search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமிப்பு"

    • உங்களுடைய முதலீட்டுக்கான பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும்.
    • நிதியை பெருக்கும் வழிகளில் பங்குச்சந்தைக்கு பெரும்பங்கு உண்டு.

    தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை அவசியமாக பின்பற்ற வேண்டிய பொருளாதார நிலைகளில் சிக்கனமும், சேமிப்பும் முக்கியமானவை. அதிலும் சிறுதொழில் செய்யும் பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில நிதி சார்ந்த ஆலோசனைகள் இங்கே...

    சிறு தொகையைக்கூட வீணாக்காமல் சேமித்து வைப்பது, எதிர்காலத்தில் உண்டாகும் அவசர தேவைகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும். ஆகையால் பெரிய அளவு சேமிப்பை உருவாக்க உதவும். ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தை பெண் தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

    அடிக்கடி நிதி நெருக்கடியை சந்திக்கும் பட்சத்தில், முதலில் உங்களுடைய முதலீட்டுக்கான பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும். உங்களுடைய வருமானத்தில் அடுத்தக்கட்ட முதலீட்டுக்கு தேவையான பணத்தை தவிர, மீதி இருக்கும் தொகையை சேமிப்பில் செலுத்துவது நிதி நெருக்கடியை சிரமம் இல்லாமல் கையாள உதவும்.

    தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில், உங்களுக்கான வரைமுறைகளை திட்டமிட்டு அதன்படி செயல்படுவது முக்கியமானது. உங்களுடைய லாபம் பெருகாமல் இருக்கும்போது, முதலீட்டின் அளவை எந்த காரணத்துக்காகவும் அதிகரிக்கக் கூடாது. இது பணம் விரயமாவதை தடுப்பதோடு, எதிர்காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை தவிர்ப்பதற்கும் உதவும்.

    நிதியை பெருக்கும் வழிகளில் பங்குச்சந்தைக்கு பெரும்பங்கு உண்டு, பங்குச்சந்தை பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்யலாம். அதற்கான வல்லுனரின் ஆலோசனையின்படி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். வங்கி, பங்குச்சந்தை என எதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தாலும், நீண்டகால முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. இது எதிர்காலத்தில் நிதி பற்றாக்குறை இல்லாமல் பயணிக்க உதவும்.

    பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல், அதை பெருக்குவதும் முக்கியமானது. அதிக தொகை கொண்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாதவர்கள், உங்களுடன் சேர்ந்து வளர்ந்து வரும் நம்பிக்கையானவர்களின் தொழிலுக்கு முதலீடு செய்யும் பங்குதாரராக செயல்படலாம். இது உங்களுக்கு மற்றொரு முறையில் வருமானம் ஈட்டுவதற்கு வழிவகுப்பதோடு, உங்கள் தொழிலில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும் உதவும்.

    சேமிப்பை போலவே சிக்கனமும் பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும். தொழில் சார்ந்த கடன்கள் அதிகரிக்க நேர்ந்தால், முடிந்தவரை குறைந்த வட்டி விகிதம் இருக்கும் கடன் திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இது கடனை அடைப்பதற்காக சேமிப்பு பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க உதவும். நீங்கள் செய்யும் தொழிலில் எப்போது வேண்டுமானாலும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு பணத்தை எடுத்து சமாளிப்பது. உங்களுடைய எதிர்கால திட்டங்களை பாதிப்பதோடு. தொழிலில் நஷ்டத்தையும் ஏற்படுத்தலாம்.

    • பாலிசிதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.
    • சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவின் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக த மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். விழாவில் அஞ்சல் துறையால் முழுமையாக பயன்பெறும் இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் கடந்த மாதத்தில் 26,126 சேமிப்பு கணக்குகளும், 8899 பேருக்கு ஆதார் சேவையும், 454 ஜிஏஜி பாலிசிகளும், 4576 ஐபிபிபி கணக்குகளும், 326 பேருக்கு மிண்ணனு உயிர் வாழ் சான்றிதழும், 5400 பேருக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆதார் மூலம் பண பரிவர்த்தனையும், ஆயுள் காப்பீட்டில் 2961 பாலிசிதாரர்கள் மூலம் புதிய பாலிசிக்கான பிரிமீயம் தொகை ரூ.1 கோடியே 34 லட்சத்து 55 ஆயிரத்து 552 -ம் , 2412 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தூய்மை இயக்கம் 3.0 அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்கபட்டனர். முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும்.
    • ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    வருமானத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்வதால் சேமிப்பு அதிகரிக்கும். பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும். பெண்கள் மளிகைபொருட்கள் வாங்குகையில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    மளிகைப்பொருட்களை சிறுக சிறுக வாங்காமல் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது.

    ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு முன்பு பட்டியல் தயார் செய்வது அவசியமானது.

    சமையல் அறைக்குள் சென்று என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை கவனித்த பின்பு பட்டியல் போடலாம்.

    முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால் இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவை குறைத்து கொள்ளலாம்.

    அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்கு தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிகொண்டு மற்றவற்றை குறைத்து கொள்வது சிறந்தது.

    பலசரக்கு அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்காமல் முதலில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்னரே மற்றவற்றை வாங்க வேண்டும். இது பணம் விரயமாகாமல் தடுக்க உதவும்.

    பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப்பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.

    மளிகை பொருட்களளுக்கான பட்ஜெட் போடும் போது காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும்.

    ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடி என்ற வார்த்தையை பார்த்து மயங்காமல் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள், பழங்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும். பணமும், மிச்சமாகும்.

    காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்காமல் என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    மளிகைப்பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

    உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப்பட்டியல் தயார் செய்யலாம்.

    இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    • குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்.

    குடும்பத்துக்காக பட்ஜெட் போடும்போது மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம். இந்த நிதியை குழந்தைகளின் பங்களிப்புடன் உருவாக்கும்போது, சேமிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கான சில வழிகள்:

    சேமிப்புக் கணக்கு தொடங்குங்கள்:

    குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர்களின் தினசரி தேவையை விட, நீண்ட காலத் தேவையை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது. இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியிலோ, தபால் நிலையத்திலோ தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

    ஊக்கத்தொகை வழங்குங்கள்:

    நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது, அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம். இந்த நிதியைக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருதச் செய்வது அவசியம். குடும்ப பட்ஜெட் போடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்பிக்க முடியும்.

    பணம் சம்பாதிக்கும் வழிகள்:

    குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும், அதை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுப்பது நல்லது. சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு சாமான்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வது, பள்ளிப் படிப்புடன், பகுதி நேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இவற்றால், எதிர்பாராத பணத்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

    பண இலக்குகள்:

    குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும். குழந்தைகளுக்குப் பண சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு உருவாகும்.

    ×