என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவ காப்பீடு திட்டம்"
- தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூரில் இன்று தமிழ்நாடு அரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.11.82 கோடி மதிப்பில் 16 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ.7.45 கோடி மதிப்பில் 13 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினர்.
விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது :-
புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதால் வருமுன் காக்கும் விதமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் ரூ.1,000 முதல் ரூ.4 ஆயிரத்தில் செய்து கொள்ளலாம்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.
உயர் வருவாய் பிரிவினரும் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்பட 13 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல மேலும் 9 மாவட்டங்களில் கட்டண சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை கட்டணம் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் மொத்தம் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 9.50 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏறக்குறைய 50 ஆயிரம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. இக்குழந்தைகளைக் கண்காணித்து, பராமரிப்பதற்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.
தஞ்சாவூர் மருத் வக்கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 65.80 கோடி மதிப்பில் 80 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ 23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவை தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு அடுத்த மாதம் வருகை தரும்போது திறக்கவுள்ளார். அரசு ராசாமிராசுதாரர் மருத்துவமனை மேலும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கும்.
தேசிய காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா" (AB PM-JAY) திட்டத்தின் கீழ் ஆறு கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"இந்த ஒப்புதலுடன், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் AB PM-JAY திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியான மூத்த குடிமக்களுக்கு AB PM திட்டத்தின் கீழ் புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும்," என்று அரசு சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே AB PM-JAY திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கூடுதல் டாப்-அப் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), மற்றும் ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஏற்கனவே உள்ள காப்பீடு திட்டம் அல்லது புதிய காப்பீடு திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
மத்திய அரசு அறிவிக்கையின் படி AB PM-JAY திட்டம் தற்போது நாடு முழுவதும் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கும்.






