search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka election"

    • பா.ஜனதாவின் 100 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியானது.
    • வேட்பாளர் பட்டியலை கர்நாடக பா.ஜனதா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

    பெங்களூரு:

    கா்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன. ஆனால் ஆளும் பா.ஜனதா இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் உள்ளது. சில தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று பா.ஜனதாவின் 100 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியானது. பா.ஜனதா பெயரில் வெளியான அந்த அறிக்கையில் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங்கின் கையெழுத்து இடம் பெற்றிருந்தது. இந்த வேட்பாளர் பட்டியலை கர்நாடக பா.ஜனதா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

    இது பா.ஜனதா பெயரில் போலி வேட்பாளர் பட்டியலை யாரோ சில விஷமிகள் வெளியிட்டு இருப்பதாகவும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. இந்த போலி வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி மல்லேசுவரம் போலீசில் பா.ஜனதாவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா பொதுச்செயலாளர் அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறுகையில், ''காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பா.ஜனதாவை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு எங்கள் கட்சியின் பெயரில் போலி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது, இன்னும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள். இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பப்படும்.'' என்றார்.

    • பா.ஜ.கவின் கொள்கை- கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜ.கவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கட்சி தாவல்கள் நடைபெற்று வருகின்றன. பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜ.கவில் இணையும் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பிற கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.

    இதில் நளின்குமார் கட்டீல் பேசியதாவது:-

    இன்று (நேற்று) முன்னாள் எம்.எல்.ஏ. நந்திஹள்ளி ஹாலப்பா, ஒக்கலிகர் சங்க முன்னாள் தலைவர் அப்பாஜி கவுடா போன்றவர்கள் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

    பா.ஜ.கவின் கொள்கை- கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜ.கவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பா.ஜ.க தான் நம்பிக்கையான கட்சி என்று மக்கள் கருதுகிறார்கள்.

    அவரவர் தகுதிக்கு ஏற்ப கட்சியில் பொறுப்பு வழங்கப்படும். அனைவரும் கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதி.

    பா.ஜ.கவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாங்கள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.

    • கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
    • இந்த தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என எடியூரப்பா தெரிவித்தார்.

    பெங்களூரு:

    முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

    ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். காங்கிரஸ் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அதனால்தான் அவர்கள் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். பா.ஜ.க.வில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்களை கர்நாடக மக்கள் வரவேற்கிறார்கள். எனவே கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறினார்.

    • 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பெங்களூரு:

    2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நிதி மோசடி வழக்கில் சிக்கி நாட்டைவிட்டு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோர் குறித்து பேசிய ராகுல் காந்தி, எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருக்கிறது? என்றார்.

    இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. ராகுல் காந்தி அடுத்த மாதம் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில் அடுத்த மாதம் 5ம் தேதி ராகுல் காந்தியின் முதல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. எனவே, இந்த முறை ராகுல் காந்தி என்ன பேசப்போகிறார்? ஆளுங்கட்சிக்கு எதிரான அவரது அஸ்திரம் என்ன? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ம் ஆண்டு தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் ஓராண்டில் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு பாஜகவே காரணம் என காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஒருவார காலம் ஓட்டலில் அடைத்து வைத்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். #Soniagandhi #Karnatakaelection
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பெற்ற பா.ஜ.க.வால் சட்டசபையில் போதுமான பெருபான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீர்மானித்தது.

    இதையொட்டி, சட்டசடை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பெங்களூரு நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கடந்த 8 நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று பெங்களூரு நகருக்கு வந்தனர்.

    பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் இடையே சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது, கடந்த ஒருவார காலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலுக்குள் சிறைப்படுத்தி அடைத்து வைத்திருந்ததை துரதிஷ்டவசமான சம்பவம் என குறிப்பிட்ட சோனியா, இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.


    தேர்தலில் நீங்கள் வெற்றியடைந்த பிறகும் உங்களது குடும்பத்தாரை விட்டு பிரித்து இங்கு தனியாக தங்க வைக்கப்பட்டிருந்ததற்கு காரணம் இருந்தது. வருமானவரி சோதனை என்று கூறி மிரட்டியும், வேறு ஆசைகளை காட்டியும் பா.ஜ.க. உங்களை வலையில் வீழ்த்த முயற்சித்தது. அந்த வலையில் விழுந்து விடாமல் இருந்ததற்காக நான் உங்களை பாராட்டுகிறேன்.

    நீங்கள் செய்த தியாகத்தை கட்சி ஒருநாளும் மறக்காது. உரிய வேளை வரும் போது தகுந்த முறையில் நீங்கள் எல்லாம் கவுரவிக்கப்படுவீர்கள் என அவர் குறிப்பிட்டார். #Soniagandhi  #Karnatakaelection

    கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி நிலைக்காது எனவும் தானாகவே கவிழ்ந்து விடும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #Karnataka #BJP #LaGanesan
    பழனி:

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பாரதிய ஜனதாவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள், பெரிய அளவிலான பயங்கரவாத மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறவில்லை.

    பாரதிய ஜனதா கட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்க பிரதமர் தமிழக கிராமங்களை நோக்கி வர உள்ளார். நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி சுருங்கி வருகிறது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி நிலைக்காது. தானாகவே கவிழ்ந்து விடும்.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் கசிவுகள் சரிசெய்யப்பட வேண்டும். அனைத்து விதமான முன்னோடி திட்டங்களையும் எதிர்த்து போராடி வரும் வைகோ போன்றோர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்புள்ளது. பெட்ரோல்- டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலை பெருமளவு குறையும்.


    தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்போது அரசு பள்ளிகளின் சேர்க்கை உயரும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பலமடைந்து வருகிறது.

    கோவில்களில் உள்ள சிலைகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். வருமானத்தை அதிகரிக்க கோவில் சொத்துக்களான கடைகள் போன்றவற்றிற்கு நியாயமான வாடகைகளை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்திய சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Karnataka #BJP #LaGanesan
    கர்நாடகாவில் வேட்பாளர் காலமானதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயாநகர் சட்டமன்ற தொகுதிக்கு பாஜக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், ஜெயாநகர் சட்டசபை தொகுதியின் பாஜக வேட்பாளாரக அறிவிக்கப்பட்டிருந்த பி.என் விஜயகுமார் மாரடைப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவை அடுத்து ஜெயநகர் தொகுதிக்கு மே 12-ம் தேதி நடைபெற இருந்த சட்டசபை தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

    இந்நிலையில், ஜெயாநகர் தொகுதியின் வேட்பாளராக மறைந்த பி.என் விஜயகுமாரின் சகோதரர் பி.என்.பிரஹலாத்தை பாரதிய ஜனதா கட்சி இன்று அறிவித்துள்ளது. ஜெயாநகர் தொகுதிக்கு வரும் ஜூன் மாதம் 11-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு ஜூன்13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection
    கர்நாடக தேர்தலில் ரூ.6,500 கோடியை பா.ஜனதா செலவிட்டு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #KarnatakaElection #BJP #congress
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகிலேயே மிகப்பெரும் பணக்கார அரசியல் கட்சியாக பா.ஜனதா உள்ளது. கர்நாடக தேர்தலில் ரூ.6,500 கோடியை பா.ஜனதா செலவிட்டு உள்ளது. இந்தப் பணம் எங்கு இருந்து வந்தது என்பது குறித்து பா.ஜனதா விளக்கம் அளிக்க வேண்டும்.

    எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற பண பலத்தையும், அரசு எந்திரத்தையும் பா.ஜனதா தவறாக பயன்படுத்தியது. இது குறித்து சுதந்திரமான விசரணை நடத்தப்பட வேண்டும்.

    கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. ஆனால் அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதை சுயநலத்துடன் பா.ஜனதாவும் ஏற்றுக்கொண்டது.



    ஆனந்த் சர்மா

    கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி அரசியல் கண்ணியத்தை தரம் தாழ்த்திவிட்டார். பிரசாரத்தின் போது அவர் பேசிய வார்த்தைகளின் மூலம் தன்னையும் பிரதமர் பதவியையும் தரம் தாழ்த்திவிட்டார். இதற்கு முன்பு பிரதமர்களாக இருந்த யாரும் மோடி போல் மோசமாக பேசியது இல்லை. தேர்தல் பிரசாரத்தில் பாதி பொய்-பாதி உண்மைகளை கூட மோடி தெரிவிக்க வில்லை. அவர் பேசிய அனைத்தும் பொய்களே. இதனால் தான் பா.ஜனதா தோற்றது.

    ஆனால் அதே நேரத்தில் கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 2 சதவீதம் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளன. தேர்தலின் போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.

    மத்தியில் பா.ஜனதா கூட்டணி அரசு அமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு மோடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElection2018 #BJP #congress
    கர்நாடகாவைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் மோடி அடுத்த மாதமே பா.ஜ.க. சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். #Parliamentelection #PMModi

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவி காலம் நிறைவு பெறுவதற்கு சரியாக ஓராண்டு உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. அடுத்த தேர்தலுக்கு ஓராண்டு இருந்தாலும் ஏப்ரல் மாதமே ஓட்டுப்பதிவு நடைபெறும் என்பதால் இப்போதே அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவும் உறுதியாக உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அவர்கள் இருவரும் சேர்ந்து வகுத்த அதிரடி திட்டங்கள் பா.ஜ.க. வெற்றிக்கு மிகவும் கை கொடுத்தன.

    அதுபோல 2019-ம் ஆண்டு தேர்தலிலும் புதிய வியூகங்களை அவர்கள் இருவரும் வகுக்க உள்ளனர். அவர்களது திட்டத்தின்படி அடுத்த மாதமே (ஜூன்) தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. சார்பில் முதல் பிரசார கூட்டத்தை நடத்த உள்ளார்.


    பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மத்தியில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்ல உள்ளார். அவருடன் அமித்ஷாவும் செல்கிறார். அங்கு நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் பேசுகிறார்கள்.

    இது 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் பிரசார கூட்டமாக கருதப்படுகிறது. அந்த கூட்டத்தில் பேசி முடித்த பிறகு மோடியும், அமித்ஷாவும் பீகார் மாநிலத்திற்கு சென்று பேச உள்ளனர்.

    இந்த பிரசார கூட்டங்களுக்கு இடையே புதிய நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக புர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழிதடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    இதற்கிடையே வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள கைரானா, நூர்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் அவர் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவை தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் பிரசாரம் தொடங்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாராணாசி தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருக்கும் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு தேர்தலிலும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் தனது தேர்தல் பிரசாரத்தை அந்த தொகுதியில் இருந்து அவர் தொடங்குவதாக கூறப்படுகிறது. #Parliamentelection #PMModi

    கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்து மந்திரிசபை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #JDS_Cong_Alliance #Kumaraswamy
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மந்திரிசபை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து குமாரசாமி விவாதித்தார்.

    அப்போது, எந்தெந்த துறைகளை காங்கிரசுக்கு ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 40 நிமிட சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த குமாரசாமி, “கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் மந்திரி சபை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என தெரிவித்தார்.

    நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
    காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என்று திருச்சியில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கூறினார்.#KarnatakaElection #Cauvery #Kumaraswamy
    செம்பட்டு:

    கர்நாடக முதல்-மந்திரியாக வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) பதவி ஏற்க இருக்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக குமாரசாமி நேற்று மாலை 6.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    பின்னர் அவர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் தரப்பில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், உதவி ஆணையர் ரத்தினவேல் ஆகியோர் குமாரசாமிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

    அதன்பிறகு அவர் பேட்டரி கார் மூலம் ஆரியபட்டாள் வாசல் வரை சென்றார். அங்கு கொடிகம்பத்தை தொட்டு வணங்கி விட்டு மூலவர் ரெங்கநாதரை தரிசித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.

    சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி நிருபர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடும், கர்நாடகமும் சகோதரர்கள் மாதிரி ஆகும். தண்ணீர் பிரச்சினையால் தமிழக விவசாயிகளும், கர்நாடக விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்டவன் அருளால் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி நதிநீர் பங்கீடு சுமுகமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்த காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளது. அதனால் 5 ஆண்டுகள் சுமுகமாக ஆட்சியை முடிப்பேன். தண்ணீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இதற்கு தமிழகம் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.



    அதன்பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியே வந்த குமாரசாமி பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அவர், இரவு 9.40 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, குமாரசாமி திருச்சி வந்ததும் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு தான் காவிரி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். காவிரி விவகாரத்தில் சில பிரச்சினைகளை இரு தரப்பிலும் சந்திக்கிறோம். கர்நாடக விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவை சரி செய்யப்பட வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எனது அரசு மட்டுமல்ல. யாராக இருந்தாலும் மதித்துத்தான் ஆக வேண்டும்.

    கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் ஆறுகள் வறண்டுபோய் கிடந்தன. இதனால் தான் இரு மாநிலங்களிலும் பிரச்சினை உருவானது. ஆனால் இந்த ஆண்டு ரெங்கநாதர் அருளால் நல்ல மழை பெய்து எங்கள் மாநிலத்தில் ஆறுகள் நிரம்பும் பட்சத்தில் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிரமமும் இருக்காது. எனது அரசு 5 ஆண்டுகள் நிலைத்து இருக்கும். அதுமட்டுமின்றி சிறந்த நிர்வாகத்தையும் தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்து இருப்பதாக கூறி, குமாரசாமியிடம் நேற்று பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. அப்படி இருக்க தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை. நான் ரஜினிகாந்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து நீங்கள் கர்நாடகத்திற்கு வாருங்கள். இங்குள்ள அணைகளின் நீர் இருப்பு பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

    எங்கள் மாநில விவசாயிகள் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டுமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #KarnatakaElection #Cauvery #Kumaraswamy
    கர்நாடக சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கி புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வரும் நிலையில், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வரவில்லை. KarnatakaFloorTest #CongressMLAs #BJP
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பா.ஜ.க. ஆட்சியமைத்ததால், மெஜாரிட்டியை நிரூபிக்க இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. காலையில் அவை கூடியதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க வரவில்லை. அவர்களின் பெயர்களை சபாநாயகர் வாசித்தபோது இருக்கையில் இல்லை. பின்னர் பிரதாப் கவுடா தாமதமாக வந்து பதவியேற்றார்.  இதே போல் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டியின் பெயரை சபாநாயகர் வாசித்த போது அவர் அவையில் இல்லை.

    எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரும்போது, மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வராமல் இருந்தாலோ, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அணி மாறி வாக்களித்தாலோ, அவையின் பலம் குறைந்து, எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடும்.

    எனவே, இன்று மாலை 4 மணிக்குள் மேலும் சில எம்.எல்.ஏ.க்களை வாக்கெடுப்பில் பங்கேற்க செய்யாமல், குறுக்கு வழியை பா.ஜ.க. நாடலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிலுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை குறி வைத்து பா.ஜ.க. தனது இறுதிக்கட்ட பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaFloorTest #CongressMLAs
    ×