search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 சதவீத ஆதார் எண் இணைப்பு
    X

    100 சதவீத ஆதார் எண் இணைப்பு

    • 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார்.
    • தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி புனித செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் மார்க்ரெட் பாஸ்டின் முன்னிலை வகித்தார். தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்தின்போது வட்டார அளவில் நடத்தப்பட்ட தேசிய வாக்காளர் தினம் சம்பந்தமான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, பாடல் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு, தனக்கு ஒதுக்கப்பட்ட பாகம் எண்.28-ல் உள்ள வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார். அவருக்கு பாராட்டு சான்றிதழை வட்டாட்சியர் சாந்தி வழங்கினார். அவருடன் இணைந்து சிறப்பாக பணிபுரிந்த இதர அலுவலர்கள் 15 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது

    இதில் மண்டல துணைதாசில்தார் சிவராமன், தேர்தல் பணி தாசில்தார் சந்திரபோஸ், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர், மற்றும் கல்லுாரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×