search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீரை வெளியேற்றிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
    X

    கழிவுநீரை வெளியேற்றிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

    • சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலும், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் வகையிலும் சாயப்பட்டறைகள் இயங்கு வதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம் தலை மையில் உதவி என்ஜினீ யர்கள் ஜாரி கொண்டலாம்பட்டி, சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, நெய்கா ரப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு செய்தனர்.

    அதில், சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    Next Story
    ×