search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "final"

    • ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்காக நாங்கள் கடந்த காலங்களைவிட தற்போது மிகவும் சிறப்பாக தயாராகி உள்ளோம்.
    • குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதால் இறுதிப் போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். இறுதிப்போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீபன் பிளம்பிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்காக நாங்கள் கடந்த காலங்களைவிட தற்போது மிகவும் சிறப்பாக தயாராகி உள்ளோம். குஜராத் அணியை எதிர்கொள்ள நாங்கள் எல்லா வகையிலும் தயார் நிலையில் இருக் கிறோம்.

    சுப்மன் கில் குஜராத் அணியின் பலமாக இருக்கிறார். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது விக்கெட்டை முடிந்த வரை விரைவாக கைப்பற்ற முயற்சிப்போம். அதற்கு தேவையான திட்டங்களும் எங்களிடம் உள்ளது.

    சுப்மன் கில் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்திவிட்டால் குஜராத் அணிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்க முடியும். குஜராத் வீரர்களை நெருக்கடிக்குள் வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய முயற்சிப்போம். குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதால் இறுதிப் போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்.

    சி.எஸ்.கே. அணியின் வெற்றித் தோல்வி விகிதம் சுமார் 50 சதவீதமாக இருக்கிறது. இறுதிப் போட்டியின் வெற்றி எங்களுக்கு 50 சதவீதமாக உள்ளது. சென்னையில் நடந்த முதலாவது தகுதிச் சுற்றில் நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம்.

    ஒரு அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வெல்வது என்பது எளிதல்ல. இதனால் நாங்கள் குஜராத்தை வீழ்த்த முழு திறமையையும் வெளிபடுத்துவோம்.

    இவ்வாறு ஸ்டீபன் பிளம்பிங் கூறியுள்ளார்.

    • விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை முதல் முறையாக தகுதி.
    • இறுதிப் போட்டியில் விளையாட கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை தகுதி பெற்றார்.

    லண்டன்:

    லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    முதல் அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை டட்யானா மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதி சுற்றுக்கு எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானைச் சேர்ந்த எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதன் மூலம் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்குக்குள் நுழைந்த முதல் கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். நாளை நடைபெறம்விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜபீரை, எலினா எதிர்கொள்ள உள்ளார்.

    மொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிசின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி கோப்பையை கைப்பற்றினார். #MonteCarlo #Fognini
    மான்ட்கார்லோ:

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் போக்னினியும், செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சும் மோதினர்.

    தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடிய போக்னினி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கோப்பையை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. #MonteCarlo #Fognini
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் புரோ கைப்பந்து லீக் போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ் மும்பை அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProVolleyball
    சென்னை:

    முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த முதலாவது அரையிறுதிப்போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி (மும்பை) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-12, 15-9, 16-14 என்ற நேர்செட்டில் மும்பை அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட கோழிக்கோடு அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.

    இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது அரையிறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. கொச்சி அணி லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. அதற்கு சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #ProVolleyball
    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. #AFCAsianCup #Qatar #UAE
    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று நடந்த அரைஇறுதியில் கத்தார் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அந்த அணியில் போலெம் கோகி (22-வது நிமிடம்), அல்மோஸ் அலி (37-வது நிமிடம்), ஹசன் அலி ஹைடோஸ் (80-வது நிமிடம்), ஹமித் இஸ்மாயில் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.



    முன்னதாக கத்தார் அணி கோல் அடித்த போது, ஆத்திரமடைந்த உள்ளூர் ரசிகர்களில் சிலர் மைதானத்திற்குள் செருப்புகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு முறை தண்ணீர் பாட்டில்களை எறிந்தனர். இதனால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. கத்தாருக்கு எதிராக ரசிகர்கள் அவ்வப்போது கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. வருகிற 1-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் கத்தார் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. #AFCAsianCup #Qatar #UAE 
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.



    ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம்  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறினார். #SainaNehwal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவின் ஹே பிங்ஜியாவோவை எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 18-21, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #SainaNehwal
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #NationalVolleyball
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் கேரள அணி 25-18, 25-9, 25-9 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தையும், ரெயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மராட்டியத்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ஆண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை விரட்டியது. மற்றொரு அரையிறுதியில் தமிழக அணி 25-27, 25-14, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழக அணியில் நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டி, வைஷ்ணவ், ஷெல்டன் மோசஸ் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது.

    இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பெண்கள் இறுதிசுற்றில் ரெயில்வே-கேரளா அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NationalVolleyball
    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் கோப்பையை கைப்பற்றியது. #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெற்றது.
     
    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்கள் விரைவில் புள்ளிகளை குவிக்கத் தொடங்கினர். இதனால் முதல் பாதி முடிவில் 16 - 9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் குஜராத் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர்.



    ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியினர் விஸ்வரூபம் எடுத்தனர். அந்த அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக ஆடினார். அவர் 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 

    இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது. #BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
    குவாங்சோவ்:

    ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் கடினமான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீன தைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனால் அரைஇறுதிக்கு முன்னேறுவதற்கு சிந்து கடும் சவால்களை சந்திக்க நேரிடும்.

    இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து, நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை சந்திக்கிறார். இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் சமீர் வர்மா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சமீர் வர்மா, ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டோவை சந்திக்கிறார்.#BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
    உ.பி.யில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். #SyedModiInternational #SameerVerma
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவும் மோதினர்.

    சீன வீரர் அபாரமாக ஆடியதால், 16-21 என்ற கணக்கில் சமீர் வர்மா முதல் செட்டை இழந்தார். ஆனாலும், மனம் தளராத சமீர் வர்மா இரண்டாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சமீர் வர்மா சிறப்பாக ஆடினார். இதனால் அவர் 21 -14 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் கைப்பற்றினார். 

    இறுதியில், 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சீன வீரரை வீழ்த்திய இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

    இது சமீர் பெற்ற மூன்றாவது சாம்பியன் பட்டமாகும். ஏற்கனவே சுவிஸ் ஓப்பன் மற்றும் ஐதராபாத் ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SyedModiInternational #SameerVerma
    உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MaryKom #WorldBoxing #Stalin
    சென்னை:

    உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதேபோல், 57 கிலோ எடைப்பிரிவுக்கான் இறுதிப் போட்டியில் மோதிய இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.



    இந்நிலையில், உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்று இந்திய பெண்களுக்கு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் மேரி கோம் என பதிவிட்டுள்ளார். #MaryKom #WorldBoxing #Stalin
    ×