search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "labours"

    • தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார்.

    நெல்லை:

    தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய அடையாள அட்டை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் முகாம் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் முருக பிரசன்னா முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.

    கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். முத்திரை ஆய்வாளர் விஷ்வநாதன், தொழிலாளர் துணை ஆய்வாளர் மாயாவதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் வசந்தா, கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரேமா ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். வித்யா மங்கல் பவுண்டேசன் நிறுவனர் ராகுல் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் 1513 பேருக்கு அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    • அகில இந்திய அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின்மாவட்ட மாநாடு கே.டி.சி. நகரில் நடைபெற்றது.
    • கட்டுமான பொருட்களான மணல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழக கட்டிட தொழி லாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் மற்றும் அகில இந்திய அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் நெல்லை மாவட்ட மாநாடு கே.டி.சி. நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தின் மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் நெல்லை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் குமாரசாமி, பொருளாளர் வேலு, துணைத் தலைவர் கோவிந்தன், மாநில பொருளாளர் பேச்சியப்பன், மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது கட்டுமான பொருட்களான மணல், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்ப டுத்தி தொழில் பாதிப்பின்றி நடைபெற வலியுறுத்தப்பட்டது.

    ஆட்டோ தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் கடன் உதவி வழங்க வேண்டும்.

    பென்ஷன் தாரர்களுக்கு ஓய்வூதிய தொகை ஆயிரத்திலிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதிய தொகை ரூ.500-ஐ ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விரைவுபோக்குவரத்து கழக மாவட்ட பொறுப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிமணி கலந்துகொண்டு பேசினார்.

    நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும்.சம வேலைக்கு சம ஊதியமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவேண்டும். ஊழியர்களை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்குரிய ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். எடை குறைவு இல்லாமல் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
    ×