search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓசூர்"

    • ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது.
    • பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கோவில் பகுதியில் குறவர் நடனம், புலியாட்டம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார். பின்னர் ஒசூர் பகுதியில் சுவாமி சப்பர வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு தோங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

    முக்கிய வீதி வழியாக சப்பர வீதி உலா வந்தது. பின்னர் காலை 7.30 மணியளவில் கோவிலை சென்றடைந்தது. கோவில் முன்பு 30 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யபட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து காலை 8 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அதை தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர்.

    திருவிழாவில் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.

    • தர்மபுரி - ஓசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • தினமும் மதியம் 2:05க்கு ஓசூர் அடையும் குர்லா எக்ஸ்பிரஸ் தாமதமாக செல்லும்

    திருப்பூர் :

    கோவை- மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் 21 நாட்களுக்கு ஓசூர் செல்ல தாமதமாகும் என சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

    தர்மபுரி - ஓசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவையில் இருந்து திருப்பூர் வழியாக செல்லும் லோகமான்யதிலக்(மும்பை) குர்லா எக்ஸ்பிரஸ் நாளை 29-ந் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29ந்தேதிகள், நவம்பர் மாதம், 1, 3, 5, 8, 10, 12 ஆகிய தேதிகளில் 21 நாட்கள் ஓசூர் அருகே ராயக்கோட்டை - கீழமங்கலம் இடையே ஏதேனும் ஒரு இடத்தில் 40 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும். இதனால் வழக்கமாக தினமும் மதியம் 2:05க்கு ஓசூர் அடையும் குர்லா எக்ஸ்பிரஸ் இந்த நாட்களில் தாமதமாக செல்லும் என சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
    • தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஓசூரில் நேற்றிரவு லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக பெய்ய தொடங்கியது.

    இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

    மழைநீர் தேங்கியதால் ஓசூர் பஸ்நிலையம் குளம்போல் காட்சி அளிக்கிறது.

    இதே போல நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதே போல் தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஓசூர், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வேலை நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த அரசு பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார்.
    ஓசூர்:

    உத்தனப்பள்ளி அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி கலையரசன். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், தந்தை வழி பாட்டி அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளி சத்துணவை சாப்பிட்டு, கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு படித்து, மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். 

    நம்பிக்கை நட்சத்திரமான ரஜினி கலையரசன் எம்.டி படிப்பதற்காக தற்போது உத்தனப்பள்ளியில் கிளினீக் நடத்தி வருகிறார். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தாம் படித்த அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, அறிவியல் மற்றும் தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார் இளம் மருத்துவர்.  

    தன்னம்பிக்கை கதைகளையும், தாம் மருத்துவரான பின்புலங்களையும் எடுத்துரை மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். அயராத உழைப்பால், மனதை தளரவிடாமல் விடாமுயற்சியுடன் வீர நடைபோடும் மருத்துவர் ரஜினி கலையரசனின், சுயநலமில்லாத தொண்டை பாராட்டி மனம் நெகிழ்கிறார்கள் உத்தனப்பள்ளி வாசிகள்.
    ×