ஓசூரில் எத்தனால், ஆல்கஹால் பயன்படுத்தும் 3 தொழிற்சாலைகளில் போலீசார் ஆய்வு

போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
ஓசூரில் எத்தனால், ஆல்கஹால் பயன்படுத்தும் 3 தொழிற்சாலைகளில் போலீசார் ஆய்வு
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், மருந்து, மாத்திரை தயாரிக்கும் கம்பெனிகளும் அடங்கும்.

இந்த நிலையில், தங்கள் தயாரிப்புக்கு எத்தனால் மற்றும் ஆல்கஹால் பயன்படுத்தும் அங்குள்ள 2 மருந்து, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பூனப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலை என மொத்தம் 3 தொழிற்சாலைகளில் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, எத்தனால் மற்றும் ஆல்கஹால் இருப்பு சரியாக உள்ளதா, என்றும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் காலக்கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com