search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சிறப்பு முகாம்
    X

    அஞ்சலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சிறப்பு முகாம் நடந்தது.

    சீர்காழியில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சிறப்பு முகாம்

    • பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
    • ரூ.1 லட்சத்திற்கு மேல் பாலிசி பிரிமியம் செலுத்தி திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் உத்தரவின் பேரில் சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு முகாம் சீர்காழி தலைமை அஞ்சலத அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தனியார் தொலைகாட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சீர்காழியை சேர்ந்த சகோதரிகள் அருணா மற்றும் அகிலா ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்தனர்.

    அவர்களுக்கு பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் சிறப்பம்ச ங்களை அஞ்சல் ஊழியர்கள் விளக்க உரையாற்றினர்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் தேவையையும்,முக்கிய அம்சங்களையும் அருணா மற்றும் அகிலா இருவரும் எடுத்துரைத்தனர்.

    எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அன்று மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக பாலிசி பிரிமியம் செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு மயிலாடுதுறை கோட்ட கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் அனைத்து பொதுமக்களும் சேர்ந்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×