search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
    X

    கோப்பு படம்.

    வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

    • பொதுப்பணித்துறை அறிவிப்பு
    • முன் அறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடிநீர் வரிக்கான கட்டணத்தை செலுத்த பொது சுகாதார கோட்டம், பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் அளவு கணக்கீட்டாளர் கணக்கெடுத்து ரசீது வழங்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வரி ரசீது பெற்றோர் அதில் குறிப்பிட்ட வரியை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் முன் அறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    மீண்டும் மறு இணைப்புக்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டு நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் வரி, பயன்பாட்டு வரி மார்ச் முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டதணத்தையும் செலுத்த வரி கேட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. இந்த ரசீது கிடைத்த 30 நாட்களுக்குள் குடிநீர், கழிவுவரி கட்டணங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×