search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheating in private company"

    கிருஷ்ணகிரி அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஹவுசிங் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 47). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இதில் ஓசூர் பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மனைவி அகிலா ஆகிய 2 பேரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

    கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நிறுவனம் செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.

    உடனே வெங்கடேஷ் நிறுவனத்திற்கு சென்று கணக்குகளை சரிபார்த்தார். அப்போது ஆதித்யாவும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து நிறுவனம் சார்பில் பணம் கொடுக்கல், வாங்கலில் ரூ.5 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடத்தில் வெங்கடேஷ் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரையும் வெங்கடேஷ் பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யாவும், அகிலாவையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  #Tamilnews

    ×