search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.டி.கருணை இல்லம்"

    • உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கருணை இல்லம் பெயர் பலகையை திறந்து வைத்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
    • இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கினர்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை டி.வி.பட்டிணம் யூனியன் ஆபீஸ் அருகில் ஸ்ரீ வள்ளலார் ஜி.டி.கருணை இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.

    கருணை இல்லத்தின் நிறுவனரும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவருமான தனலட்சுமி முன்னிலையில், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டஅ.தி.மு.க.செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கருணை இல்லம் பெயர் பலகையை திறந்து வைத்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் கருணை இல்லம் நிறுவனர்தனலட்சுமி ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதயகுமார், சசி ஆகியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  

    ×