search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    21 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
    X

    மாற்றுத்திறனாளி ஒருவரிடம் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாச்சலம் மனு பெற்ற போது எடுத்த படம்.

    21 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

    • மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இதில், 21 மாற்றுத்தி றனா ளிகளுக்கு குறைதீர்ப்புக்கு கூட்டத்திலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    உதவி கலெக்டர் தணி காச்சலம் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலு வலர் மகிழ்நன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி கள் வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகை உட்பட 75 மனுக்களை உதவி கலெக்டரிடம் கொடுத்தனர்.

    இதில், 21 மாற்றுத்தி றனா ளிகளுக்கு குறைதீர்ப்புக்கு கூட்டத்திலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மேட்டூர்அரசு மருத்துவமனை டாக்டர் சுரேந்திரன், விவேகானந்தன், மேட்டூர் தாசில்தார் முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×