search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home"

    • வீட்டிலேயே செய்யக்கூடிய இலகுவான பயிற்சியாக யோகாசனம் உள்ளது.
    • அவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் தில்லை நகர் செயின்ட் மேரிஸ் நர்சரி பிரைமரி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

    தாளாளர் லாரன்ஸ், நிர்வாக அலுவலர் டோனி ஆகியோர் தலைமை தாங்கினர். லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் அக்ரோ சிட்டி சார்பாக ஜெசி அரிமா தூதர் டாக்டர்.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏகம் அறக்கட்டளை இன்பதுரை , தஞ்சை நகர மனவளக்கலை மன்ற அறக்கட்டளை குழுவினர் ஆகியோர் இணைந்து யோகா பயிற்சியை வழங்கினர்.

    அப்பொழுது யோகா கற்று கொண்டால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய இலகுவான பயிற்சியாக யோகாசனம் உள்ளது .

    வியர்த்து கொட்டுதல், மனநிலையில் திடீர் மாற்றம், கோபம், எரிச்சல், உடல் சூடாகுதல் போன்ற பிரச்னைகளை தடுப்பதற்கும் சரிசெய்வ தற்கும் யோகா நல்லது .

    ரத்த ஓட்டம் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று எடுத்துக் கூறி ஒவ்வொரு ஆசனங்க ளையும் செய்து காட்டி மாணவர்கள் பின்பற்ற யோகா பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர்.

    முன்னதாக நிகழ்ச்சியில் சோழ மண்டல நாயகன் ஜெசி.அரிமா தூதர் டாக்டர் பிரனேஷ் இன்பென்ட்ராஜ் யோகா பயிற்சி செய்யும் மாணவ- மாணவிகளுக்கு துண்டு, பேனா வழங்கினார்.

    அவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.

    • புன்னம் சத்திரம் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது
    • ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உப்புப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), கூலிதொழிலாளி. இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டை ஒட்டியுள்ள அறுசுனை என்ற இடத்தில் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். அப்போது மின் கசிவு காரணமாக வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    ஆனால் முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் வைத்திருந்த பாத்திரங்கள், துணிகள், உணவுப் பொருட்கள் மற்றும் ஒரு மொபட் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான்.
    • பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.

    பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

    பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

    நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சைக்கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும்.

    அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருப்பதால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல் வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது.

    இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும்.

    தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

    வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது.

    பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.

    வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்....!!!

    • வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படும்.
    • எந்த மூலையில் குப்பையை வைக்கக்கூடாது என்று தெரிந்துக்கொள்வோம்.

    வீட்டைக்கூட்டி குப்பையை வீட்டில் இருக்கும் மூலையில் ஒதுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆம். அப்படி செய்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் என நம்புகின்றார்கள். ஆனாலும் அதை நம் காதில் எடுத்துக்கொள்வதில்லை. வீட்டைக்கூட்டி மூலையில் தான் வைப்போம்.

    வீட்டில் குப்பையை வைத்தால் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடங்கள் ஏற்படும்.

    அதுபோலவே வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படுமாம். அது எந்த மூலை என்று முதலில் தெரிந்துக்கொள்வோம்.

    நாம் வீடு கட்டும் போதே வாஸ்து பார்த்து கட்டுவது தான் வழக்கம். வீட்டில் இருக்கும் படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கதவு என்பவைகளை வாஸ்து பார்த்து தான் கட்டுவோம்.

    அவ்வாறு கட்டினால் தான் வீட்டில் நன்மைகள் ஏற்படும். தென்கிழக்கு மூலையை தான் பொதுவாக அக்னி மூலை என்று கூறுவோம்.

    தென்கிழக்கு திசையில் தான் பொதுவாகவே சமையலறை அமைப்பார்கள். சமையலறை இருக்கும் இடங்களில் குளியலறை இருக்க கூடாது. அதாவது நீரை பயன்படுத்தி எதுவும் செய்ய கூடாது.

    அதுபோலவே தென்கிழக்கு மூலையில் குப்பைகளையும் ஒதுக்க கூடாது. அவ்வாறு செய்யதால் வீட்டில் சம்பாதிக்கும் பணம் நீடிக்காது.

    பணக்கஷ்டம், தொழிலில் கஷ்டம் மற்றும் குடும்பத்தில் பிரச்சினை என்பவை ஏற்படும். ஆகவே வீட்டில் இருக்கும் தென்கிழக்கு மூலையில் குப்பைகளை ஒதுக்கி வைக்க கூடாது என்பதை மறக்கக்கூடாது.

    • பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும்.
    • ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    வருமானத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்வதால் சேமிப்பு அதிகரிக்கும். பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும். பெண்கள் மளிகைபொருட்கள் வாங்குகையில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    மளிகைப்பொருட்களை சிறுக சிறுக வாங்காமல் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது.

    ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு முன்பு பட்டியல் தயார் செய்வது அவசியமானது.

    சமையல் அறைக்குள் சென்று என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை கவனித்த பின்பு பட்டியல் போடலாம்.

    முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால் இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவை குறைத்து கொள்ளலாம்.

    அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்கு தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிகொண்டு மற்றவற்றை குறைத்து கொள்வது சிறந்தது.

    பலசரக்கு அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்காமல் முதலில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்னரே மற்றவற்றை வாங்க வேண்டும். இது பணம் விரயமாகாமல் தடுக்க உதவும்.

    பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப்பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.

    மளிகை பொருட்களளுக்கான பட்ஜெட் போடும் போது காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும்.

    ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடி என்ற வார்த்தையை பார்த்து மயங்காமல் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள், பழங்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும். பணமும், மிச்சமாகும்.

    காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்காமல் என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    மளிகைப்பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

    உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப்பட்டியல் தயார் செய்யலாம்.

    இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    • மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேட்டூர்:

    ேசலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்பு மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளை போய் இருந்தது. இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள்.

    • பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.
    • எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது.

    மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசாத காரணத்தால் பல உறவுகள் பிரிவுகளை சந்திக்கின்றன. மற்றவர்கள் தங்களை நிராகரித்து விடுவார்களோ என்ற பயத்தாலும், தயக்கத் தாலுமே பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.

    எந்த உறவிலும் கருத்து பரிமாற்றம் அவசியமான ஒன்று. இதன் மூலம் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். சரியான நேரத்தில் வார்த்தைகள் மூலம் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உறவுகளுக்கு வழிவகுக்கும். உறவுகளுக்குள் கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில காரணங்கள் இங்கே:

    ஒருவருடன் மனம் திறந்து பேசுவது மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது மூலமாக அவருடைய ஒழுக்கம், மதிப்பு, விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் அந்த நபருடனான உறவை மேலும் இணக்கமாக்கலாம். கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்வதால், தவறான புரிதல்களைத் தவிர்க்க முடியும். எனவே உங்கள் மனதில் தோன்றும் நியாயமான எண்ணங்களை வெளிப்படையாக சொல்லுங்கள்.

    ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை மற்றவர் உணராமல், வருத்தப்படும் படி நடந்து கொள்ளலாம். வெளிப்படையான கருத்து பரிமாற்றத்தால், இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான, நேர்மறையான மற்றும் திருப்திகரமான உறவை உருவாக்க முடியும். எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது. குறுஞ்செய்தி மூலம் விவாதிப்பதையும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போது பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

    சரியான நேரத்தைக் கண்டறிந்து பேசுவது முக்கியமானது. அன்பு, பாராட்டு மற்றும் மகிழ்ச்சி போன்ற நேர்மறை உணர்வுகளை அனைவரும் விரும்புவார்கள். எந்த உறவிலும் இத்தகைய உணர்வுகளை வெளிப்படையாக பகிர்தல் முக்கியமானது. அவ்வாறு இல்லாமல் உங்கள் மனதில் இருப்பதை மற்றவர்கள் அவர்களாகவே புரிந்துகொள்வார்கள் என்று சொல்லாமல் இருப்பது கூடாது. குறிப்பாக கணவன்-மனைவி உறவில் இது போன்ற உணர்வுகளை துணையுடன் பகிர்ந்துகொள்வது உறவை மேலும் வலுப்படுத்தும்.

    அன்பையும், விசுவாசத்தையும் அதிகரிக்கும். இந்த வகையான உணர்வுகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்மறை உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறையான உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது, உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கும். பிரச்சினைகளை சேர்ந்து எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.

    • உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கருணை இல்லம் பெயர் பலகையை திறந்து வைத்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
    • இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கினர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை டி.வி.பட்டிணம் யூனியன் ஆபீஸ் அருகில் ஸ்ரீ வள்ளலார் ஜி.டி.கருணை இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.

    கருணை இல்லத்தின் நிறுவனரும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவருமான தனலட்சுமி முன்னிலையில், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டஅ.தி.மு.க.செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கருணை இல்லம் பெயர் பலகையை திறந்து வைத்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் கருணை இல்லம் நிறுவனர்தனலட்சுமி ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதயகுமார், சசி ஆகியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  

    மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற  தொகுதியில் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி  நடைபெற்றது. 

    இதில்  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றும்,  பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும்  குடும்ப அட்டைகளை வழங்கினார். 

    இதில்   மேற்கு  ஒன்றியசெயலாளர் சுபமதியரசன், வடக்கு ஒன்றியக்  செயலாளர்  தமிழ்மாறன் மற்றும்  கிராம நிர்வாக அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள்,   பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
    வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். இதற்கு முக்கியமான காரணம் சமையல் அறையை வடிவமைப்பதில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான்.
    30 வயதைக் கடந்த பெண்கள் பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி, மற்ற பாகங்களுக்கும் பரவும். இதற்கு முக்கியமான காரணம் சமையல் அறையை வடிவமைப்பதில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்க்கலாம்.

    பல வீடுகளில் சமையல் அறை மிகவும் சிறியதாக இருக்கும். இத்தகைய சமையலறை அமைப்பு, உணவுப் பொருட்கள் கீழே தவறி விழுவது, சூடான பாத்திரங்களில் கைகளை சுட்டுக் கொள்வது போன்ற விபத்துகள் ஏற்பட காரணமாகிறது. எனவே சமையல் அறையை போதிய இட வசதியோடு அமைப்பது நல்லது.

    கிருமி நாசினியான சூரிய ஒளி, சமையல் அறையில் நன்றாக படும்படி ஜன்னல்களை அமைக்க வேண்டும். சமையல் அறையை வண்ணங்கள் நிறைந்ததாக அமைத்துக் கொள்ளுங்கள். இதனால் அங்கு சமைப்பவர்களின் சிந்தனை மேம்படும். இதற்காக பார்வையை ஈர்க்கும் அழகான இயற்கைக் காட்சி நிறைந்த படங்களை ஒட்டலாம்.

    சமையல் அறையில் அமைக்கப்படும் ‘சிங்க்’, பாத்திரங்களைப் போட்டு சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் இடம் என்பதால் அகலமான, ஆழம் குறைந்த, பராமரிக்க எளிதாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். மின்சாதனங்களை இணைப்பதற்கான வசதிகளை சமையல் அறையில் திட்டமிட்டு ஏற்படுத்த வேண்டும். பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ் அவன் போன்ற சாதனங்களுக்கு தனியாக சுவிட்ச் அமைப்பது அவற்றின் பயன்பாட்டை எளிதாக்கும்.

    சமையல் அறையில் போதுமான எண்ணிக்கையில் அலமாரிகள் இருப்பது அவசியம். சமையலறை ‘சிங்க்’ பகுதியில் இருந்து வெளிப்புறம் செல்லும் குழாயை கொசு வலை கொண்டு மூடுவதன் மூலம் எலி, கரப்பான் பூச்சி போன்றவை கிச்சனில் நுழைவதை தடுக்க முடியும்.

    சமையலறை வடிவமைப்பில் தரை பகுதிக்கு அடர் நிறங்களில் டைல்ஸ், மாடுலர் கிச்சனுக்கு வெளிர் நிறங்களில் மைக்கா அமைத்தால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். சமையலறை அமைப்பில் சிங்க், அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை சுலபமாக அணுகி பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். சமையல் மேடையின் உயரம், நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
    பரமத்தி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே  உள்ள மாவுரெட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). விவசாயி. இவரது பாட்டி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார். 

    இந்நிலையில் அந்த கூரை வீட்டுக்குள் 6 அடி நிளமுள்ள சாரைப்பாம்பு சென்றுள்ளது.  இதனால் மூதாட்டி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை விரட்டினார்கள். ஆனால் பாம்பு அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வரவில்லை. 

    இதுகுறித்து பிரபாகரன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலை–மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று வீட்டுக்குள் இருந்த 6அடி நீளமுள்ள சாரைப்பாம்பை குச்சியால் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டு அருகாமையில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
    எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது.
    வீட்டின் அனைத்து அறைகளையும் பராமரித்து, அவற்றில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை, ஸ்டோர் ரூமில் குவித்து வைத்து விடுவோம். அவசரத் தேவையின்போது, அந்த அறையில் நமக்குத் தேவையான ஒரு பொருளைத் தேடி எடுப்பதற்கு ஒரு நாள் ஆகிவிடும். ஸ்டோர் ரூமை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்ப்போம்.

    முதலில் ஸ்டோர் ரூமின் அளவை கவனிக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். இரண்டாவது அந்த அறையில் போதுமான அளவு வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லது அறையின் இரண்டு புறமும் மின்விளக்குகள் பொருத்துவது சிறந்தது.

    எப்போதும் ஸ்டோர் ரூமில் வைக்கும் பொருட்களை, அதன் வகை மற்றும் பயனுக்கு ஏற்ப, தனித்தனி அட்டைப்பெட்டிகளில் அல்லது பைகளில் பிரித்து வைப்பது சிறந்தது. மேலும், அந்த பைகள் அல்லது அட்டைப்பெட்டியின் மீது உள்ளிருக்கும் பொருட்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை குறிப்பிடுவது நல்லது. இது அவசர நேரத்தில் நாம் தேடும் பொருளை எளிதாக எடுக்க உதவும்.

    ஸ்டோர் ரூமில் பொருட்களை பக்கவாட்டில் அடுக்குவதை விட, நேர்கோடாக அடுக்குவது சிறந்தது. இது இட வசதியை ஏற்படுத்துவதுடன் பொருட்களை வகைப்படுத்தவும் எளிதாக இருக்கும். ஸ்டோர் ரூமில் ஜன்னல் அல்லது 'எக்சாஸ்ட் பேன்' கட்டாயம் இருக்க வேண்டும்.

    அப்போதுதான் அறையினுள் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் நிலவும். இது அறையில் இருக்கும் தூசு வாசனை மற்றும் பழைய பொருட்களின் வாசனையை குறைக்கும். வாரம் ஒரு முறை ஸ்டோர் ரூமை சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் பூச்சிகள், ஒட்டடை மற்றும் தூசுகளிடம் இருந்து பொருளையும், அறையையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஸ்டோர் ரூமில் ஏர் பிரஷ்னர் அல்லது ரூம் பிரஷ்னரை தினமும் பயன்படுத்துவது நல்லது.

    இதனால், தூசு, பழைய பொருள் வாசனையால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது தடுக்க முடியும். மாதம் ஒரு முறை ஸ்டோர் ரூமில் உள்ள பொருட்களை எடுத்துப் பார்க்கவும். அப்போதுதான் நமக்குத் தேவையில்லாத பொருட்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

    மேலும், நாம் ஸ்டோர் ரூமில் என்னென்ன பொருட்கள் வைத்துள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். தனியாக ஸ்டோர் ரூம் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பரண் அல்லது ஸ்லாப்களில் தேவையில்லாத பொருட்களை வைத்திருப்பார்கள். அவர்களும் இதே பராமரிப்பு முறையை பின்பற்றலாம்.
    ×