search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identity Card"

    • இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும்
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்தி றனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும்.

    முதல் வார செவ்வாய் கிழமைகளில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.

    எளிதில் வருவதற்கு ஏதுவாக அமைந்துள்ள மின்னல் ஊராட்சி என்.எல்.பி.திருமண மண்டபத்தில் நடைபெறும். 3 வார செவ்வாய்கிழமைகளில் கலவை,திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக,ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.

    ஜூன் மாத முதல் வார செவ்வாய்கிழமையான வருகிற 6-ந் தேதி அன்று மின்னல் ஊராட்சியில் நடைபெறுகிறது.

    அந்த சமயத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறாது.

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் வரவேண்டும்.

    பழைய அடையாள அட்டை தவற விடப்பட்டிருப்பின் புதியதாக பெற வேண்டுமெனில் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பெற்று வந்தும் விண்ணப்பித்தும் புது அட்டை பெற்றுக் கொள்ளலாம். பழைய அடையாள அட்டை இருப்பின் அதன் அசல் அவசியம் கொண்டு வர வேண்டும்.மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
    • 8 பேருக்கு வயது வரம்பு தளர்த்தி உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிக ளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    கண், காது மூக்கு தொண்டை, எலும்பு முறிவு, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளில் உடல் பாதிப்புகளை பரிசோதித்து, அடை யாள அட்டைக்கு பரிந்துரை த்தனர். நேற்றைய முகாமில், மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு புதிதாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், அடையாள அட்டை வழங்கினார். 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு, வயது வரம்பு தளர்த்தி, மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

    • அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் 3 இடங்களில் நடைபெறுகிறது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திற னாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுவரை மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் 3 இடங்களில் நடைபெறுகிறது.

    அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) தஞ்சை கோட்டத்தில் தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியிலும், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் பஸ் நிலையம் அருகில் உள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்திலும், 23-ந்தேதி பட்டுக்கோட்டை கோட்டத்தில் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராமசேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    இதில் எலும்பு முறிவு டாக்டர், காதுமூக்குதொண்டை பிரிவு டாக்டர், மனநல டாக்டர், கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். மேற்படி டாக்டர்கள் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்கள் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அடடைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் கூறிய ஆவணங்களுடன் மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • கட்சியினர் ரகுராமன்,லாரன்ஸ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சமூக நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.

    பயனாளிகளுக்கு நிதி உதவி அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் தோறும் செலுத்தப்படும்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்தி வேல், துணைத் தொகுதி செயலாளர் ஆரோக்கிய ராஜ், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர் செல்வம் மற்றும் கட்சியினர் ரகுராமன், லாரன்ஸ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இதில், 21 மாற்றுத்தி றனா ளிகளுக்கு குறைதீர்ப்புக்கு கூட்டத்திலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    உதவி கலெக்டர் தணி காச்சலம் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலு வலர் மகிழ்நன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி கள் வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகை உட்பட 75 மனுக்களை உதவி கலெக்டரிடம் கொடுத்தனர்.

    இதில், 21 மாற்றுத்தி றனா ளிகளுக்கு குறைதீர்ப்புக்கு கூட்டத்திலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மேட்டூர்அரசு மருத்துவமனை டாக்டர் சுரேந்திரன், விவேகானந்தன், மேட்டூர் தாசில்தார் முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • கொேரானா, இதயம், புற்றுநோய், முடநீக்கு, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
    • திருப்பூா் மாவட்டத்தில் 36 மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5.31 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொேரானா நோய்த் தொற்று சிகிச்சை, இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், முடநீக்கு அறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகள், 28 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 36 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 260 குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், 2021 ம் ஆண்டு மே 7 ந் தேதி முதல் 2023 ம் ஆண்டு மாா்ச் 14 -ந் தேதி வரையில் 18,555 நபா்களுக்கு ரூ.4.84 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் அட்டையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குகீழ்) ஆகிய ஆவணங்களை தயாா் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம் அறை எண் 3ல் வேலை நாட்களில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.
    • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் முதியோர், விதவை, முதிர் கன்னிகள் ஆகியோருக்கு உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 300 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்க

    வேலு, கலை , இலக்கிய பிரிவு சந்திரன், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
    • ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்றிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந்தேதி ெதாடங்கி நடைபெற்றது.

    திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம், காங்கயம், குண்டடம், ஊத்துக்குளி, குடிமங்கலம், பொங்கலூர்,வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியங்களில் முகாம் நடத்தப்பட்டது.அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று, அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் கேட்டு விண்ணப்பங்கள் அளித்தனர்.

    கண், எலும்பு முறிவு, காது - மூக்கு - தொண்டை, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர். ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது.

    இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்கும்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27 முதல் இம்மாதம் கடந்த 14ந் தேதி வரை முகாம் நடத்தப்பட்டுள்ளது.

    முகாமில் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 349 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்காக 430 விண்ணப்பங்கள், 21வகையான உதவி உபகரணங்கள் கேட்டு 112 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொழில் துவங்குவதற்கான வங்கி கடன்கள் கேட்டு 32 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.

    • நலத்திட்ட உதவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் முகாம் பல்லடம் மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் 65 நபர்களிடமிருந்து பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஆகியவை இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் முகாம் பல்லடம் மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் மாற்றுத்திறனாளிகள் 36 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது. மேலும் இந்த முகாமில் அரசின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வங்கி கடன் மானியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் 65 நபர்களிடமிருந்து பெறப்பட்டது.

    இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன்,ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியம்.
    • மாற்றுத்திறனாளிகள் எழுத்து பூர்வமாக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியமாகும்.

    ஆண்டிற்கு ஒரு முறை வழங்க வேண்டிய மாற்றுத்திறனாளி உயிருடன் உள்ளார் என்று சம்மந்தப்பட்ட கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 6ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 30.12.2022-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க உதவித் தொகையினை தொடர்ந்து பெற்றிடவும் ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் எழுத்துபூர்வமாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும்.

    மாத உதவித்தொகை பெறுபவர்கள் மட்டுமன்றி அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தங்களது அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 15-ம் தேதி முதல் 28-ந் தேதி வரை கமலா சுப்ரமணியம் பள்ளியில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.
    • அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 200 விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இதையடுத்து இவற்றில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 15 ஆம் தேதி முதல் 28-ந் தேதி வரை தஞ்சாவூர் -புதுக்கோட்டை சாலையில் உள்ள கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

    இதற்கான அனுமதி சீட்டை விண்ணப்பித்த இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாற்று திறனாளி விண்ணப்பதாரர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட மாற்று திறனாளி சான்றிதழ் அல்லது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
    • நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம்:

    மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பில் காஞ்சிபுரத்தி லுள்ள நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி அவ்வை நகரில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் ஆர்.சசிகலா தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் டி.சங்கர், கு.மொழிமாறன், ஜி.வேலு, கைத்தறி சங்க பணியாளர் ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×