search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gift"

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் வேணுகோபாலு முன்னிலை வகித்தார் .
    • அறங்காவலர்கள் முத்துக்குமார் ,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் பிரின்ஸ்பால் முரளிதரன் நன்றி கூறினார் .

    தாராபுரம்:

    தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு முகாமை தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக்கில் நடத்தினர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் வேணுகோபாலு முன்னிலை வகித்தார் .கல்லூரி விரிவுரையாளர் ராஜேஷ் கண்ணா வரவேற்றார். சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தகவல் உரிமை சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்தும், காலக்கெடு,மேல்முறையீடு போன்றவற்றை விரிவாக தாராபுரம் சப்-ஜட்ஜ் தர்ம பிரபு எடுத்துக்கூறி பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மாஜிஸ்திரேட் பாபு மோட்டார் வாகன சட்டம் குறித்து பேசியதுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்க ப்படும் என்பதால் முறையாக லைசென்ஸ் பெற்ற பிறகு ஓட்ட வேண்டும் என்று பேசினார்.

    தாராபுரம் தீயணைப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்று தீயணைப்புகுழுவினர் மூலம் செயல் விளக்கம் அளித்தார். கல்லூரி செயலாளர் விஷ்ணு செந்தூரன் ,அறங்காவலர்கள் முத்துக்குமார் ,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் பிரின்ஸ்பால் முரளிதரன் நன்றி கூறினார் .

    • பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
    • ரூ.1 லட்சத்திற்கு மேல் பாலிசி பிரிமியம் செலுத்தி திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் உத்தரவின் பேரில் சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு முகாம் சீர்காழி தலைமை அஞ்சலத அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தனியார் தொலைகாட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சீர்காழியை சேர்ந்த சகோதரிகள் அருணா மற்றும் அகிலா ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்தனர்.

    அவர்களுக்கு பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் சிறப்பம்ச ங்களை அஞ்சல் ஊழியர்கள் விளக்க உரையாற்றினர்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் தேவையையும்,முக்கிய அம்சங்களையும் அருணா மற்றும் அகிலா இருவரும் எடுத்துரைத்தனர்.

    எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அன்று மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக பாலிசி பிரிமியம் செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு மயிலாடுதுறை கோட்ட கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் அனைத்து பொதுமக்களும் சேர்ந்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இப்போட்டிகள் 2 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
    • ரூ.1000 வீதம் 10 பரிசு வரை ஒவ்வொரு பிரிவிற்கும் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விளையாட்டு துறை சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெருந்தூர ஓட்டப் போட்டி ஆண்டுதொறும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 7-ந் தேதி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் 2 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. முதல் பிரிவில் 17 வயது முதல் 25 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி அரசு பணியாளர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் களுக்கும், 25 வயதிற்கு மேல் அனைத்து அரசு அலுவலர்கள், பொதுபிரிவி னர்கள், விளையாட்டு ஆர்வ லர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் கலந்துகொள்ளலாம்.

    மேலும் இப்போட்டி களில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள் தங்களுடைய ஆதார் அட்டை நகலை கண்டிப்பாக கொண்டு வந்து பதிவு செய்து வேண்டும். இப்போட்டியில் பங்கேற்ப வர்கள் தங்கள் பதிவினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கம், மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் இன்று முதல் நேரடியாக பதிவு மேற்க்கொண்டு கலந்து கொள்ளலாம். போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று இடங்களுக்கு ரூ.5000, 3000, 2000, எனவும் ரூ.1000 வீதம் பத்து பரிசு வரை ஒவ்வொரு பிரிவிற்கும் சான்றிதழ்களுடன் வழங்கப்படும். எனவே மேற்கண்ட போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவ லர்கள், பொது பிரிவி னர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறவும். இவ்வாறு கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
    • காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதியுடன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் சுமோட்டோ உள்ளிட்ட தனியார் உணவு நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன.

    கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தையும் உடனடியாக எண்ணி அதில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

    ரொக்கப்பணமாக ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830ம், தங்கம் 1419 கிராமும், வெள்ளி 18,185 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366-ம் கிடைத்துள்ளன. இது தவிர பட்டு, பரிவட்டம், நவதானியங்கள், வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.

    காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பே உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் 2 நாட்களில் மாற்றியாக வேண்டும் என்பதால் அங்குள்ள உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமக் கோவில்கள் மற்றும் சமுதாயத்துக்கு பாத்தியப்படட குலதெய்வக் கோவில்களிலும் உண்டியல்கள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    • நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
    • வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    மும்பை:

    கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

    கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

    அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

    • இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • நேற்று மழையால் நிறுத்தப்பட்ட இந்தப் போட்டி தொடர்ந்து இன்று நடக்கிறது. ராகுலும், கோலியும் தொடர்ந்து ஆடுவார்கள்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்த போது மழையால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

    விராட்கோலி 8 ரன்னுட னும், கே.எல்.ராகுல் 17 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். சுப்மன்கில் 52 பந்தில் 58 ரன்னும் (10 பவுண்டரி), கேப்டன் ரோகித் சர்மா 49 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    மழையால் நிறுத்தப்பட்ட இந்தப் போட்டி தொடர்ந்து இன்று நடக்கிறது. ராகுலும், கோலியும் தொடர்ந்து ஆடுவார்கள்.

    மழையால் போட்டி பாதிக்கப்பட்ட போது இந்திய வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ராவை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி வாழ்த்தினார். பும்ராவுக்கு கடந்த 4-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    இதையொட்டி பும்ரா அருகே சென்று அப்ரிடி அவரிடம் பிறந்த குழந்தைக்கு பரிசு ஒன்றை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் கைக் குலுக்கி கொண்டனர்.

    இந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    • பாரதியார் நினைவுநாள் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவிகள் பரிசுகள் வென்றனர்.
    • இவர்களை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் பாராட்டினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் 102-வது பாரதியார் நினைவு நாள் கலை போட்டிகள் நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லா மியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

    மனப்பாட போட்டியில் சம்சுன் நிஹாஸா, பாத்திமா சனா, மாறு வேடப் போட்டியில் சித்தி தஸ்ரிபா, தாருன் நிஹா, கட்டுரைப் போட்டியில் சம்சுன் ஃபசிஹா, ஆமினா ருஷ்தா, பேச்சுப்போட்டியில் நஸாஹா, பஸ்ஹா ஆகியோர் பரிசுகள் பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் பாராட்டினர்.

    • ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் பரிசு
    • இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி

    மலேசியாவில் தனது அன்பு மனைவிக்கு ஒரு தொழிலதிபர் பொது இடத்தில் வழங்கியிருக்கும் பரிசு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

    அந்த வீடியோவில் காணப்படுவது:-

    அந்த தொழிலதிபர் மலேசியா நாட்டின் பெடாலிங் ஜெயா பகுதியில் 128 ஸன்வே சாலையில், ஸன்வே பல்கலைகழகம் அருகில் காஃபி ஷாப் நடத்தி வருகிறார். அவர் தனது மனைவியை ஒரு சிகப்பு நிற துணியால் மூடப்பட்ட ஒரு காரை நோக்கி அழைத்து செல்கிறார்.

    அந்த கார் முழுவதும் சிகப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காரின் பிராண்ட் அந்த துணியில் தெரிகிறது. இருவரும் அந்த காரை நெருங்கும்போது அந்த தொழிலதிபர், காரிலிருந்து அந்த துணியை மெதுவாக விலக்குகிறார்.

    அதில் ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் தெரிகிறது. அதன்விலை சுமார் ரூ. 3.68 கோடிகளாகும் (Singapore Dollar 351,800).

    இக்காட்சிகளை பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் படம் பிடித்தனர். இந்த காட்சிகளுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்துக்கள் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

    "எனக்காக இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி. உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என அவர் மென்மையாக மனைவியிடம் தெரிவித்ததாக ஒரு சமூக வலைதள பயனாளி தெரிவித்தார்.

    சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரும் தொழிலதிபரான அவர்கள் இருவரின் ஒற்றுமையை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி கருத்து தெரிவிக்கின்ற அதே வேளையில், அவரது பகட்டான செயலை விமர்சித்தும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த கடை இருக்கும் முழு தெருவும் போக்குவரத்து தடையால் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.
    • ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் ஒரு பவுன் தங்க செயின் கீழே கிடந்ததுள்ளது.

    அதை அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள செந்தில் என்பவர் எடுத்து வர்த்தக சங்கம் மூலம் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பின், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகை பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்த முனியப்பன் உடையது என்பது தெரியவந்தது.

    பின்னர், ஆவணங்களை சமர்ப்பித்து நகையை பெற்றுக்கொண்ட முனியப்பன், நகையை மீட்ட செந்தில்ன் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.

    செந்தில் அந்த பணத்தை வாங்க மறுத்து பின், அதை வாங்கி தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    செந்திலின் நேர்மையை வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் பொதுமக்கள் வெகுவாய் பாராட்டினர்.

    • விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
    • முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பன்னாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

    தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை வில்லவன் கோதை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.

    கலை இலக்கிய, பண்பாட்டு பயிற்றுநர் தென்னடார் அம்பிகாபதி சிறப்புரையாற்றினார்.

    இதில் ஆசிரியர் ரமேஷ் குமார், தர்மதுரை, யூடஸ் சுகிலா, வீரமணி, சித்ரா, பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஜூட்ஸ் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டன
    • 4-ம்வகுப்பு மாணவி யாக்காவுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    அரவேணு,

    கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் 2023-24ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. முன்னாள் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளர் நஞ்சன் , பொருளாளர் கமலசீரலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஜூட்ஸ் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டன நெருப்பு வளையத்தை வேகமாக சுற்றி சாதனை படைத்த ஒரசோலை பகுதியை சேர்ந்த 4-ம்வகுப்பு மாணவி யாக்காவுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, ரோட்டரி ஆளுநர் சுரேஷ் பாபு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், துணை ஆளுநர் முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி நல்லசிவம், முன்னாள் தலைவர்கள் தேவராஜ், ரவிக்குமார், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தாசிம்பீவி மகளிர் கல்லுாரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
    • சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம், கிரியேட் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்புத் துறை, இயற்கை வேளாண் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு திருவிழா கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில் நடைபெற்றது, கல்லூரி ஊட்டச்சத்து துறை தலைவர் முத்துமாரி ஈஸ்வரி வரவேற்றார்.

    நஞ்சில்லா இயற்கை உணவு பற்றியும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கமாக பாரம்பரிய பண்பாட்டு உணவில் உள்ள மருத்துவ குணங்கள், ஊட்டச் சத்துக்கள் மற்றும்சமைக்கும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டி கல்லூரி மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப் பட்டது. அதில் கேழ்வரகு மிக்ஸர், கேழ்வரகு கூழ், வரகு டோங்கா, உளுந்து களி போன்ற வித விதமான பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து அசத்தினர். சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்புல்லாணி ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சித் திட்டம் சார்பில் சிறு குறு தானியங்களில் திண்பண்ட சத்துப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டது.

    கிரியேட் தொண்டு நிறுவன தலைவர் துரைசிங்கம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை டாக்டர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நாராயணன், திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் கலா, கீழக்கரை நுகர்வோர் நலச் சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், பாக்கர் அலி, இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கிரியேட் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா நன்றி கூறினார். ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத் கான், துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    ×