாநில மாநிலத்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வட மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி தலைவி காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, கிருஷ்ணகிரி அணை மதகுகளை உடனடியாக சீரமைத்து, வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இந்த அணையின் 8 மதகுகளையும் மாற்றிடும் வகையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும். மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களை, அரசு விதிக்கு நேர்மாறாக நியமனம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்துகொள்வது. இரண்டு ஆண்டுகளாக ஆணையர் இல்லாமல் கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதுடன், உடனடியாக தமிழக அரசு கிருஷ்ணகிரி நகராட்சிக்கு ஆணையரையும், பிற அலுவலர்களையும் நியமனம் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்வது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினிசெல்வம், துணை அமைப்பாளர் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாணவர்கள் 92.51 சதவீதமும், மாணவிகள் 95.94 சதவீதம் என மொத்தம் 94.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வினை 80 மையங்களில் மாணவர்கள் 12 ஆயிரத்து 926பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 234 பேரும் என மொத்தம் 25 ஆயிரத்து 160 பேர் எழுதினர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிட்டார்.

    இதில் 11 ஆயிரத்து 958 மாணவர்களும், 11 ஆயிரத்து 737 மாணவிகள் உட்பட 23 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.51 சதவீதமும், மாணவிகள் 95.94 சதவீதம் என மொத்தம் 94.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட 1.06 சதவீதம் பேர் இந்த ஆண்டு அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 260 அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 91.75 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    ×