என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்நாடகாவில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: ஓசூரில் அணிவகுத்து நிற்கும் லாரிகள்
- காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழக எல்லையான ஓசூர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்:
கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் டீசன் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஸ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் ஏராளமான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லாமல், தமிழக பதிவு எண் மற்றும் பிற மாநில பதிவு எண் கொண்ட லாரிகள், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி, இ.எஸ்.ஐ. மருத்துவ மனை அருகே, மூக்கண்ட ப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் இன்று 2 -வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையில் இருந்து அத்தியாவசிய பொருட்களை எற்றி சென்ற லாரிகள் மட்டும் கர்நாடகா மாநிலத்திற்குள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
Next Story






