என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
தஞ்சை மாவட்ட வாக்குச்சாவடிகளில் நாளை சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
- 50 சதவீதத்தினருக்கு மேல் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
- 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் ஆதார் எண் இணைப்பு பணியில் பொதுமக்களின் வசதிக்காக மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த சிறப்பு முகாம்களில் 2,01,830 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண் போன்ற விவரங்களை படிவம் 66-ல் பூர்த்தி செய்து வாக்கு சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.
8 சட்டமன்ற தொகுதிக ளில் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினருக்கு மேல் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
இந்தப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் விடுபட்ட வாக்கா ள ர்களின் வசதிக்காக நாளை ( ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் மீண்டும் நடைபெற உள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 5 பி வலங்க இயலாத வாக்காளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட ( voters helpline ) செயலியை பதிவிறக்கம் செய்தும், ( voters portal ) என்ற இணையதளத்தின் மூலமும் அவர்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.