search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைப்பு"

    • தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும்.
    • விவசாயிகள் தங்கள் பகுதி இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் நளினி வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் தட்கல் முன் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஏற்கனவே தட்கல் முறையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயி களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுயேட்சை கவுன்சிலர் சங்கர் தி.மு.க.வில் இணைந்தார்
    • அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், ஏராளமானவர்களுடன் இணைந்தார்

     திருச்சி,

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி மாநகரக் தி.மு.க. செயலாளர் மு.மதிவாணன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் ஆர்.ஜி. பாபு ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 20 சார்ந்த சுயேட்சை மாமன்ற உறுப்பினரும், தே.மு.தி.க . மாவட்ட கழகத் துணைச் செயலாளருமான எல்.ஐ.சி.சங்கர் மற்றும் 50க்கு மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அ.த.த.செங்குட்டுவன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன் மற்றும் வட்டச் செயலாளர்கள் சுருளிராஜன், செந்தில், மாவட்ட அமைப்பாளர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பரமக்குடியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி முன்னிலையில் அ.ம.மு.க. பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏழுமலையான், பரமக்குடி தெற்கு நகர் செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ராஜீவ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் குணசேகரன்.

    மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜா, அவைத்தலைவர் சங்கிலி, இணைச் செயலாளர் வனிதா தேவி, நிர்வாகிகள் உஷா, அர்ஜு னன், கிருஷ்ண பரமாத்மா, முனியசாமி, செல்வி, சசிகலா, கணேசன், பூமி நாதன், சிங்கம்துரை, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரகு வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தையா, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மாவட்ட துணைச் செய லாளர் பாதுஷா, பரமக்குடி நகரச்செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் தங்கவேலு.

    ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், காட்டுப் பரமக்குடி வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

    • மின் மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் பொருத்தி தண்ணீர் குழாய் இணைப்புகள் விரிவுபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி சின்ன வடுகபாளையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வருவதில்லை. இதையடுத்து, கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் பொருத்தி தண்ணீர் குழாய் இணைப்புகள் விரிவுபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை தாங்கினார். ஆழ் குழாய் கிணறு இணைப்பு விரிவாக்க பணிகளை பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் மணிமேகலை அன்பரசன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.
    • நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்ற னர். இதில் 20,300 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 130 லிட்டர் வீதம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், சாக்கடை கட்டணம் உள்ளிட்ட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி களை செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.

    இதனால் வரி செலுத்த முன்வராதவர்களின் வீடு களில் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் அதிரடி காட்டி வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
    • மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு அவர் நிருபர்களிடம் கூறும்போது,

    நாங்கள் வாழப்பாடி பகுதியில் வசித்து வருகிறோம். நான், என்னுடன் தங்கை மற்றும் தம்பி ஆகிய 3 பேரும் கல்லூரியில் படித்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மின்சார அலுவலகத்தில் மனு அளித்திருந்தோம்.

    இந்த நிலையில் மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு, மின் இணைப்பு வழங்க விடாமல் மிரட்டி வரும் தி.மு.க கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார்.
    • தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி புனித செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் மார்க்ரெட் பாஸ்டின் முன்னிலை வகித்தார். தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்தின்போது வட்டார அளவில் நடத்தப்பட்ட தேசிய வாக்காளர் தினம் சம்பந்தமான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, பாடல் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு, தனக்கு ஒதுக்கப்பட்ட பாகம் எண்.28-ல் உள்ள வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார். அவருக்கு பாராட்டு சான்றிதழை வட்டாட்சியர் சாந்தி வழங்கினார். அவருடன் இணைந்து சிறப்பாக பணிபுரிந்த இதர அலுவலர்கள் 15 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது

    இதில் மண்டல துணைதாசில்தார் சிவராமன், தேர்தல் பணி தாசில்தார் சந்திரபோஸ், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர், மற்றும் கல்லுாரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
    • இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சேலம்:

    சேலம், அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் வீடு பூட்டப்பட்டு காலியாக இருந்த காலத்திற்கு மின்கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை என்று மஞ்சுளா மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நிலுவை கட்டணம் ரூ.4,120 கட்டிதான் ஆகவேண்டும் என்றும், தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மஞ்சுளாவுக்கு உதவி பொறியாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.

    இதை தொடர்ந்து மஞ்சுளா மின்வாரியம் மீது சேவை குறைபாடு, மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கோரி தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலானய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    மேலும் வழக்கு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.

    அதனை விசாரித்த சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கணேஷ்ராம் வருகிற 6.1.2023 வரை மஞ்சுளா பெயரில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது எனவும், மேலும் மின் பகிர்மான கழக உதவி பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் அன்று ஆஜராகி தங்களது பதிலை தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டார்.

    • உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியம்.
    • மாற்றுத்திறனாளிகள் எழுத்து பூர்வமாக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியமாகும்.

    ஆண்டிற்கு ஒரு முறை வழங்க வேண்டிய மாற்றுத்திறனாளி உயிருடன் உள்ளார் என்று சம்மந்தப்பட்ட கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 6ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 30.12.2022-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க உதவித் தொகையினை தொடர்ந்து பெற்றிடவும் ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் எழுத்துபூர்வமாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும்.

    மாத உதவித்தொகை பெறுபவர்கள் மட்டுமன்றி அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தங்களது அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை வருகிற 15-ந் தேதிக்குள் இணைத்து, பி.எம் கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி செய்வது அவசியம்.
    • அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன், தொலை பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

    சேலம்:

    மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை வருகிற 15-ந் தேதிக்குள் இணைத்து, பி.எம் கிசான் இணைய தளத்தில் இ-கே.ஒய்.சி செய்வது அவசியம். எனவே அருகில் அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன், தொலை பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

    மேலும் அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து போஸ்ட் மேன் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் ஆதாருடன் தொலைபேசி எண் இணைத்தல், திருத்தம் மற்றும் 5 வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல் ஆகிய 2 வகையான ஆதார் சேவைகளையும் வழங்கி வருகிறது என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

    • திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது.
    • இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது. நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடை மற்றும் குத்தகை தொகையை செலுத்தகோரி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரியினங்கள், கடை வாடகை ஆகியவற்றை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    • செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது.

    திருப்பூர்:

    மங்களூருவில் இருந்து கச்சிக்குடாவுக்கு இயக்கப்படும் ெரயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.புதன், சனிக்கிழமை தோறும் கர்நாடகமாநிலம், மங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு செல்லும்.இந்த ெரயிலில் தற்போது, 22 பெட்டிகள் உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.இதே போல், மறுமார்க்கமாக கச்சிக்குடாவில் இருந்து மங்களூருவரும் ரெயிலிலும் ஒருஏ.சி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து திருப்பூர் வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயிலில் இரண்டு முன்பதிவு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

    செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. 21 பெட்டிகளுடன் பயணித்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல் கூடுதலாக இரண்டு முன்பதிவு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பதிவில் புதிய இலக்கை ஜனசதாப்தி ரயில் எட்டியுள்ளது.

    முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது. கூடுதலாக இரண்டு பெட்டி சேர்த்து 21 பெட்டியானதால், முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,320 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் இவ்வளவு முன்பதிவு இருக்கைகளுடன் இயங்கும் ஒரே ெரயில் ஜனசதாப்தி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×