search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார்"

    • முகாமில் குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம் உள்ளிட்ட ஆதார் சேவைகள் செய்து கொடுக்கப்படும்.
    • செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்குகள் முகாமிலே ஆரம்பித்து கொடுக்கப்படும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு இணைந்து பாவூர்சத்திரம் அஞ்சல் துறையுடன் ஆதார் திருத்தச் சிறப்பு முகாம் நடத்தியது.

    பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் கடந்த 24-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை,ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து 6 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் குழந்தை களுக்கு புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், 5 வயது முடிந்த குழந்தை களுக்கு ஆதார் புதுப்பித்தல், 15 வயது முடிந்த குழந்தை களுக்கு ஆதார் புதுப்பித்தல், ஆதார் எடுத்து 10 வருடம் முடிந்தவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் முதலிய ஆதார் சேவைகள் செய்து கொடுக்கப்படும்.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டார மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் கணக்கு கள் தொடங்க வேண்டி இருந்தால் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்றால் முகாமிலே சேமிப்பு கணக்கு ஆரம்பித்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சிக்கு பாவூர் சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் மற்றும் நிர்வாகி அருணாச்சலம் , ரஜினி, ஆனந்த், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாவூர்சத்திரம் அஞ்சல் துறை அதிகாரி ஜோதி வரவேற்று பேசினார். கல்லூ ரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார். வட்டார தலைவரும், கண்தானம் விழிப்புணர் குழு நிறுவனரும் ஆகியகே.ஆர்.பி. இளங்கோ, அஞ்சலக ஆய்வாளர் ராம சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றி கூறினார்.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, குமரி மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி நாகர்கோவில் மண்டல அலுவலகம் சார்பில் வங்கி சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம், நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. மாநகர மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் ஸ்ரீதர் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவி கள் வழங்கி பேசியதாவது:-

    பொதுத்துறை வங்கி களின் வாயிலாக பல்வேறு தரப்பட்ட கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரத ஸ்டேட் வங்கியானது அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாக திகழ்ந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்குட்பட்ட வங்கிகளின் மூலமாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு பல்வேறு கடனு தவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசால் வழஙங்கப்படும் கடனுதவிகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.

    பொதுமக்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு குறு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு வங்கி களின் வாயிலாக என்னென்ன கடனுதவிகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செப்டம்பர் முதல் கலை ஞரின் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல் பாட்டு வருகிறது. இதற்கான உதவி தொகை வங்கிகளில் நேரடியாக வழங்கப்படும். தற்போது விண்ணப்ப வினியோகம் வீடு, வீடாக நடக்கிறது. விண்ணப்ப பதிவு முகாம் 24-ந் தேதி தொடங்குகிறது.

    அந்தந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரம், இடம் நாள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்ப பதிவு நடக்கும். இந்த விண்ணப்ப பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் ஆதார் இணைத்த வங்கி கணக்கு புத்தகத்தை கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் பதிவு எளிதாக இருக்கும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. வங்கிகள் மக்கள் சேவையில் சிறந்து விளங்கு கின்றன. கடன் உதவிகளை முறையாக திரும்ப செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் ரூ.2.08 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப் பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள், கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் (சென்னை) சந்தீப்தா குமார் நாயக், நாகர்கோவில் மண்டல அலுவலர் பழனி சாமி, மாவட்ட தொழில் மைய அலுவலர் பெர்பெட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்க ப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பா லானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பி க்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி., நிறுவனம் மற்றும் எல்காட் சார்பில் இ -சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து சேவை மையங்களிலும் ஒரே மாதிரி சேவை அளிக்க உத்தரவிடப்பட்டது.பெரும்பாலான அரசு சேவைகள், இ-சேவை மையம் வாயிலாக மட்டுமே கிடைக்கிறது. போதிய சேவை மையங்கள் இல்லாததால் கூடுதல் சேவை மையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அவ்வகையில் மாவட்டத்தில் 540க்கும் அதிகமான தனியார் இ-சேவை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் இ-சேவை மையத்தில், அரசு சேவைகள் முறையாக வழங்க மின்னாளுமை முகமை வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கலெக்டர் அலுவலகத்தில் மின்னாளுமை திட்ட அலுவலர் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. உடுமலை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம் தாலுகாவுக்கு காலையும், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி தாலுகாக்களுக்கு மதியமும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மின்னாளுமை திட்ட முகமை மேலாளர் முத்துக்குமார், தனியார் இ-சேவை மையத்தினருக்கு பயிற்சி அளித்தார். சேவை மையம் அமைப்பது, அரசு வழங்கும் ரகசிய குறியீடு மற்றும் கடவு சொல்லை பயன்படுத்துவது, மக்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    அரசு அறிவித்த கட்டணத்தில் சேவைகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். விண்ணப்ப பதிவு விவரத்தை, விண்ணப்பதாரர் சரிபார்க்க வசதியாக சேவை மையங்களில் இரண்டு மானிட்டர் வசதி செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன.
    • அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

    உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-சேவை 2.0 என்ற திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய 194 சேவைகள் வழங்க திட்டமிட்டிருப்பதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 350 பொது இ-சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 550 இ-சேவை மையங்களை அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.

    தினமும் குறிப்பிட்ட அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதனால் அருகேயுள்ள வங்கிக்கிளைகள், தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.

    மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கவும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புக் காட்டும் அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பான் கார்டுஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, வரும் ஜூன் 30-ந் தேதி இறுதி நாள். பான் கார்டு எண் வைத்திருப்போர், ஆதாருடன் இணைப்பது கட்டாயம். இதற்காக வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.வரும் ஜூன் 30ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், பான் எண் செயலிழக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணைய பக்கத்துக்குள் சென்று லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்,லிங்க் ஆதார் என்ற இணைப்புக்குள் சென்று இணைப்பை சரிபார்க்கவோ, இணைக்கவோ செய்யலாம்.என ெதரிவிக்கப்பட்டுள்ளது.  

    • விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
    • ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை.

    திருநின்றவூர்:

    சென்னை புறநகர் பகுதியான ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சொத்துவரி செலுத்துபவர்கள் தங்களது ஆதார், பான் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அந்த கடித்தத்தில் சொத்து வரி செலுத்துபவர்கள் தங்களது செல்போன் எண், குடும்ப அட்டை எண், ஆதார், இ- மெயில் முகவரி, பான் எண், வணிக நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண் மற்றும் மின் இணைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும் பூர்த்தி செய்யப்பட்ட அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.

    ஆனால் விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த விபரம் சேகரிப்பு எதற்காக நடத்தப்படுகிறது என்ற தெளிவான விளக்கமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொது மக்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர்.

    இது குறித்து ஆவடியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'சொத்துவரி செலுத்துவோரிடம் இருந்து இது போன்ற விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன என்று மாநகராட்சி தெளிவான விளக்கம் கூறவில்லை.

    மின்இணைப்பு எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை வழங்க பொது மக்கள் தயங்குகின்றனர்' என்றார்.

    இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்பகராஜ் கூறும்போது, 'ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை. பல சொத்துக்கள் வேறு ஒருவருக்கு மாறி உள்ளது. இதுபற்றிய சரியான விபரங்கள் இல்லை.

    மேலும் எங்களிடம் உள்ள பெரும்பாலான தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் தற்போதைய சரியான விபரங்களை கேட்டு பதிவு செய்து வருகிறோம். பொது மக்கள் இது குறித்த விபரங்களை தயக்கம் இல்லாமல் அளிக்கலாம் என்றார்.

    • வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கலாம்.
    • ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத பள்ளி மாணவர்களுக்கு தபால் துறையின் கீழ் செயல்படும் ஐ.பி.பி.பி.மூலம் பள்ளியிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி இ-கேஒய்சி (விரல்ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணைய தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையை கழித்து பார்த்தால் 130.2 பேருக்கு ஆதார் எண்கள் உள்ளன' என்றார்.

    • குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • குடிநீர் வரி ரசீது நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் இரண்டையும் கொடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் தங்களின் குடிநீர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் காந்திராஜ் கூறுகையில் "கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் நடப்பு ஆண்டு குடிநீர் வரி ரசீது நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் இரண்டையும் கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    எனவே குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிர்க்க இந்த மாத (மார்ச்) இறுதிக்குள் பொதுமக்கள் கொடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம்.
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் ஆணையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நடைமுறை தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, வாக்காளர்கள் தங்களது கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ள பழைய வாக்காளர் அட்டையினை மாற்றுவதற்கோ, வாக்காளர் அடையாள அட்டை சேதம் அடைந்திருந்தாலோ அல்லது மாற்று அடையாள அட்டை வாங்குவதாக இருந்தாலோ படிவம் 8 - ஐ பூர்த்தி செய்து தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியரிடமோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ நேரிடையாக படிவத்தை வழங்கலாம். நேரில் வழங்க முடியாத வாக்காளர்கள் NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்களுக்கு அவர்களது வாக்காளர் அடையாள அட்டையானது விரைவு அஞ்சல் மூலமாக கட்ட ணமின்றி வாக்காளர்களின் முகவரிக்கே வந்தடையும்.

    இதுநாள் வரை வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காதிருந்தால், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை இணைப்பதற்கென பிரத்யேகமான சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளது. பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண் பொன்ற விவரங்களை படிவம் 6பி - இல் பூர்த்தி செய்து சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கலாம்.

    சிறப்பு முகாம் நடைபெறாத நாட்களில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கக்கூடிய நாட்களில் அலுவலக வேளை நேரத்தில் அதாவது காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் துணை வட்டாட்சியரிடம் படிவம் 6பி- இல் பொது மக்கள் தங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை வழங்கலாம். படிவம் 6பி- ஐ பூர்த்தி செய்து நேரில் வழங்க முடியாத வாக்காளர்கள் NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடலாம்.

    வாக்காளர்கள் தங்களது மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது மூலம் மொபைல் எண் வழியே மின்னணு வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயனர்கள் புதிய சிம் கார்டு வாங்கும் போது தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதி 2021-இல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • சுயமாக KYC செய்து கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக வி இருக்கிறது.

    மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் 2021 பயனர்கள் தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதியை அறிவித்து இருந்தது. தற்போது இதனை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை வி பெற்றுள்ளது.

    வி நிறுவனத்தின் Self-KYC வழிமுறை முதற்கட்டமாக கொல்கத்தா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. வி Self KYC பயனர்கள் புதிய சிம் கார்டு ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து, தாங்கள் விரும்பும் சலுகையை தேர்வு செய்து தங்களின் வீட்டில் இருந்தபடி KYC வழிமுறையை நிறைவு செய்து கொள்ளலாம்.

     

    இந்த வழிமுறையின் மூலம் பயனர்கள் நேரடியாக ரிடெயில் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது. புதிய சேவை மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டு இருக்கும் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாக வி நிறுவனம் தெரிவித்துள்ளது. படிப்படியாக இந்த சேவை நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும்.

    வி நிறுவனத்தின் Self KYC வழிமுறையை மேற்கொள்வது எப்படி?

    வி வலைத்தளம் சென்று விரும்பிய சலுகையை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

    தேர்வு செய்த சலுகையை உறுதிப்படுத்தி ஆர்டர் செய்யவும். இதற்கு மற்றொரு மொபைல் நம்பர் மூலம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும்.

    இனி Self KYC மேற்கொள்ள UIDAI வலைத்தளத்தில் ஆதார் சமர்பித்தல் வழிமுறையை நிறைவு செய்ய வேண்டும்.

    அடுத்து குறைந்தபட்சம் பத்து நொடிகளுக்கு லைவ் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

    ஆர்டர் செய்தபின் டிஜிட்டல் வெரிஃபிகேஷனை முடித்ததும், வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு அவர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டுவிடும். 

    தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் சித்ரா விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- 

    மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரு தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் கமுதி, ராஜசிங்கமங்களம், கீழக்கரை, முதுகுளத்தூா், ராமேசுவரம் உள்ளிட்ட 29 துணை தபால் நிலையங்க ளிலும் வருகிற 30- ந்தேதி வரையில் ஆதாா் சோ்க்கை மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் புதிதாக ஆதாா் அட்டை எடுக்க விரும்புவோா், இலவசமாகவும், ஆதாா் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோா் ரூ.50 கட்டணம் செலுத்தியும் பயனடையலாம். 

    சிறப்பு முகாம்களில் அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு கணக்குகளையும் தொடங்கலாம்.

    முகாமில் பங்கேற்க விரும்புவோா் இரு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகல்களை்  கொடுத்து சேமிப்புத் திட்டத்தில் சேரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
    ×