சாலையில் தவறவிட்ட நகையை மீட்டு போலீசில் ஒப்படைப்பு

நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.
மீட்கப்பட்ட நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் ஒரு பவுன் தங்க செயின் கீழே கிடந்ததுள்ளது.

அதை அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள செந்தில் என்பவர் எடுத்து வர்த்தக சங்கம் மூலம் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகை பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்த முனியப்பன் உடையது என்பது தெரியவந்தது.

பின்னர், ஆவணங்களை சமர்ப்பித்து நகையை பெற்றுக்கொண்ட முனியப்பன், நகையை மீட்ட செந்தில்ன் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.

செந்தில் அந்த பணத்தை வாங்க மறுத்து பின், அதை வாங்கி தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

செந்திலின் நேர்மையை வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் பொதுமக்கள் வெகுவாய் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com