search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் ஆய்வு
    X

    சேமிப்பு கிடங்கில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்.

    திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் ஆய்வு

    • தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது.
    • அப்போது அங்கு தார்பாய்களை விலக்கி நெல் மூட்டைகளை அமைச்சர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    வல்லம் :

    தஞ்சை அருகே உள்ள மொன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்காண நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அங்கு திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே மொன்னையம்பட்டியில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு மற்றும் உடுமலைப்பேட்டை சேமிப்பு கிடங்குகளில் போதிய பராமரிப்பு இல்லா ததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் இன்றுகாலை மொன்னையம்பட்டியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு தார்பாய்களை விலக்கி நெல் மூட்டைகளை அமைச்சர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லின் ஈரப்பதத்தி னையும் சோதனை செய்தனர்.

    பின்னர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகளில் இருந்து நெல் மாதிரிகள் எடுத்து ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தோம். அதில் 14 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. நெல் மூட்டைகள் மழையில் நனையவில்லை.. அதே போல் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சாக்கு, சணல் கையிருப்பு உள்ளது. விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் நெல் தேக்கம் அடையாமல் கொள்முதல் செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.3லட்சம்மெட்ரிக் டன்நெல்சேமிக்கும் வகையில் செமி குடோன் கட்டவும், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன் 13இ டங்களில் அரவை ஆலைகள் திறக்கவும் அனுமதி வழங்க ப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கட்டிய நெல் சேமிப்பு குடோனுக்கு சிமெண்ட்ரோடு, மின்சார வசதி இல்லாமல் முறையாக பராமரிப்பு செய்யாமல் எடப்பாடி பழனிசாமி எங்களை குற்றம்சாட்டு வதற்கு நாங்கள்பொருப்பல்ல என்று கூறினார்.

    அப்போது தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, தஞ்சை தாசில்தார் மணிகண்டன், தஞ்சை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×