search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்வலர்கள்"

    • இப்போட்டிகள் 2 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
    • ரூ.1000 வீதம் 10 பரிசு வரை ஒவ்வொரு பிரிவிற்கும் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விளையாட்டு துறை சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெருந்தூர ஓட்டப் போட்டி ஆண்டுதொறும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 7-ந் தேதி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் 2 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. முதல் பிரிவில் 17 வயது முதல் 25 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி அரசு பணியாளர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் களுக்கும், 25 வயதிற்கு மேல் அனைத்து அரசு அலுவலர்கள், பொதுபிரிவி னர்கள், விளையாட்டு ஆர்வ லர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் கலந்துகொள்ளலாம்.

    மேலும் இப்போட்டி களில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள் தங்களுடைய ஆதார் அட்டை நகலை கண்டிப்பாக கொண்டு வந்து பதிவு செய்து வேண்டும். இப்போட்டியில் பங்கேற்ப வர்கள் தங்கள் பதிவினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கம், மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் இன்று முதல் நேரடியாக பதிவு மேற்க்கொண்டு கலந்து கொள்ளலாம். போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று இடங்களுக்கு ரூ.5000, 3000, 2000, எனவும் ரூ.1000 வீதம் பத்து பரிசு வரை ஒவ்வொரு பிரிவிற்கும் சான்றிதழ்களுடன் வழங்கப்படும். எனவே மேற்கண்ட போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவ லர்கள், பொது பிரிவி னர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறவும். இவ்வாறு கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×