search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "championship"

    • 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
    • மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி இம்மாதம் 15- 21ம் தேதி வரை சென்னை லீலா பேலஸில் நடைபெறவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

     

    • ஆதித்யா பள்ளி குழும சேர்மனும், குராஷ் தற்காப்புக்கலை சங்க தலை வருமான அசோக்ஆனந்தன் தலைமை வகித்தார்.
    • ஹானஸ்ட் நைட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் பாலமுரளி நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில குராஷ் தற்காப்புக்கலை சங்கம் சார்பில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான குராஷ் தற்காப்புக்கலை சாம் பியன்ஷிப் போட்டிகள் பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்தது.

    பள்ளியின் தலைமை உடல்கல்வி ஆசிரியர் அமீது படேல் வரவேற்றார். ஆதித்யா பள்ளி குழும சேர்மனும், குராஷ் தற்காப்புக்கலை சங்க தலை வருமான அசோக்ஆனந்தன் தலைமை வகித்தார்.

    குராஷ் தற்காப்புக்கலை சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆரோவில் இசையம்பலம் பள்ளி முதல்வர் சஞ்சீவ் ரங்க நாதன், புதுவை பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் இளைய நம்பி, புதுவை பல்கலைக்கழக முன்னாள் சீனியர் ஆடிட்டர் குண சேகரன், ஜூடோ சங்க முன்னாள் தலைவர் பிரதீப்குமார் ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் புதுவை மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த குராஷ் தற்காப்புக்கலை பயின்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு குராஷ் சங்க தலைவர் அசோக்ஆனந்தன் மற்றும் சங்க நிர்வாகிகள் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். ஹானஸ்ட் நைட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் பாலமுரளி நன்றி கூறினார்.

    • காரைக்குடியில் டி 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் கோப்பைக்கான 9-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. பரபரப்பான இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணியும் லத்தீப் மெமோரியல் காரைக்குடி அணியும் மோதின. இதில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக டி.சி.பி.எல் அணியின் குணசீலன், பந்து வீச்சாளராக டி.சி.பி.எல் அணியின் ராமச்சந்திரன்ஆல்ரவுண்டராக லத்தீப் அணி வீரர் சுப்பிரமணியன், விக்கெட் கீப்பராக லத்தீப் அணி வீரர் மரகத கார்த்திக், சிறந்த இளம் வீரராக நைட்ஸ் அணி சபரிகிரிசன், சிறந்த பயிற்சியாளர் விருதை டி.சி.பி.எல் அணி வரதராஜனும் தட்டிச் சென்றனர். தமிழ்நாடு ரவுண்ட்ராபின் போட்டிக்கு தேர்வான வீராங்கனை பிரியதர்ஷினிக்கு விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளிராஜன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சதீஷ்குமார், தொழிலதிபர்கள் செந்தில்குமார், புரூட்ஷாப் பாலு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழஙகினர். அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ரவிக்குமார், திருச்செல்வம், சங்கீர்த்தனன், பழனி மற்றும் விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.

    • ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை.
    • இந்திய அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது.

    8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    இதன்மூலம் ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

    ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை புரிந்துள்ளது.

    இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது'குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "2023 மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற எங்கள் இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். இந்திய பெண்கள் அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது.

    அவர்கள் நம் தேசத்தை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். தங்களின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • தஞ்சாவூரை சேர்ந்த வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மாதேஸ், பிரவினா கலந்து கொண்டனர். போட்டியில் அவர்கள் வென்று சாதனை படைத்தனர்.

    தஞ்சாவூர்:

    ஆந்திரா மாநிலத்தில் 3-வது மினி தென்னிந்திய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு அணி மாணவர்கள் பிரிவில் முதலிடமும், பெண்கள் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர்.

    இதில் மாணவர் அணியில் தஞ்சாவூரை சேர்ந்த வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மாதேஸ், பிரவினா கலந்து கொண்டனர். போட்டியில் அவர்கள் வென்று சாதனை படைத்தனர்.

    இதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களை வேலம்மாள் பள்ளி முதல்வர் ஜெபஸ்டின் ராபர்ட் கிளைவ் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் கோவிந்தராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடைபெற்றது.
    • சங்கத் துணை செயலாளர் டாக்டர் பாலாஜி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் புதுவை மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடைபெற்றது.

    சங்கத் துணை செயலாளர் டாக்டர் பாலாஜி வரவேற்றார். சங்க பொது செயலாளர் தயாநிதி தேசிய யோகா விளையாட்டு போட்டி பற்றி விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    இதில் நேரு எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு துணைத்தலைவர் மற்றும் சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்தபாலயோகி பவனானி ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவ- மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக மூத்த சங்கத் துணைத் தலைவர் கஜேந்திரன், துணைத் தலைவர் தேவசேனா பவனானி, சங்கப் பொருளாளர் சண்முகம், சங்க உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் லலிதா சண்முகம் கலந்துக் கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தினர்.

    நிகழ்ச்சியில் யோகா நடுவர்கள் கவுரவி க்கப்பட்டனர்.முடிவில் சங்க துணை செயலாளர் சதிஷ் குமார் நன்றி கூறினார்.

    • கலெக்டர் பரிசு வழங்கினார்
    • 108-85 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    கோவை:

    அகில இந்திய அளவிலான 56-வது ஆண்கள் கூடைப்பந்து போட்டி கோவையில் நடந்தது. இதில் இந்திய கடற்படை, ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு உள்பட 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் இந்திய கடற்படை அணியும், ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணியும் மோதின. இதில் இந்திய கடற்படை அணி 108-85 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கடற்படை அணிக்கு சாம்பியன் கோப்பையும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் வழங்கினார். 2-ம் இடம் பெற்ற ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, 

    • மாநில கபடி சேம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு நடைபெற உள்ளது
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் மாநில கபடி சேம்பியன்ஷிப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டி நாளை(10ம்தேதி) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக தலைவர் முகுந்தன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ராஜ்குமார் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், மயிலாடுதுரையில் வரும் 19ம்தேதி முதல் 21ம்தேதி வரை நடைபெறவுள்ள சிறுவர்களுக்கான மாநில அளவிலான கபடி சேம்பியன்ஷிப் கலந்துகொள்வதற்கான அணி வீரர்கள் தேர்வு போட்டி நாளை (10ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

    ஜூனியர் சிறுவர்களின் தகுதி வயதுவரம்பு 20.11.22 அன்று 20 வயதுக்குள் இருக்கவேண்டும், எடை 70 கிலோவிற்கு மிகாமல் இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் ஆதார் கார்டு அல்லது 12 ம்வகுப்பு மார்க்சீட் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளி தடகள வீரருக்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
    • தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது.

    சிவகங்கை

    தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிக்கு மாற்றுத்திறனாளி வீரரான சிவகங்கை மாவட்டம், சிவல்பட்டி கிராமத்தை வினோத்குமார் தகுதி பெற்றுள்ளார்.

    அவருக்கு பாராலிம்பிக் கமிட்டியால் நுழைவு கட்டணம், போக்குவரத்து, உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகளுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியை பாராலிம்பிக் கமிட்டியின் சிவகங்கை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் வழங்கினார்.

    அப்போது சிவகங்கை மாவட்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு செயலாளர் பாபு, துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணி தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. #SeniorNationalVolleyball #Championship #Karnataka
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கேரள அணி 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ரெயில்வே அணியை வீழ்த்தி 11-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் தொடர்ச்சியாக 9 முறை ரெயில்வேயிடம் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 25-20, 25-14, 25-18 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை தோற்கடித்தது.

    ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் செட்டை தமிழக அணி தனதாக்கியது. 2-வது செட்டை தமிழக அணி மயிரிழையில் இழந்தது. அதன் பிறகு தமிழக அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. முடிவில் கர்நாடக அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற செட் கணக்கில் தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரள அணி 25-23, 25-16, 25-19 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை பதம் பார்த்தது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர் தலைமை தாங்கினார். சென்னை ஸ்பார்டன்ஸ் நிறுவன சேர்மன் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். விழாவில் ஜோன்ஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ஜோன்ஸ், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் (விளையாட்டு) வைத்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #SeniorNationalVolleyball #Championship #Karnataka 
    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #NationalVolleyball
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் கேரள அணி 25-18, 25-9, 25-9 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தையும், ரெயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மராட்டியத்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ஆண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை விரட்டியது. மற்றொரு அரையிறுதியில் தமிழக அணி 25-27, 25-14, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழக அணியில் நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டி, வைஷ்ணவ், ஷெல்டன் மோசஸ் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது.

    இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பெண்கள் இறுதிசுற்றில் ரெயில்வே-கேரளா அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NationalVolleyball
    பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. #WomenWorldBoxing #Championship
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது.

    மேரிகோம் (48 கிலோ எடைப்பிரிவு) தலைமையில் களம் காணும் இந்திய அணியில் சரிதா தேவி, பிங்கி ஜங்க்ரா, மனிஷா மான், சோனியா, சிம்ரஜித் கவுர், லவ்லினா போர்கோஹைன், சவீத்தி பூரா, பாக்யபதி கச்சாரி, சீமா பூனியா ஆகியார் இடம் பிடித்துள்ளனர்.

    2016-ம் ஆண்டு உலக போட்டியில் மகுடம் சூடிய இத்தாலியின் அலிசியா மெசியானோ (பெதர் வெயிட் பிரிவு), 81 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவின் நடப்பு சாம்பியன் யாங் ஸியாலி (சீனா), வெள்ளிப்பதக்கம் வென்ற கைய் ஸ்கோட் (ஆஸ்திரேலியா), ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்ற மிரா போட்கோனென் (பின்லாந்து) மற்றும் முன்னணி நட்சத்திரங்களான பியாம்விலாய் லாபியாம் (தாய்லாந்து) அனஸ்டசியா பெலியக்கோவா(ரஷியா), விர்ஜினியா புச்ஸ் (அமெரிக்கா), லின் யு டிங் (சீனதைபே) உள்ளிட்டோரும் இந்த போட்டியில் வரிந்து கட்டுவதால் இந்திய வீராங்கனைகள் கடும் சவால் களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறைந்தது 3 பதக்கங்கள் கிடைக்கும் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் எதிர்பார்க்கிறது.

    5 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம் மீண்டும் சாதிக்க வாய்ப்புள்ளது. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான மேரிகோம், 6-வது முறையாக தங்கப்பதக்கத்தை அறுவடை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘எனது 48 கிலோ எடைப்பிரிவில் 2001-ம் ஆண்டில் இருந்து இன்னும் நிறைய வீராங்கனைகள் விளையாடி வருகிறார்கள். அவர்களை பற்றி நான் நன்கு அறிவேன். அதே சமயம் இளம் வீராங்கனைகள் கடும் போட்டியாளராகவும், சாதுர்யமாகவும், வேகமாகவும் செயல்படுகிறார்கள். எனது அனுபவத்தை பயன்படுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்றார்.

    இந்திய பயிற்சியாளர் ரபெல்லே பெர்கமாஸ்கோ கூறுகையில், ‘கால்பந்தில் மரடோனா எப்படியோ அதே போல் குத்துச்சண்டையில் மேரிகோம். அபாரமான திறமை கொண்டவர். இந்த போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது நெருக்கடியாக இருக்கும். ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றமாட்டார் என்று நம்புகிறேன்’ என்றார்.

    குத்துச்சண்டை திருவிழா தொடங்குவதற்கு முன்பே சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன. டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் வெளிநாட்டு வீராங்கனைகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் முககவசம் அணிந்தபடி வெளியே வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் குத்துச்சண்டை உள்விளையாட்டு அரங்க போட்டி என்பதால் காற்று மாசு தாக்கத்தை ஏற்படுத்தாது.

    செர்பியா நாட்டில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு பிரிந்த கொசோவாவை இந்தியா தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கொசோவாவை சேர்ந்த வீராங்கனை டான்ஜிட்டா சாதிகு மற்றும் இரண்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசு இன்னும் ‘விசா’ வழங்கவில்லை. அதே நேரத்தில் கொசோவாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே ‘விசா’ பிரச்சினையை இந்தியா சரிசெய்யாவிட்டால், எதிர்காலத்தில் பெரிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

    இந்த போட்டிக்கான தொடக்க விழா நேற்றிரவு நடந்தது. இதில் இந்திய அணிக்கு மேரிகோம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
    ×