என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gopalasamuthiram"
- தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார்.
நெல்லை:
தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் முகாம் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் முருக பிரசன்னா முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.
கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். முத்திரை ஆய்வாளர் விஷ்வநாதன், தொழிலாளர் துணை ஆய்வாளர் மாயாவதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் வசந்தா, கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரேமா ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். வித்யா மங்கல் பவுண்டேசன் நிறுவனர் ராகுல் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் 1513 பேருக்கு அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
- கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபால சமுத்திரம் மற்றும் நெல்லையில் உள்ள அல் ஷிஃபா ஆயுஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
நெல்லை:
கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபால சமுத்திரம் மற்றும் நெல்லையில் உள்ள அல் ஷிஃபா ஆயுஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி வரவேற்று பேசினார்.
அல் ஷிஃபா மருத்துவமனை பொது நல மருத்துவர் ஏசுபிரியா தலைமையில் மருத்துவ குழுவினர்கள், செவிலியர்கள் இணைந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அல் ஷிஃபா மருத்துவமனை மேலாளர் முகமது முஸ்தபா சிறப்புரை ஆற்றினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் குமாரி நன்றி கூறினார். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்