search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுயேட்சை கவுன்சிலர் தி.மு.க.வில் ஐக்கியம்
    X

    சுயேட்சை கவுன்சிலர் தி.மு.க.வில் ஐக்கியம்

    • சுயேட்சை கவுன்சிலர் சங்கர் தி.மு.க.வில் இணைந்தார்
    • அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், ஏராளமானவர்களுடன் இணைந்தார்

    திருச்சி,

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி மாநகரக் தி.மு.க. செயலாளர் மு.மதிவாணன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் ஆர்.ஜி. பாபு ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 20 சார்ந்த சுயேட்சை மாமன்ற உறுப்பினரும், தே.மு.தி.க . மாவட்ட கழகத் துணைச் செயலாளருமான எல்.ஐ.சி.சங்கர் மற்றும் 50க்கு மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அ.த.த.செங்குட்டுவன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன் மற்றும் வட்டச் செயலாளர்கள் சுருளிராஜன், செந்தில், மாவட்ட அமைப்பாளர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×