என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vagai Chandrasekhar"
- தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நல வாரியம் சார்பில் கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- இணையதளம் தொடங்கி அதன் மூலம் நாட்டுப்புற கலைகள் மற்றும் இயல், இசை, நாடகக் கலைஞர்களை நல வாரியத்தில் இணைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.
நெல்லை:
தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைகள் நல வாரியம் சார்பில் கலைஞர் களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ரூ. 1 லட்சம் நிதிஉதவி
இதில் சிறப்பு அழைப்பாளராக வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு நெல்லை மண்டலத்தில் உள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களை சேர்ந்த கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
மறைந்த கலைஞர்களின் குடும்ப பராமரிப்புச் செலவுகளுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார். மேலும் வாரியத்தில் உள்ள கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்க ரூ. 25 ஆயிரம் என 127 பேருக்கு ரூ. 14½ லட்சம் நிதி உதவி வழங்கினார்.
7 லட்சம் கலைஞர்கள்
பின்னர் வாகை சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நெல்லை மண்டலத்தில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மண்டலங்களைச் சார்ந்த நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இயல், இசை, நாடக மன்றத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகள் சார்ந்த 7 லட்சம் கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. இதனை எளிமையாக்கும் வகையில் விரைவில் இணையதளம் தொடங்கி அதன் மூலம் நாட்டுப்புற கலைகள் மற்றும் இயல், இசை, நாடகக் கலைஞர்களை நல வாரியத்தில் இணைக்கும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.
அடுத்த ஒரு வருடத்தில் இரண்டு லட்சம் கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை:
தி.மு.க. எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெற்றிடம் என நினைத்து கட்சி தொடங்கி டுவிட்டர் கனவுகளில் மிதந்தபடி, அரசியல் செய்ய நினைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனக்கான விளம்பரம் தேடிக் கொள்வதற்காக தி.மு.க. நோக்கி விமர்சனம் செய்வது அவரது அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது.
அடிமைத்தனமும் அவலட்சண நிர்வாகமும் கொண்ட அ.தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கும் நேரத்திலும், அதற்கு சரிசமமாக தி.மு.க. மீதும் விமர்சனங்களைத் தொடுத்து, தன்னை ‘மய்ய’த்தில் நிற்கும் நடுநிலைவாதி போலக் காட்டிக் கொள்ளும் அரதப் பழசான டெக்னிக்கையே கமல் கையாள நினைக்கிறார்.
தி.மு.க. அழுக்குப் பொதி ஊழல் கட்சி என கமல் விமர்சித்திருக்கிறார். ‘கலைஞரிடம் தமிழ் கற்றேன்’ என்று சொல்லும் கமல், அந்தக் கலைஞரின் தலைமையில்தான் அரை நூற்றாண்டு காலம் இந்தப் பேரியக்கம் நெருக்கடி நெருப்பாறுகளில் எதிர் நீச்சல் போட்டு நிலைத் திருக்கிறது என்பதை மறந்தது எப்படி? மறைப்பது ஏன்?
திட்டமிட்டு புனையப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொண்டு புடம் போட்ட தங்கமாக வெற்றி பெற்ற இயக்கம் தி.மு.க.

திராவிடம் பற்றி விளக்க உரையாற்றும் கமல், திராவிடப் பேரியக்கமான தி.மு.க. மீது தீராவிடத்தைக் கக்குவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எவர் தூண்டி விடுகிறார்கள்?
தேர்தல் நேரத்தில் அவருக்குத் தோன்றிய திடீர் ஆசைகள் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயமா? பதற்றமா? தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதை அறிந்ததும், காங்கிரஸ் கட்சிக்கு தூது விட்டு அது முடியாமல் போனதால், தன் ஆற்றாமையைக் கொட்டுவதற்கு தி.மு.க.வின் மீது புழுதி தூற்றுவது அவரது அரசியல் கத்துக்குட்டித் தனத்தையே காட்டுகிறது.
தி.மு.க. மீது விமர்சனம் செய்யும் கமலுக்குத் தெரியாதா? ஊழலுக்காக உச்ச நீதிமன்றம் வரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி, தனது திரைப்படத்துக்கு கடும் நெருக்கடி தந்து, இந்த நாட்டை விட்டே வெளியேறும் மனநிலைக்குத் தள்ளிய ஜெயலலிதாதான் என்பது?
ஜெயலலிதாவை குன்ஹா கோர்ட்டே தண்டித்த நிலையிலும், அவர் உயிருடன் இருந்தவரை அது பற்றி வாய் திறக்க வக்கில்லாமல், அவர் இறந்த பிறகு திடீர் ‘விஸ்வரூபம்‘ எடுத்து வீர வசனம் பேசிய போதே கமலின் மேக்கப் மக்கள் முன் கலைந்து விட்டது.
கறுப்பா? காவியா?, கறுப்புக்குள் காவியா? என்று தன் நிலை என்னவென்ற குழப்பத்தில் இருக்கும் கமலுக்கு, கறுப்பு-சிவப்பு எனும் இரு வண்ணமும் தங்கள் உயிரிலும் உதிரத்திலும் கலந்திருக்கும் கோடானு கோடி தொண்டர்களைக் கொண்ட தி.மு.க. மீது பழி சுமத்த என்ன அருகதை உள்ளது.
அரசியல் என்பது படத்துக்குப் படம் மாற்றிக் கொள்கிற இயக்குநர்கள் அல்ல. அடித்தட்டு மக்களின் துன்ப துயரங்களில் துணை நிற்பதாகும். ஊராட்சிகள் தோறும் கூட்டம் நடத்தி மக்களைச் சந்திக்கும் இயக்கத்துக்கும், ஊர் சுற்றிப் பார்க்கப் போவது போல டூர் அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
‘இதுதான் எனக்கு கடைசி படம், நான் அரசியலுக்கு வந்து விட்டேன்’ என்று சொன்னவர், பிக்பாஸ்களிலும், திரைப்படங்களிலும் மீண்டும் நடிக்க வந்து விட்டு, மக்களுக்கு அளித்த முதல் வாக்குறுதியையே காப்பாற்றாத நிலையில் தி.மு.க.வைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?
வெற்றிடம் என நம்பி வந்து வீணாய்ப் போனவர், விரக்தியின் உச்சத்தில் நிதானம் தவறிப் பேசுகிறார். கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் கலைந்து போய்விட்ட தனது அரசியல் அரிதாரத்தை சரி செய்ய, அவதூறுச் சேற்றை கையில் அள்ளி முகத்தில் பூசி, புது மேக்கப் போடுகிறார் கமல். இனி அவர் போடும் வேடம் எதுவும் அரசியலில் எடுபடப் போவதில்லை.
இவ்வாறு வாகை சந்திரசேகர் கூறி உள்ளார். #KamalHaasan #DMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
