search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disconnection"

    • பொதுப்பணித்துறை அறிவிப்பு
    • முன் அறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடிநீர் வரிக்கான கட்டணத்தை செலுத்த பொது சுகாதார கோட்டம், பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் அளவு கணக்கீட்டாளர் கணக்கெடுத்து ரசீது வழங்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வரி ரசீது பெற்றோர் அதில் குறிப்பிட்ட வரியை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் முன் அறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    மீண்டும் மறு இணைப்புக்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டு நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் வரி, பயன்பாட்டு வரி மார்ச் முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டதணத்தையும் செலுத்த வரி கேட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. இந்த ரசீது கிடைத்த 30 நாட்களுக்குள் குடிநீர், கழிவுவரி கட்டணங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றார் தாசில்தார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது.

    இருந்தபோதிலும் மற்ற பகுதிகளில் அந்த வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசமும் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

    விமான நிலைய நிலைய நிலஎடுப்பு தனி தாசில்தார் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையினர் கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் மின்சாரத்தை துண்டித்து , மீட்டர்களை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் கூறியதாவது எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் தந்தால் நாங்களாகவே காலி செய்து விடுவோம்.

    திடீரென்று மின்சாரத்தை துண்டித்ததால் தற்சமயம் கோடை காலம் என்பதால் எங்களால் குடி இருக்க முடியவில்லை. பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் மின்சாரம் இல்லாமல் எப்படி இருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்.இது குறித்து தனி தாசில்தார் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதி பொதுமக்களுக்கு ஒரு மாத காலம் கால அவகாசம் அளித்திருந்தோம். அதன் பிறகும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. எனவே மாவட்ட கலெக்ட ரின் உத்தரவுப்படி மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றார்.

    • சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலும், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் வகையிலும் சாயப்பட்டறைகள் இயங்கு வதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம் தலை மையில் உதவி என்ஜினீ யர்கள் ஜாரி கொண்டலாம்பட்டி, சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, நெய்கா ரப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு செய்தனர்.

    அதில், சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    • கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.
    • நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்ற னர். இதில் 20,300 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 130 லிட்டர் வீதம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், சாக்கடை கட்டணம் உள்ளிட்ட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி களை செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.

    இதனால் வரி செலுத்த முன்வராதவர்களின் வீடு களில் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் அதிரடி காட்டி வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

    • ராஜபாளையம் அருகே குடிநீர் திருடிய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
    • செயல் அலுவலர் வெங்கடகோபு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் சேத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி 16-வது வார்டு முகவூர் ரஸ்தா கீழ்புறம் முறையற்ற போலி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவதாக புகார் வந்தது.

    இதனையடுத்து செயல் அலுவலர் வெங்கடகோபு நேரடியாக களத்தில் இறங்கி முகவூர் ரஸ்தா பகுதியில் ஆய்வு செய்தார். அதில் முறையற்ற போலி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் திருடி வருவது கண்டறியப்பட்டு பணியாளர்களால் உடனடியாக அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    மேலும் முறையற்ற குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒருவார காலத்திற்குள் தாங்களாக முன்வந்து தங்களது முறையற்ற குடிநீர் இணைப்பினை துண்டிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு தொடர்ந்து துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

    மேலும் இழப்பீட்டு தொகை பல மடங்காக உயர்த்தி வசுலிக்கப்படும் என்று செயல் அலுவலர் வெங்கடகோபு எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின்போது குடிநீர் கட்டணம் செலுத்தாத 19 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    • நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது
    • 10 வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது.

    சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாததற்காக பாளை மண்டல பகுதியில் 3 வீடுகள், மேலப்பா ளையம் மண்டல பகுதியில் 2 வீடுகள் உள்பட மொத்தம் 10 வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர். மேலும் இதுகுறித்து கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், வரி செலுத்துபவர்கள் நலனுக்காக வரி வசூல் மையங்கள் வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும். எனவே பொதுமக்கள் மாநகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட் டண வரியை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

    • அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
    • இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சேலம்:

    சேலம், அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் வீடு பூட்டப்பட்டு காலியாக இருந்த காலத்திற்கு மின்கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை என்று மஞ்சுளா மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நிலுவை கட்டணம் ரூ.4,120 கட்டிதான் ஆகவேண்டும் என்றும், தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மஞ்சுளாவுக்கு உதவி பொறியாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.

    இதை தொடர்ந்து மஞ்சுளா மின்வாரியம் மீது சேவை குறைபாடு, மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கோரி தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலானய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    மேலும் வழக்கு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.

    அதனை விசாரித்த சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கணேஷ்ராம் வருகிற 6.1.2023 வரை மஞ்சுளா பெயரில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது எனவும், மேலும் மின் பகிர்மான கழக உதவி பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் அன்று ஆஜராகி தங்களது பதிலை தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டார்.

    • திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது.
    • இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது. நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடை மற்றும் குத்தகை தொகையை செலுத்தகோரி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரியினங்கள், கடை வாடகை ஆகியவற்றை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    • ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் காகித கப்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இனிமேல் பிளாஸ்டிக் கப்கள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சேலம் கோட்ட என்ஜினீயர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று தாதம்பட்டியில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் காகித கப்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏரித் தெரு வில் இயங்கிய தனியார் பேப்பர் கப்ஸ், சூலக்கரை உடையார் தெருவில் இயங்கிய பேப்பர் கப்ஸ் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. இனிமேல் பிளாஸ்டிக் கப்கள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர், விற்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு உற்பத்தி எந்திரங்களும் முடக்கப்படும், என்றனர்.

    ×