என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Insurance Scheme"

    • கொேரானா, இதயம், புற்றுநோய், முடநீக்கு, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
    • திருப்பூா் மாவட்டத்தில் 36 மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5.31 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொேரானா நோய்த் தொற்று சிகிச்சை, இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், முடநீக்கு அறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகள், 28 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 36 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 260 குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், 2021 ம் ஆண்டு மே 7 ந் தேதி முதல் 2023 ம் ஆண்டு மாா்ச் 14 -ந் தேதி வரையில் 18,555 நபா்களுக்கு ரூ.4.84 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் அட்டையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குகீழ்) ஆகிய ஆவணங்களை தயாா் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம் அறை எண் 3ல் வேலை நாட்களில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
    • ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கும்.

    தேசிய காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா" (AB PM-JAY) திட்டத்தின் கீழ் ஆறு கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    "இந்த ஒப்புதலுடன், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் AB PM-JAY திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியான மூத்த குடிமக்களுக்கு AB PM திட்டத்தின் கீழ் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும்," என்று அரசு சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே AB PM-JAY திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), மற்றும் ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஏற்கனவே உள்ள காப்பீடு திட்டம் அல்லது புதிய காப்பீடு திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

    மத்திய அரசு அறிவிக்கையின் படி AB PM-JAY திட்டம் தற்போது நாடு முழுவதும் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கும்.

    ×