search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சையில், தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.
    • தெரு வியாபார சட்டப்படி குழுக்கள் அமைத்து தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் நியமிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தெருவோரத்தில் வியாபாரம் செய்து வரும் அனைவரையும் விடுபடாமல் கணக்கெடுத்து அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும், வியாபாரத்திற்கு அத்தாட்சியாக வியாபாரச் சான்று வழங்க வேண்டும், தெரு வியாபார சட்டப்படி குழுக்கள் அமைத்து தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் நியமித்து அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும், தெரு வியாபார சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வாடகையாக ஆண்டு கட்டணத்தை சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தஞ்சை மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தெருவியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். சங்க மாநில தலைவர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, மின்வாரிய சங்க. மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், பண்ணை சங்க மாநிலத் துணைத் தலைவர்திருநாவுக்கரசு, நூர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் சங்கமாநில தலைவர் சாமிக்கண்ணு , கட்டுமான சங்க துணை தலைவர் செல்வம், சங்க மாவட்ட குழ உறுப்பினர் கல்யாணி, திலகர் திடல் மார்க்கெட் சங்க செயலாளர் மணிகண்டன், வியாபார சங்க நிர்வாகிகள் பாலமுருகன், அயூப்கான், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா நன்றி கூறினார்.

    Next Story
    ×