search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pro kabadi"

    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் கோப்பையை கைப்பற்றியது. #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெற்றது.
     
    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்கள் விரைவில் புள்ளிகளை குவிக்கத் தொடங்கினர். இதனால் முதல் பாதி முடிவில் 16 - 9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் குஜராத் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர்.



    ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியினர் விஸ்வரூபம் எடுத்தனர். அந்த அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக ஆடினார். அவர் 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 

    இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் சுற்றில் உ.பி. அணியை 38 -31 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortunegiants #UpYodha
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    கடந்த 31ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின. இதில், உ.பி. யோதா அணி 45 - 33  என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதனால் உபி யோதா அணி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், உ.பி. யோதா அணி குஜராத் அணியை இன்று எதிர்கொண்டது. முதலில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    ஆனாலும், முதல் பாதியில் குஜராத் அணி 19 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, குஜராத் அணி வீரர்கள் இரண்டாவது பாதியிலும் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு முன்னால் உ.பி. அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், குஜராத் அணி 38 - 31 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    முதல் தகுதிச்சுற்றுபோட்டியில் குஜராத் அணி பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortunegiants #UpYodha 
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றில் டெல்லி அணியை 45 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி உபி யோதா அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #UpYodha #DabangDelhi
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இந்நிலையில், எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின.

    இதில், ஆட்டத்தின் முதலில் இருந்தே உபி யோதா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் 27 - 13 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் உபி யோதா அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 45 - 33  என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.

    இந்த வெற்றி மூலம் உபி யோதா அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதில் உபி யோதா அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. #ProKabaddiLeague #UpYodha #DabangDelhi
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத்தை 41 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடினர். முதலில், குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக ஆடியதால் முதல் பாதியில் 14 - 13 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆனால், இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 41 - 29 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் தோற்ற குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortuneGiants #BengaluruBulls
    புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் 1 சுற்றில் மும்பை அணியை 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது உ.பி. யோதா அணி. #ProKabbadi #UMumba #UpYodha
    கொச்சி:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இதில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    இதேபோல், ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், கொச்சியில் இன்று இரவு 8 மணிக்கு எலிமினேட்டர் 1 ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த மும்பையும், ‘பி’ பிரிவில் 3-வது இடம் பிடித்த உ.பி. யோதா அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே உ.பி. யோதா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து யு மும்பா அணியும் விளையாடியது. ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதியில் 18 - 15 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி முன்னிலை பெற்றது. 

    இறுதியில், உ.பி. யோதா அணி 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதில் வெற்றி பெற்ற உ.பி. அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. தோற்ற மும்பை அணி போட்டியில் இருந்து வெளியேறியது. #ProKabbadi #UMumba #UpYodha
    புரோ கபடி லீக் போட்டியில் மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 27 -24 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தியது. #ProKabaddi #BengalWarriors #TamilThalaivas
    கொல்கத்தா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 15 - 15  என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணியினர் அபாரமாக ஆடினர். தமிழ் தலைவாஸ் அணியினரும் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணியை 27 -24 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பி பிரிவில் பெங்கால் வாரியர்ஸ் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. #ProKabaddi #BengalWarriors #TamilThalaivas
    புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. #ProKabaddi #JaipurPinkPanthers #DabangDelhi
    சண்டிகர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 17 - 17  என சமனிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் டெல்லி அணியினர் சளைக்காமல் ஆடினாலும், ஜெய்ப்பூர் அணியினர் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்.

    இறுதியில், டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 37 - 37 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் ஏ பிரிவில் தபாங் டெல்லி அணி 3வது இடத்தில் உள்ளது. #ProKabaddi #JaipurPinkPanthers #DabangDelhi
    புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது. #ProKabaddi #PatnaPirates #BengaluruBulls
    சண்டிகர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு அணி 12 - 11 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்களூரு அணியினர் அதிரடியாக விளையாடினர். இதனால் ஒரு கட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை விட கூடுதலாக புள்ளிகள் பெற்றிருந்தனர். இறுதிக்கட்டத்தில் பாட்னா அணியினர் துடிப்பாக விளையாடி 40 - 40 என சமனிலைக்கு கொண்டு வந்தனர். 

    பரபரப்பான ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது. #ProKabaddi #PatnaPirates #BengaluruBulls
    புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை 36 - 23 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி. #ProKabaddi #JaipurPinkPanthers #PuneriPaltan
    சண்டிகர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜெய்ப்பூர் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி 21 - 9 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் ஜெய்ப்பூர் அணியினர் சிறப்பாக விளையாடினர். புனே அணி வீரர்களால் அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை.

    இறுதியில், ஜெய்ப்பூர் அணி 36 - 23 என்ற கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். #ProKabaddi #JaipurPinkPanthers #PuneriPaltan
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா அணியை 41 -36 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி. #ProKabaddi #TeluguTitans #PatnaPirates
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பாட்னா பைரேஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பாட்னா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 26 - 15 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் அபாரமாக விளையாடினர். ஆனாலும் பாட்னா அணி வீரர்கள் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து விளையாடினர்.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 - 36 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த 8வது வெற்றி ஆகும். இதன்மூலம் பி பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது.

    இந்த தொடரில் மூன்றாவது முறையாக பாட்னா பைரேட்ஸ் அணியை தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.  #ProKabaddi #TeluguTitans #PatnaPirates
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 47 - 37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ்அணி. #ProKabaddi #GujaratFortunegiants #HaryanaSteelers
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குஜராத் அணியினர் வீறு கொண்டு ஆடினர். இதனால் அரியானா அணி வீரர்களின் போராட்டம் வீணானது.

    இறுதியில், அரியானா அணியை 47 - 37 என்ற கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணியின் 14வது வெற்றி ஆகும். இதன்மூலம் ஏ பிரிவில் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது. #ProKabaddi #GujaratFortunegiants #HaryanaSteelers
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்றிரவு நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை 44 - 19 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வீழ்த்தியது மும்பை அணி. #ProKabaddi #UMumba #DabangDelhi
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பை அணியும் தபாங் டெல்லி அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியின் முடிவில் 19 - 11 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக விளையாடினர். மும்பை அணி வீரர்கள் ஆட்டத்தின் முன் தபாங் டெல்லி அணியினர் போராட்டம் எடுபடவில்லை.

    இறுதியில், தபாங் டெல்லி அணியை 44 - 19 என்ற கணக்கில் மும்பை அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #ProKabaddi #UMumba #DabangDelhi
    ×