search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓவியர் நலச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா
    X

    ஓவியர் நலச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

    • ஓவியர் நலச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது
    • மாவட்ட தலைவர் தலைமை வகித்தார்

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ்நாடு ஓவியர் தொழிலாளர் நல மேம்பாட்டு சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட ஓவியர்கள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார், கௌரவ ஆலோசகர் கணபதி, அண்ணாமலை, கௌரவத் தலைவர் மணிமாறன், ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட தலைவர் கலையரசன் வரவேற்று பேசினார், மாவட்ட அமைப்புச் செயலாளர் அபூர்வா, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணாரஞ்சித், மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் தேவேந்திரன், மணி, அந்தோணிராஜ், மாவட்ட நல வாரிய பொறுப்பாளர் அசோக்பால்ராஜ், நாகை மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்ட பொருளாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் நாஜிலா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்பு உரையாற்றினார், நிகழ்ச்சி முடிவில் மாவட்ட பொருளாளர் அருள் செல்வன் நன்றி கூறினார்.

    Next Story
    ×