search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "redemption"

    • தண்டவாளத்தை சீரமைக்கும் பணி இரவு- பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • டீசல் என்ஜின் ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரசை மீட்டு நெல்லை கொண்டு வரப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் பெரும் பாதிப்பு அடைந்தது.

    கடந்த 17-ந்தேதி திருச்செந்தூரில் இருந்து 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்றது. கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் ரெயில் நிலையத்தை சுற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் மூலமும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலமும் 3 நாட்களுக்கு பின்னர் பயணிகள் மீட்கப்பட்டனர்.

    தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்து உள்ளது.

    இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 16 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தண்ட வாளத்தை சீரமைக்கும் பணி இரவு- பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள செந்தூர் எக்ஸ்பிரசை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதற்காக நெல்லையில் இருந்து டீசல் என்ஜின் ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரசை மீட்டு நெல்லை கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வழியாக நாசரேத் செல்லும் பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


    செந்தூர் எக்ஸ்பிரஸ் வருகிற 5-ந்தேதி வரை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை ரெயில் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் 5-ந்தேதிக்குள் ஸ்ரீவைகுண்டம்- நாசரேத் பகுதிகளையும் சீரமைக்க தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    அது முடிவடைந்ததும் 6-ந்தேதி முதல் வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரையில் இருந்து வந்த ரெயில்வே என்ஜினீயர் கூறியதாவது:-

    ரெயில்வே தண்டவாள பணிகள் சீரமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக இரவு- பகலாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை- செய்துங்க நல்லூர் இடையே ஓரிரு நாட்களில் தண்டவாளத்தை சீரமைத்த நிலையில் மற்ற இடங்களில் தண்டவாளங்கள் மட்டுமின்றி சாலை இணைப்புகளும் பாதிக்கப்பட்டது. இதனால் சீரமைப்பு பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டோம். இதனை கொண்டு செல்ல ரெயில்வே அதிகாரிகள் அங்குள்ள சாலைகளை சீரமைத்தனர்.

    எனினும் ஆழ்வார்திரு நகரி மற்றும் நாசரேத் ரெயில் நிலையங்களுக்கு இடையே 120 மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பல நாட்களாக அந்த இடங்களுக்கு செல்வது எங்களுக்கு கடினமாக இருந்தது.

    அந்த பகுதி வழியாக கனரக வாகனங்களில் சீரமைப்பு பொருட்கள் கொண்டு செல்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    எனினும் தற்போது அங்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதிக்குள் இந்த பணி கள் முடிவடைந்து விடும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.
    • ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் ஒரு பவுன் தங்க செயின் கீழே கிடந்ததுள்ளது.

    அதை அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள செந்தில் என்பவர் எடுத்து வர்த்தக சங்கம் மூலம் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பின், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகை பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்த முனியப்பன் உடையது என்பது தெரியவந்தது.

    பின்னர், ஆவணங்களை சமர்ப்பித்து நகையை பெற்றுக்கொண்ட முனியப்பன், நகையை மீட்ட செந்தில்ன் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.

    செந்தில் அந்த பணத்தை வாங்க மறுத்து பின், அதை வாங்கி தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    செந்திலின் நேர்மையை வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் பொதுமக்கள் வெகுவாய் பாராட்டினர்.

    • வேலுச்சாமியை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • காப்பாற்ற முயன்ற செந்தில் தண்ணீரில் மூழ்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில் (வயது 50 ) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி ( 45). இவர் நேற்று மாலை சாத்தனூரில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் வேலுச்சாமி அடித்துச் செல்லப்பட்டார். சிறிது தூரத்தில் தண்ணீரில் தத்தளித்து காப்பாற்றுங்கள் .. காப்பாற்றுங்கள் ... என கூக்குரலிட்டார்.

    அப்போது கரையில் நின்று கொண்டிருந்த செந்தில் உள்பட பொதுமக்கள் சிலர் ஆற்றில் குதித்து வேலுச்சாமியை காப்பாற்ற முயன்றனர். இதில் வேலுச்சாமியை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முயன்ற செந்தில் தண்ணீரில் மூழ்கினார்.

    இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் மருவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து செந்திலை தேடி வந்தனர் . இரவு வெகுநேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை சாத்தனார் பகுதி பொதுமக்கள் ஆற்றில் தண்ணீர் அளவை குறைத்தால் தான் செந்திலை மீட்க முடியும் என கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஆற்றில் தண்ணீர் அளவை குறைத்தனர் .

    இந்த சூழ்நிலையில்

    திருவையாறு அருகே வடுகக்குடி பகுதியில் செந்தில் உடல் பிணமாக கரை ஒதுங்கியது.

    இதைத்தொடர்ந்து மருவூர் போலீசார் செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்றில் தத்தளித்தவரை காப்பாற்ற சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தகரை கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் காப்புக்காடு வனப்பகுதி உள்ளது
    • இந்த வனப்பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க பெண்மணி காப்புகாட்டு வனப்பகுதியின் மையத்தில் பிணமாக கிடந்தார்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தகரை கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் காப்புக்காடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சுமார் 57 வயது மதிக்கத்தக்க பெண்மணி காப்புகாட்டு வனப்பகுதியின் மையத்தில் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அளித்த தகவலின்படி சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில், வனப்பகுதியில் இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி பச்சையம்மாள் (வயது 57) என தெரியவந்தது.

    இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் கடந்த 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் இவருடைய மகன் முருகன் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் உள்ளதும் சின்ன சேலம் போலீசாருக்கு தெரிந்தது. மேலும், இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன வேதனை அடைந்த தங்கம் பெரிய கோவில் அருகே உள்ள புது ஆற்றில் திடீரென இறங்கினார்.
    • அப்போது மேலே சென்ற ஒரு கயிறை பிடித்துக் கொண்டு தவித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜி பட்டியை சேர்ந்தவர் தங்கம்( வயது 60) . இவரை இன்று இவரது மகன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த தங்கம் பெரிய கோவில் அருகே உள்ள புது ஆற்றில் திடீரென இறங்கினார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது மேலே சென்ற ஒரு கயிறை பிடித்துக் கொண்டு தவித்தார். வெளியே வர முடியாமல் தவித்தத பெரிய கோவில் வியாபாரிகள் நல சங்க தலைவர் ஜெயக்குமார் பார்த்தார். உடனே அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் தீயணைப்பு துறை அதிகாரி பொய்யாமொழி, விஜய் , பாபு , சத்யராஜ், பாலசுப்பிரமணியம் , அண்ணாதுரை மற்றும் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆற்றுக்குள் குதித்து மூதாட்டி தங்கத்தை பத்திரமாக மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உடனடியாக மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    திண்டுக்கல்லில் தாயுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான கல்லூரி மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் மகள் வாழைசிவந்தி (வயது19). தந்தை இறந்து விட்டதால் தாய் ஈஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் வாழைசிவந்தி அடிக்கடி கோபித்துக் கொண்டு வெளியே சென்று விடுவார். சம்பவத்தன்றும் தாயுடன் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த வாழைசிவந்தி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழைசிவந்தியை தேடி வந்தனர்.

    இன்று காலை ஆர்.எம். காலனி 12-வது கிராஸ் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று விசாரித்தபோது அந்த இளம்பெண் மாயமான வாழைசிவந்தி என தெரிய வந்தது.

    உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செவ்வந்தி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொன்று கிணற்றில் வீசி சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×