search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identity Card"

    • மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது.
    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் கையேடு.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழப்பாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

    முன்னதாக வழிகாட்டி ஆசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பள்ளி வளர்ச்சி மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும், மாணவர்களின் கற்பித்தல் திறன் பற்றியும் கலந்துரையாடினர்.

    இல்லம் தேடி கல்வியில் மாணவர்கள் பங்குபெற கேட்டுக்கொள்ளப்பட்டது.

    கலை திருவிழா, குழந்தை களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு, இரண்டு வகுப்பறை கட்டிடம், கழிவறை கட்டி முடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அ டையாள அட்டை மற்றும் உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.

    மேலும், அனைவரும் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கூட்ட நிறைவில் மறைந்த உறுப்பினர் ஜெகதீசுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முடிவில் ஆசிரியர் மதன்கு மார் நன்றி கூறினார்.

    • 36 பேருக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த முகாமில் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து 247 மாற்றத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    இதில் அடையாள அட்டை பெறாத 38 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 36 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

    மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் பேசினார்.

    மேலும் இந்த முகாமில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • 107 தூய்மை பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    • மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் 107 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல்,பட்டா மாறுதல்,மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 329 மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாத்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவிஆணையர் கலால் ராஜ மனோகரன், தாட்கோ மேலாளர் சுந்தரராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மீனவ சமுதாயத்தை சேர்ந்த 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு.
    • சுற்றுலா தளங்களில் கடலோர போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    கடலோர பாதுகாப்பு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக முதற்கட்டமாக பணியில் சேர்ந்த 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

    தமிழக அரசின் அறிவிப்பின்படி, முதன்முறையாக நாகை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 45 நாட்கள் பயிற்சி முடித்த ஊர்காவல் படையினருக்கு நாகப்பட்டினத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் அடையாள அட்டைகளை வழங்கினார்‌.

    பணியில் நியமிக்கப்பட்ட அனைவரும் வேளாங்கண்ணி மற்றும் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கடலோர காவல்துறை பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள் என்றும், கடலில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக கடலோரங்களில் நடைபெறும் கடத்தல், அந்நியர்கள் ஊடுருவல்களை கண்காணிக்கும் பணி மற்றும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் உதவியாக பணியாற்றுவார்கள்‌‌.

    தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்படுள்ள நிலையில், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்துறை போலீசாருக்கு இணைப்பு பாலமாக திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நல வாரியம் சார்பில் கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இணையதளம் தொடங்கி அதன் மூலம் நாட்டுப்புற கலைகள் மற்றும் இயல், இசை, நாடகக் கலைஞர்களை நல வாரியத்தில் இணைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நல வாரியம் சார்பில் கலைஞர் களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ரூ. 1 லட்சம் நிதிஉதவி

    இதில் சிறப்பு அழைப்பாளராக வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு நெல்லை மண்டலத்தில் உள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களை சேர்ந்த கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    மறைந்த கலைஞர்களின் குடும்ப பராமரிப்புச் செலவுகளுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார். மேலும் வாரியத்தில் உள்ள கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்க ரூ. 25 ஆயிரம் என 127 பேருக்கு ரூ. 14½ லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    7 லட்சம் கலைஞர்கள்

    பின்னர் வாகை சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நெல்லை மண்டலத்தில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மண்டலங்களைச் சார்ந்த நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இயல், இசை, நாடக மன்றத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகள் சார்ந்த 7 லட்சம் கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. இதனை எளிமையாக்கும் வகையில் விரைவில் இணையதளம் தொடங்கி அதன் மூலம் நாட்டுப்புற கலைகள் மற்றும் இயல், இசை, நாடகக் கலைஞர்களை நல வாரியத்தில் இணைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.

    அடுத்த ஒரு வருடத்தில் இரண்டு லட்சம் கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் வருகிற 1,2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை மாற்றுத்திற னாளிகள் தவிர்க்கும் வகையில் கூடுதலாக வட்டார அளவில் அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் வரும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை திருமங்க லத்திலும், ஒவ்வொரு மாதமும் வரும் முதல் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை மேலூரிலும் இணை இயக்குநர், நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மதுரை (இ) உசிலம்பட்டி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

    நவம்பர் மாதத்தில் 1-ந் தேதி (செவ்வாய்) அன்று அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், 2-ந் தேதி (புதன்) அன்று அரசு மருத்துவமனை மேலூரிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவ அட்டை பெறாத மாற்றுத்தி றனாளிகள், தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 ஆகிய வற்றுடன் மேற்குறிப்பிட்ட தினங்களில் திருமங்கலம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50 சதவீதத்தினருக்கு மேல் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
    • 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் ஆதார் எண் இணைப்பு பணியில் பொதுமக்களின் வசதிக்காக மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த சிறப்பு முகாம்களில் 2,01,830 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண் போன்ற விவரங்களை படிவம் 66-ல் பூர்த்தி செய்து வாக்கு சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.

    8 சட்டமன்ற தொகுதிக ளில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினருக்கு மேல் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    இந்தப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் விடுபட்ட வாக்கா ள ர்களின் வசதிக்காக நாளை ( ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் மீண்டும் நடைபெற உள்ளது.

    இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 5 பி வலங்க இயலாத வாக்காளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட ( voters helpline ) செயலியை பதிவிறக்கம் செய்தும், ( voters portal ) என்ற இணையதளத்தின் மூலமும் அவர்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார்.

    நெல்லை:

    தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் முகாம் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் முருக பிரசன்னா முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.

    கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். முத்திரை ஆய்வாளர் விஷ்வநாதன், தொழிலாளர் துணை ஆய்வாளர் மாயாவதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் வசந்தா, கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரேமா ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். வித்யா மங்கல் பவுண்டேசன் நிறுவனர் ராகுல் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் 1513 பேருக்கு அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    • வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.
    • தெரு வியாபார சட்டப்படி குழுக்கள் அமைத்து தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் நியமிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தெருவோரத்தில் வியாபாரம் செய்து வரும் அனைவரையும் விடுபடாமல் கணக்கெடுத்து அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும், வியாபாரத்திற்கு அத்தாட்சியாக வியாபாரச் சான்று வழங்க வேண்டும், தெரு வியாபார சட்டப்படி குழுக்கள் அமைத்து தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் நியமித்து அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும், தெரு வியாபார சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வாடகையாக ஆண்டு கட்டணத்தை சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தஞ்சை மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தெருவியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். சங்க மாநில தலைவர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, மின்வாரிய சங்க. மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், பண்ணை சங்க மாநிலத் துணைத் தலைவர்திருநாவுக்கரசு, நூர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் சங்கமாநில தலைவர் சாமிக்கண்ணு , கட்டுமான சங்க துணை தலைவர் செல்வம், சங்க மாவட்ட குழ உறுப்பினர் கல்யாணி, திலகர் திடல் மார்க்கெட் சங்க செயலாளர் மணிகண்டன், வியாபார சங்க நிர்வாகிகள் பாலமுருகன், அயூப்கான், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா நன்றி கூறினார்.

    • கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது.
    • அனைவருக்கும் இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொது மக்களை பாதிக்காமல் தடுக்கும் வகையில் சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமார் 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2-வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது. குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடை வெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் வருகிற 30-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் முழு மையாக செலுத்தப் பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் தற்போது 12,78,000 பய னாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • ஓவியர் நலச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது
    • மாவட்ட தலைவர் தலைமை வகித்தார்

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ்நாடு ஓவியர் தொழிலாளர் நல மேம்பாட்டு சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட ஓவியர்கள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார், கௌரவ ஆலோசகர் கணபதி, அண்ணாமலை, கௌரவத் தலைவர் மணிமாறன், ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட தலைவர் கலையரசன் வரவேற்று பேசினார், மாவட்ட அமைப்புச் செயலாளர் அபூர்வா, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணாரஞ்சித், மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் தேவேந்திரன், மணி, அந்தோணிராஜ், மாவட்ட நல வாரிய பொறுப்பாளர் அசோக்பால்ராஜ், நாகை மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்ட பொருளாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் நாஜிலா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்பு உரையாற்றினார், நிகழ்ச்சி முடிவில் மாவட்ட பொருளாளர் அருள் செல்வன் நன்றி கூறினார்.

    • தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு பெல்ட், சூ, டைரி, ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.
    • ஆங்கில எழுத்துக்களை தனித்தன்மையாக எழுதும் பயிற்சியும், கராத்தே பயிற்சியும், பரதநாட்டியம் உள்ளிட்ட பன்முக திறன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இப்பள்ளி 1895ம் ஆண்டு துவங்கப்பட்டு 121 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் 3 கட்டிடங்களில் வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடனும் இயங்கி வருகிறது.

    மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு பெல்ட், சூ, டைரி, ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்தும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு மிடுக்கான தோற்றத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    பள்ளியில் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதியுடன் மொழிப்பாடம், ஆங்கில பேசும் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகிறது.

    மேலும் இப்பள்ளியில் ஆங்கில எழுத்துக்களை தனித்தன்மையாக எழுதும் பயிற்சியும், கராத்தே பயிற்சியும், பரதநாட்டியம் உள்ளிட்ட பன்முக திறன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

    இப்பள்ளியில் கழிவறை, குடிநீர் வசதி, கலையரங்கம் என அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாக உள்ளன 50 மாணவர்களுடன் இயங்கி வந்த இப்பள்ளியை தற்போது 89 மாணவர்களும், 96 மாணவிகளுடன் 18பேர் படிக்கின்றனர்.தனி நூலகம் உள்ளது.

    மாணவர்கள் வெறும் புத்தகப் புழுவாக இருக்காமல் பொது அறிவையும் தெரிந்து கொள்ளும் அளவில் இந்த நூலகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளி தூய்மைக்கான பள்ளி விருது, மாவட்டத்தில் சிறந்த பள்ளி விருது, சிறந்த பள்ளி மேலாண்மை குழு மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது

    இப்பள்ளியில் கணினி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக தட்சிணாமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது.இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பெல்ட், ஷூ, டைரி, அடையாள அட்டை வழங்கும் விழா பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாகூரான், துணைத்தலைவர் வீரராசு, ஆசிரியைகள் அனிதா, சந்தானமேரி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.

    தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளி செயல்பாட்டை பாராட்டி சமூக வலைதளங்களில் இப்பள்ளியின் செயல்பாடுகள் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    ×